28 Nov 2017

பள்ளி மாணவ, மாணவிகள் தற்கொலை ஏன்?

அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் அருகே 4 மாணவிகள்
கிணற்றில் குதித்து தற்கொலை
பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியர் கூறியதால் விபரீத முடிவு                                                                                                                                                    – தி இந்து 25-11-2017
திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளி வகுப்பறையில் ப்ளஸ்-2 மாணவர் தற்கொலை
பள்ளி வகுப்பறையில் உள்ள கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
          -மாலை மலர் 14-11-2017
குஜராத் ,அகமதாபாத் அருகில் உள்ள பாப்பு நகர் பூமிபார்க்,
வகுப்பறையில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
          -ttp://tamil.webindia.com
ஹரியானா மாநிலம் குருகிராமில் (குர்காவ்ன்)உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 7 வயது சிறுவன் கொலை வழக்கில் திருப்பம்.
தேர்வை தள்ளி வைக்க சீனியர் மாணவனே கொன்றதாக சிபிஐ அதிர்ச்சித் தகவல்
-தி இந்து 9-11-2017
      தஞ்சையில் கல்லூரி மாணவர் உயிருடன் ஆற்றில் புதைப்பு
       ...செப் 30-ம் தேதி சரவணனை ராஜகோரி மயானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரவணனின் கை, கால்களை கட்டிவைத்து அடித்ததுடன்,வாயை துணியால் அடைத்து, மாட்டுவண்டியில் ஏற்றி கூடலூர் வெண்ணாற்றங்கரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பின்னர் ஆற்றின் நடுவில் குழிதோண்டி சரவணனை உயிரோடு புதைத்துள்ளது தெரிய வந்தது.
 -தி இந்து 14-11-2017
22-11-2017 ,சத்தியபாமா பல்கலைக்கழகத் தேர்வில் காப்பி அடித்து,பிடிபட்ட மாணவி அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை.

     தற்கொலை தனியாகவும் குழுவாகவும்     நடக்கிறது.;
        கிணற்றில்,குழுவாக தற்கொலை      நடைபெறுகிறது;
         பள்ளியில் தூக்குப்போட்டு தற்கொலை.

