16 Feb 2016

ஆசையின் வர்ணமென்ன ?

நெறி (  Ethics ) பற்றி லெக்கான் இப்படிக் கூறுகிறார் : 
                 மனிதர்களாக உள்ள நாம் , சரியான முறையில் செயல்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் “  என்பதாகும் .

                சமீபத்தில்  ‘ வாட்ஸ் அப் மூலம் மக்களுக்கு முதல்வர் கொடுத்த உறுதிமொழி ;

                 “  வெள்ள துயரத்தில் இருந்து உங்களை விரைவில் மீட்பேன் ‘
                ‘ வாட்ஸ் அப் ‘ மூலம் மக்களுக்கு உறுதி “ .

                 “  ......வெள்ள சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து வருந்துகிறேன் . கவலை வேண்டாம் . இது உங்கள் அரசு . உங்களுக்காக உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன் . விரைவில் இப்பெரும் துன்பத்தில் இருந்து உங்களை மீட்பேன். இது உறுதி .
உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் . எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது . எனக்கென உறவினர் கிடையாது . எனக்கு சுயநலம் அறவே கிடையாது . எனக்கு எல்லாமும் நீங்கள்தான் . என்  இல்லமும் உள்ளமும் தமிழகம்தான் . எத்துயர் வரினும் அதை இக்கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் “ என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார் .               - தி இந்து 15-12-2015 . -http ://tamil.thehindu.com/tamilnadu )                                                                                                                 
                                                                   
      அவர் கூற்றில் உள்ள உண்மைத்தன்மை பற்றி அறிந்துகொள்வது நல்லது .
                எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது , எனக்கென்று உறவினர் கிடையாது.... என்கிறார்.
                லெக்கானியம் ,  ரத்த உறவுகளின் அடிப்படைக் கட்டமைப்புகள் ( elementary structures  of kinship ) உள்ளன ; சொத்து மற்றும் பொருட்களின் பரிமாற்றம் குறித்த கட்டமைப்புகள் என்ற சிலவை உண்டு .
                இந்தக் கட்டமைப்புகளின் விளைவாகத்தான் ஒரு மனிதன் தன்னைத்தானே ஒரு குறியாக ( sign ) அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட பரிமாற்றத்தின் நபராக்கிக் கொள்கிறான் “ என்கிறது.
                முதல்வரின் மேற்கூறிய கூற்று கேள்விக்குறியாகிறது.
                ஒருவேளை இதற்கு அப்பால் இருக்கிறாரோ !
                அவருக்கான சுசான்ஸ் ( jouissance ) உறவுமுறையிலிருந்து அல்ல என்பதும் மேற்கூறியதிலிருந்து தெரிகிறது .
                அதிகாரத்தில் ( முதல்வர் ) இல்லாதபோதும் மக்களுக்கு வரும் துன்பத்தை செல்வி ஜெ. வே சுமக்கிறாரா ?
                மன அலசல் ,  அதிகாரம் பற்றி ஆண் / பெண் இருவருக்குமே ஆசை உண்டு என்கிறது.
                அதிகாரம் : இல்லாமையின்  ( lack ) குறிப்பான் ,
( காயடிக்கப்பட்டுவிடுவோம் ; அதைத் தவிர்க்கவேண்டுமானால் அதிகாரம் வேண்டும்) .
      அதிகாரம் : ஆசையின் குறிப்பான் , மேலதிக முக்கியத்துவமுள்ள குறிப்பான்.
      அதிகாரம்தான் சென்னை பாரிஸ்கார்னர் முதல் கன்னியாகுமரி அய்யன் சிலைவரை லட்சக் கணக்கானோரை மேடம் ஜெ . யின் காலில் விழவைக்கிறது .
      ஏன்  வாட்ஸ் அப்பில் ‘ “ உங்களுக்கு வரும் துன்பங்களை நானே சுமக்கிறேன் என்கிறார்.
       மற்றமை ( மக்களின் ) ஆசையின் ஆசைப்படுபொருளாக இருக்கவேண்டும் என்பது ( ஜெ ) தன்னிலையின் ஆசையாக உள்ளது . இது , மற்றமையால், தான் ஏற்கப்படவேண்டும் , அங்கீகரிக்கப்படவேண்டும் ( recognized ) என்பதற்கான ஆசையைக் குறிப்பிடும்  ” -  Calum Neill.
      ஆக ,  வாட்ஸ் அப்பில் ‘ பேசியது அன்பை , பாசத்தைப் பரிமாற அல்ல . மாறாக , அதிகாரத்திற்கான அங்கீகாரம் பெற மட்டுமல்ல . தன் சுசான்ஸை
( மகிழ்வை ) அதிகாரத்தின் மூலம் அடையவும்தான்.
      இதேமாதிரி மற்றொரு குரலும்  கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாவேன் எனத் தினமும் முகாரி பாடும் .
      லெக்கான் , “ கடமையாளர்கள் , தனிமனிதர்களின் நெறி உணர்வு ( Ethics ) , 
ஒரு தன்னிலையானது , சமூகக்கட்டமைப்பில் நனவிலியாகத்  தேடுகிற   நல்லது  குறித்த  பிரச்சினையை  எழுப்புகின்ற அந்தத்தருணத்தில்  நெறி துவங்குகிறது “ என்கிறார் .
      ……“  இப்போதுதான் தன்னை முன்னிறுத்துகிற ஆசையின் கட்டமைப்பு நெருக்கமாக இணைந்துள்ளது . அதாவது , தகாத உறவுக்கான ஆசையாக ( as a desire of incest ) இருப்பதை அந்தத் தன்னிலை கண்டுபிடிக்கும் என்கிறார் ப்ராய்ட்.
      ஆக , கடமை , அதிகாரம் என்னும் பெயரில் உறைந்துள்ள ஆசையின் வர்ணங்களை ( தகுந்த / தகாத ) ஆராய்ந்து அறிவது நமது கடமையாகிறது.
க.செ
16-2-2016




3 Feb 2016

முன்கை நீண்டால் முழங்கை நீளும்

அதிநவீன புனைவுகளில் புகழ் பெற்ற ஒரு தொகுப்பு முல்லா கதைகள் ஆகும.
பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் கதையை எப்படி அதிநவீனம் என்று கேட்டால் , கதையாடலுடன் ( Narration ) பயணித்து வந்த முல்லா மனம் இன்றும் புதிர்தான்.

உதாரணம் : முல்லாவின் அண்டை வீட்டுக்காரர் முல்லா என்றார் வீட்டிற்கு முன்வந்து . முல்லா என்ன என்றார். துணி காயப் போட வேண்டும் ; உங்கள் கொல்லையில் உள்ள கயிறை கொஞ்சம் இரவல் கொடுங்கள் என்றார் அண்டை வீட்டுக்காரர். 
                முல்லா புன்முறுவலுடன் , அடுத்த வீட்டுக்காரரிடம், “ கயிறை கொடுக்க முடியாது . ஏனென்றால் , நான் அந்தக் கொடியில் ( கயிறில் ) கோதுமை காயப் போட்டிருக்கிறேன் என்றார். 
ஒரு கயிற்றில் கோதுமை காயப்போடுகிறார் முல்லா என்றால் Virtual Reality தானே அது. நவீன தொழில்நுட்பம் தெரிந்தவரின் பொதுப்புத்தி முல்லாவின் கூற்றை மறுத்துவிடும் இல்லையா ? 
                “
ஓய் ! உமக்குத் தர மனம் இல்லை ; அதைச் சொல்வதை விட்டுவிட்டு கோதுமையை துணி காயப்போடும் கயிற்றில் காயப்போடுகிறேன் என்று கதை அளக்கிறீரே ! எனச் சொல்லும் . 
                உண்மைதான். மனம் இல்லை. இப்படிச் சொல்வது ஒரு வகையில் சரிதான். ஏன் மனம் இல்லை? என்று உண்மை அறிய புறப்பட்டால் எங்கு செல்ல வேண்டும் ?
                ஆய்வு தான் / மனம் பற்றிய நவீன ஆய்வுக்குத்தான் செல்ல வேண்டும்.
                கொடியில் கோதுமை காயப்போடும் முல்லா கதையை ஒரு உருவகமாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
       இரண்டு தன்னிலைகள் ; இந்தியா  Vs  பாகிஸ்தான் , இந்தியா  Vs சீனா என்றோ, தமிழகம் VS  கேரளா , கர்நாடகம் ( தண்ணீர் பிரச்சினை ) என்றுகூடப் புரிந்து கொள்ளலாம்.
       இன்னும் சற்று நெருக்கமாக வேண்டுமென்றால் , கருணாநிதி  Vs ஜெ. என்றுகூட வைத்துக் கொள்ளலாம் . இரண்டு தனிநபர்கள், முரண்பட்டவர்கள்...இப்படி.
       மேற்கூறியவர்களின் உறவுகளில் , பிரச்சினைகள் பொதுவாக  Rhetoric - ஆக , அதாவது , என்னாங்க என்றால் நொன்னாங்க என்ற பதில் வரும் வகையில் உள்ளது. உன் ஆட்சியில் லஞ்சம் பெருகிவிட்டது என்று விமர்சித்தால் , உன் ஆட்சியில் இல்லாமலா இருந்தது என்றும்,   அது உலகளாவிய பிரச்சினை என்றும் பதில் வரும் . அடிப்படையில் இவை உறவு பற்றிய பிரச்சினை ஆகும்.
       இந்த உறவுப் பிரச்சினை பற்றி மன அலசல் ஆழ்ந்து சிந்திக்கின்றது . மரபிலிருந்தும் அது கற்றுக்கொள்கிறது ; அதேபோழ்தில் , பாலஸ்தீனம் Vs இஸ்ரேல் போன்ற தீரா இழுபறி பிரச்சினைகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறது. மன அலசலின் இந்தப் போக்கை நமக்கு அணுக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியமான உறவு அமைய ஏதுவாகும் ; இதற்காக லெக்கானின் சில முக்கிய கோட்பாடுகளை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
       மன அலசல் ஆய்வின் குறிக்கோள் அல்லது முடிவானது நமது வாழ்க்கையில் எது real என்பதைக் குறிப்பிடுகிறது . நமது ஆசைகளில் எது நம்மை நம்மிடமிருந்தும் , பிறரிடமிருந்தும் பிரிக்கிறது என்பதை ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.