       இனி கொலைகள் பற்றி
.      தஞ்சையில் 5 மாணவர்கள் சேர்ந்து சக மாணவனை கொன்றுவிட்டனர்
(காரணம் தெரியவில்லை)
      செப்டம்பர் 8-ல், 2-ம்வகுப்பு மாணவனை அதே பள்ளியில் படிக்கும் சீனியர் மாணவர் கொன்றுவிட்டான்..
காரணம் தேர்வை தள்ளி வைப்பதற்காக இந்த பின்நவீனத்துவ (Postmodern) யுக்தியைக் கையாண்டிருக்கிறான்.
ஆக, தற்கொலையும் கொலையும் முக்கிய பாடததிட்டமாக (syllabus) மாணவரிடையே வந்திருக்கிறது.
உளவியலாகச் சொன்னால்,
தனக்குத்தானே துன்புறுத்தி இன்புறுவது (masochism) அல்ல.
பிறரைத் துன்புறுத்தி இன்புறுவதும் (sadism)அல்ல.
மாறாக, மன அலசல் ரீதியில் சொன்னால்,
“ சுயமோகத்தின்  ( narcissism ),கொடுந்துன்ப உணர்வுகளால்  (experiences of excessive unpleasure) உந்தப்பட்டே மாணவர்கள், (மனிதர்கள்) பிற மனிதர்கள் (மாணவர்) மீது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
-Henri Parens, journal of applied psychoanalytic studies vol3, 2001
                மேலும்,சுயமோகத்தின் பயம்,பீதி,மனக்காயம் போன்றவைகளை கையாளத்தெரியாமல்  கொந்தளிப்பு வசப்பட்ட மனம்,பிறரை( others) பலிகடாவாக ஆக்குகிறது;
வேறு சில சமயங்களில் மன / உடல் வேதனைகளை சமாளிக்கத் தெரியாததால்சுய அழிப்பு நடைபெறுகிறது.
கொடுந்துன்பத்தின் உந்தல்கள் கொலைக்கும் தற்கொலைக்கும் காரணிகளாக உள்ளன.
அடிப்படையில் துன்பங்கள் உளவியலாக,உடல் சார்ந்ததாக இருக்கலாம்.அத்துடன் பொதுவெளியில் ,’அவமானம்என்ற மாயப்பிசாசு கூட  தன்னிலையைத் துரத்திவிடக் கூடும். பலிகடாவாகி/பலிகடாவாக ஆக்கிவிடவும் கூடும்.
இதில் மன அலசல் ஆய்வு நடந்தவாறு இருக்கிறது.ஆய்வு, இதரர் மீது மேற்கொள்ளும் குற்றச் செயல்களை குறைப்பதற்கு மன அலசல் இப்படி ஆரம்பிக்கிறது. அதாவது,மனிதர்களிடம் நிலவுகிற, தவிர்க்கப்படக்கூடிய கொடுந்துன்ப உணர்வுகளை (avoidable experiences of excessive  unpleasure ) அடையாளம் கண்டு,அவர்களிடம் நிலவுகிற தற்காதல்பயம், பிறர் மீது தாக்குதல் நடத்துவதற்கான மனப்போக்கை அறிந்து ,அதைக் குறைப்பதற்கான வழிவகைகளை அடையாளம் கண்டு, அவற்றை அவர்கள் ஏற்குமாறு செய்ய முயற்சி மேற்கொள்ளவேண்டும்என்கிறது மன அலசல்.
இப்போது நம் தமிழ்கூறும் நல்லுலகத்தில் இதற்கான வசதியோ,சமூகக் கட்டமைப்போ இல்லை. ஊசிபோடும் வைத்தியமே சித்தத்திற்கும் போதும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.
உருவகமாகச் சொன்னால் , மெட்ரிகுலேசன் கல்வி etc , போன்ற (சமூக) அமைப்பு தன்னைத் தானே கொலையும் செய்கிறது / குற்றமுமிழைக்கிறது.
அதாவது,மாணவர்களின் தனிநபர் தற்கொலை,குழுவாக தற்கொலை,இதரரை,சக மாணவன், ஆசிரியை / ஆசிரியர் கொலை ( நல்லவேளை இன்னும் அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரம் இன்னும் வரவில்லை);
அப்புறம், கல்லூரி என்றால் ஒருதலைக் காதல் கொலை,கைபேசிக்காக கொலை,கைச் செலவுக்காக கொலை,இரு சக்கர ஊர்திகளுக்காக கொலை,கூடவே சாதிக் கொலை.
இப்படி மாணவ உலகத்தின் சில காட்சிகள் / நிகழ்வுகள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
பொதுவாக ,பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்பதாலேயே அதைத் தங்க ஊசியாக (gold pin) நினைத்து, கட்டமைத்து, கையாளுகிறார்கள். இந்தத் தங்க ஊசிப் பெற்றோருக்கு பிற பிள்ளைகள் போல் தங்கள் பிள்ளைகளும் ,சைக்கோசிஸ் / வக்கிரம் / நியூரோசிஸ் என்ற கட்டமைப்பின் மூலமாக ,அதனின் முடுக்கத்தால்தான் (drive) இயங்குகிறார்கள் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை, உணர்த்தப்படவில்லை.இழப்பு ஏற்பட்டால் மற்றொரு கட்டமைப்பான பள்ளி,கல்லூரியை குற்றம் சாட்டுகின்றனர்.இவை இரண்டும் மாசற்றது அல்ல. இருந்தாலும் தங்களின் குழந்தை வளர்ப்பை ஒருமுறை சமூகக் கண்ணோட்டத்துடன் நினைத்துப் பார்க்கவேண்டும்.
பள்ளிகளில் பாடத்திட்டத்தை (syllabus) நடத்திவிட்டு காசை வேண்டிய மட்டும் வசூலித்துவிட்டு,காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கின்றனர் இந்த மெட்ரிக்,சிபிஎஸ்இ போன்ற ஆங்கிலவழிப் பள்ளிகள். தேர்வில் காப்பி அடிப்பது எங்கள் உரிமை என்ற உரிமை முழக்கமோ அல்லது தூக்குக் கயிறோ என்ற கட்டமைப்புதான் உள்ளது. ...பொறுப்பாளிகள் யார்??
பள்ளிகளில் அடிமைப்படுத்துதல்(கழிவறைச் சுத்தம்), துன்புறுத்தல், சித்திரவதை, நிர்வாணப்படுத்துதல்,மாணவர்களுக்கு முடிவெட்டுதல் (டிவி காட்சி)போன்ற நடவடிக்கைகள் தனியன் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் ,அதன் தொடர்ச்சி எக்கச்சக்கமாக போய்விடுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் யார் என்பதை அறிந்துகொள்ள உள்நோக்கிய (அகம்) பார்வையும் ,தேடலும்; அதன்மூலம் தன்னை யார் என்று அறிதலும் ;பள்ளியில் ஒழுங்கும் கட்டுப்பாடும்,தன்னொழுங்கும், சமூகத்திற்குத் தேவை.அதை தண்டனை,அவமானம் என்ற கம்பாக நினைப்பது சுயமோகம் போன்ற புற்றுநோய் மனம்’; அது ஆரோக்கியமல்ல.உன்னை மதிப்பது போல் பிறரை (மாணவ,மாணவியரை) நீ மதி; உன் செயலுக்கு நெறி (ethics) வழிகாட்ட வேண்டும்
அதேபோல்,சமூக அமைப்பு புற்றுநோய் சுயமோகத்திலிருந்து (malignant narcissism) விடுபட்டு, மன ஆரோக்கியத்திற்கு சுய பயிற்சி, சுய முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் உங்கள் பிள்ளைகள். (உங்கள்) ஆசிரியர்கள் சுயமோகத்தை விட்டால்தான் ஆசிரியர்+மாணவர்+பள்ளி = குருகுலம் ஆகும். இல்லாவிட்டால்,துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு வழிவிடுவதாகும்.
க,செ.


2 comments:

  1. Excessive unpleasure is a very fine finding....
    Narcissism is the main cause of many evils....
    Balu

    ReplyDelete
  2. சுயமோகத்தின் பயம்,பீதி,மனக்காயம் போன்றவைகளை கையாளத்தெரியாமல் கொந்தளிப்பு வசப்பட்ட மனம்,பிறரை( others) பலிகடாவாக ஆக்குகிறது;
    வேறு சில சமயங்களில் மன / உடல் வேதனைகளை சமாளிக்கத் தெரியாததால்சுய அழிப்பு நடைபெறுகிறது.

    very true.... need of the hour is how to handle Narcissism & overcome it. we should learn this with the help of psychoanalysts only.

    ReplyDelete