       மகிழ்வுக் கோட்பாட்டை மையமாகக் கொண்டே வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம் . நமது விருப்பத்திற்கிணங்க ,  நினைப்பிற்கிணங்க நம் ஆற்றல்களை அதில் செலுத்துகிறோம்.
“ முக்கியமான ஒன்று ; மகிழ்வுக் கோட்பாடு நானுணர்வின் மீது ( Ego ) கட்டப்பட்டது . அது நம் விருப்பங்களை , அல்லது தேவைகளை கிட்டத்தட்ட  பகுத்தறிவுக்குட்பட்ட விதத்தில் திருப்திப்படுத்தி ந்ம் வாழ்க்கையை வழிநடத்துகிறது / ஒழுங்குபடுத்துகிறது எனலாம்.
       லெக்கானின் தன்னிலை குறித்த கோட்பாடானது நம்மை நம்மிடமிருந்தும் , பிறரிடமிருந்தும் பிரிக்கின்ற ஒன்றைப் பற்றிய கோட்பாடாகும் ; மையமழிக்கப்பட்ட அல்லது பிளவுபட்ட தன்னிலைகளுக்கிடையில் எவ்வகையான நெறி உறவு ( Ethical bond ) இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது.
       உறவுமுறை மனிதத் தன்னிலையின் மையமாகும் .
       உறவுமுறைகள் மனிதத் தன்னிலைகளின் கட்டமைப்பாகவும் உள்ளன .
       முல்லாவிடம் கயிறு கேட்டு வந்தவரை முல்லா தன்னிலையாக ஏற்கவில்லை. மாறாக , இதரராக ( other ) பார்க்கிறார்.
       இப்போது முல்லாவின் திருகல் மனம் ( perverted ) பற்றி ;
துணி காயப்போடும் கயிற்றில் கோதுமை காயப்போட்டு விட்டதாக கூறும் முல்லா மனம் எற்கனவே   Foreclosed – ஆக  இருந்திருக்கிறது . அதாவது முன்கூட்டியே அந்த அண்டைவீட்டுக்காரரை மறுத்து விட்டிருக்கின்றது ; உறவாக ஏற்காமல் இருந்திருக்கின்றது ; அதனால்தான் அவர் கயிறு கேட்டவுடனேயே  ,  முல்லாவின் நனவிலி , உடனடியாக , வக்கிரமாக உனக்கும் எனக்கும் உறவில்லை  என்னும் அடையாளத்தில் கயிற்றில் கோதுமை காயப்போட்டுவிட்டேன் என்று கூறுகிறார்.   
                இப்போக்கைச் சற்று விரித்துப்பார்த்தால் , காவேரி , பெரியாறு,கிருஷ்ணா போன்ற நதிப் பிரச்சினை பற்றிய உறவும் ; நடுவண் அரசுக்கும்,மாநில அரசுகளுக்குமிடையில் உள்ள உறவும்; மாநிலத்தில் ஆளும் கட்சி  Vs எதிர்கட்சிகள் ; அதிகார வர்க்கத்தின் படிநிலை உறவுகள் ; சாதியத்தில் தலித் Vs  ஆதிக்க சாதிகள் , கருத்துருவத்தை பிறப்பிக்கும் சாதிகள் என்றும் ; ஏகமாக பன்னாட்டு மூலதனத்திற்கும் இந்திய மக்களின் பாடும் சொல்ல முடியாததாக உள்ளது .
       மன அலசல் இதற்கான தீர்வைச் சொல்ல முடியாது .மனம் பற்றிய பிரச்சினை இதில் தலையாய பங்கு வகிப்பதால், பேச்சு வார்த்தைக்கு முன் , இரு கட்சிகளும் , சமாதானக் குழுக்களும் , தங்களை / தம் மனத்தை எந்தெந்த வகையில் தயார்படுத்திக்கொண்டால் , ஒரு ஆரோக்கியமான சூழலைப் படைக்கத் தேவையான  -  உறவுமுறைகளின் நெறி - அவசியத்தை முன்னிறுத்துகிறது  லெனினியம் .
        உறவுமுறை மனிதத் தன்னிலையின் மையமாகும் “
                இவைகள் மனிதத் தன்னிலைகளைக் கட்டமைப்பவையாகவும் உள்ளன .
                அரசியலில் அங்கீகரிப்பின் நோக்கமே அகம் சார்ந்த சீர்குலைவை  / பாதிப்பை 
( self dislocation ) சரிப்படுத்துவதாகும் ; எதன்மூலம் ?
       மேலாண்மைக் கலாச்சாரத்தின் மூலமாக ஒரு குழு மாற்றுக் குழுவினர்  ( பாகிஸ்தான் Vs  இந்தியா ) மீது கொண்டுள்ள தவறான அறிதலை , தவறான பிம்பத்தை புறந்தள்ளி விட- வேண்டும் ( reject ) . அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் புதிய பிரதிநிதித்துவத்திற்காக இதனைச் செய்யவேண்டும் .
      
இது ஒன்றை, ஒரு உறவைப் புரிந்துகொள்ளவும் , புதியவகை உறவைக் கட்டமைக்கவும் நம்மை வலியுறுத்துகிறது .
       1 . பாகிஸ்தான் இந்தியாவை இந்துக்கள் நாடு என்ற பிம்பத்தோடுதான் பார்க்கிறது .
( இந்துத்வா ஒரு சிறிய பகுதி ; முழுமை இந்தியா  என்பது ,எல்லா மதக் குழுக்களும் ஒரு புரிதலுணர்வோடு இந்தியர் என்ற ஐக்கியத்தில்தான் உள்ளது .
       2 . காஷ்மீர் பற்றிய பிரச்சினை , காஷ்மீரிகளுக்கும் இந்திய அரசுக்குமிடையிலானது . பாகிஸ்தான் மூக்கு எல்லைமீறி நீட்டவேண்டியதில்லை . பாகிஸ்தான் Vs இந்தியா எல்லைப் பிரச்சினையைத்  பேசித்தீர்க்க வேண்டுமானால் பாகிஸ்தான் உடனடியாக பயங்கரவாதி -களுக்கான பாசறைகளை மூடவேண்டும் , மூடச்செய்யவேண்டும் .
       இந்தியாவும் , பாகிஸ்தான் Vs  இந்தியா கிரிக்கெட் போட்டிகளுக்கான தடைவிதிப்பை நீக்கி , உறவுக்கான, நல்லுறவுக்கான பச்சைவிளக்கை எரியவிடவேண்டும் .
       மேற்கூறியவைகள் நாடுகளுக்கிடையிலானது . கட்சிகளுக்கிடையில் , கட்சிக் கூட்டணிகளுக்கிடையில் , மேற்கூறிய நெறியை வழிகாட்டியாகக் கொண்டால் , பிரச்சினைகளின் ( பகையின் ) கூர்மை ,காத்திரம் , தீவீரம் குறைந்து ஒரு சுமூகச் சூழலுக்கு வழிவகுக்கும் .
       மனிதத் தன்னிலையின் மையமான உறவுமுறை நெறிகள் , நட்பு , கணவன்  Vs மனைவி உறவு ; தந்தை Vs பிள்ளைகள் உறவுக்குக்கூட கைகொடுக்கும் எனலாம் .
       அரசியலில் , உறவில் , அங்கீகரிப்பின்  ( Recognition ) நோக்கம் அகம் சார்ந்தும் , சீர்குலைவை  / பாதிப்பை ( self dislocation ) சரிப்படுத்தும் நோக்கத்திற்கானது . இதுதான் அதன் மையம்.
       அங்கீகரிப்பு ( Recognition ) என்பது தன்னிலைகளுக்கிடையிலான லட்சிய பரஸ்பர உறவாகும் . இதில் இருவருமே சமமானவர் . அதேநேரத்தில்,அவர்களுக்கான தனித்தன்மையும் உண்டு . இந்த உறவானது தன்னிலைத் தன்மையை  ( subjectivity ) கட்டுவதற்கானது “ என்கிறார் ஆய்வாளர் Stephen Frosh .
 முன்கை நீண்டால் முழங்கை நீளும்
       இப்போது இதரரால்   ( other ) அங்கீகரிக்கப்பட்ட தன்னிலையானது தனித் தன்னிலையாக ( individual ) மாறுகிறது . இப்போது அவர்கள் பாகிஸ்தானியர் ; பயங்கரவாதிகள் இல்லை என்ற மனோபாவம் விடைபெறுகிறது .
       பிறரால் அங்கீகரிக்கப்படும்போது Sense of self  ( சுயம் பற்றிய பிரக்ஞை ) வளர்கிறது . [ ஹைதராபாத் மாணவர் ரோஹித்தின் மரணத்திற்கு இதுவும் ஒரு காரணம் . அதாவது , அவரின் Sense of self  இதரரால் ( other ) அங்கீகரிக்கப்படவில்லை ].
       அங்கீகரிப்பின் நெறி என்பது பிறரை வாழவிடுவதில் உள்ளது என்கிறார் Judith Botler .
                இதற்கெல்லாம் முதலில் நம் அகம் நோக்கிய பயணம் தேவை. ஜூலியா கிறித்துவா இதுபற்றிய மன அலசல் பார்வையைத் தருகிறார் :
     
  நம்மின் நனவிலியானது அடுத்தவரை இதரராக , அந்நியராக , புதிரானவராக , விளக்கமுடியாத , சொல்லமுடியாதவராகவும்  ( real  ) பார்க்கிறது . அதாவது , புதிரானவராகவும் ; நமக்கு நாமே அந்நியர்களாகவும்,பிளவு பட்டவர்களாகவும் உள்ளோம் “
       [ தன்னிலைகளுக்கிடையிலான உறவில் முரண்பட்டவர்களின் பெயரைக் கேட்டவுடன் தீயாய் எரியும் மனத்தைக் கூட பரவலாக மனித உறவில் இனம் காணலாம் . இதுவும்
‘ தீட்டுப் போன்றதே] .
       உறவு அங்கீகரிக்கப்பட்டால்  இரண்டு தன்னிலைகள் தங்களை வெளிப்படுத்தும் போதும் ( expressing and receiving ) மாறி மாறி வெளிப்படுத்தலாம் ; உள்வாங்கலாம் . அத்துடன் , இருவரும் சேர்ந்தும் , தாங்கள் தனித்தனியாக இருப்பதாகவும் யூகித்துக்கொள்ளலாம் .
       தலித் பிரச்சினைகள் எழும்போதும் , கௌரவக் கொலை நடக்கும் போதும் , பிற உறவுப் பிரச்சினைக்குமான உறவுகளில் நெறிக்கோட்பாட்டை முன்னிறுத்துகிறது மனஅலசல் .
       இதற்குப் பின் முல்லாவின் அண்டை வீட்டார் கொடிக் கயிறு வேண்டுமென்று கேட்டால், கோதுமை காயப்போட்டிருக்கிறேன் என்று அப்பட்டமான மனவெறுப்பைக் காட்டமாட்டார் என நம்பலாம் .

க.செ
2-2-2016
               

           



1 Feb 2016

முதலில் நமக்குள் உள்ள சாதியத்தைக் கொல்லுங்கள்

ராகுல் ஹைதராபாத்தில் உண்ணாவிரதம் ( 30-1-2016 ) இருந்தார் .
       இறந்த மாணவர் ரோஹித்தின் பிறந்தநாள் நினைவு கூறப்பட்டது .
                அந்தப் பல்கலைக் கழகத்தில் 4 ஆண்டுகளில் 18 தலித் மாணவர்கள் தற்கொலை என்பது , அப்படி ஒன்றும் அது  அல்பமல்ல.
       அந்தப் பல்கலைக் கழகத்தில் ஏதோ ஒருவகை வாழ்க்கை நடத்தப்பட்டு வந்திருக்கிறது ; வருகிறது . இதில் ஆராய்ச்சி மாணவர்கள் என்பதற்கு பொதுவான அர்த்தமொன்றும் , குறிப்பான (மறைபொருளாகவும் ) அர்த்தமொன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது எனலாம்.
                அதாவது ,  F C  ஆராய்ச்சி மாணவர்கள் என்றும் ,  S C ஆராய்ச்சி மாணவர்கள் என்றும் இருந்து வந்திருக்கிறது எனலாம்.
                பொதுவாக , மேம்போக்கான உறவு தலித்துகளோடும்  ;  மற்றவர்களோடு வேறுவகை உறவும் இருந்துவருகிறது.
                அதாவது , முதல் வகையினருக்கு தலித் உறவில் சுசான்ஸ் ( மகிழ்வு / திருப்தி )
( Jouissance ) இல்லை . அதுபோல் தலித்துகளுக்கு  F C - களுடனான உறவில் சுசான்ஸ் ( மகிழ்வு  / திருப்தி ) கிட்டவில்லை . அதாவது , அவர்களிடையே வித்தியாசமான சுசான்ஸ் முறையே இருந்துவருகிறது.
சுசான்ஸ் அரசியல்
                ஒருவருக்கொருவரின் உறவில் சுசான்ஸ் நிறைவளிக்கவில்லை ( Other’s jouissance is insupportable  ) .  F C - களிடம் தீட்டு ( taboo ) என்ற நனவிலி உள்ளுறைந்துள்ளது ; ஒவ்வொரு கலாச்சார நடத்தையிலும் அதன் சாயலைத் தேடி உண்மையான மாணவர்கள் , மனிதர்கள் , உறவுக்குக் குந்தகம் விளைவிக்கிறது அது.
              S C  மாணவர்களிடம் தாம் இரண்டாம்தர குடிமகன் என்ற கட்டப்பட்ட கலாச்சார ஒடுக்குமுறை நனவிலியாக உறைந்துள்ளது.
             F C  நடவடிக்கைகளை சந்தேகத்துடனே , தாக்குதலுக்கான தயார் மனநிலையிலேயே இருக்கவேண்டிய கட்டாயத்தில் ( obsession ) உள்ளனர்.
                அடிப்படையில் ஒன்றை அனைவருக்கும் நினைவூட்டவேண்டும் . அது மன அலசல் ஆராய்ச்சியாளர் சிசாக் கூறியது :
       “  The ultimate incompatibility is not between mine and other’s Jouissance, but between myself and my own jouissance , which forever remains an ex-timate  intruder  “  – zizek.
                இங்கு ஒரு முட்டுச்சந்தை ( deadlock ) எதிர்கொள்கிறோம். ஒவ்வொருவரின் சுசான்ஸிற்கும் மற்றவரின் பண்பு மீதான முன்னிலைப்படுத்தலே முக்கிய காரணியாக உள்ளது.

                ஆனால் , சாதியம் என்ற பண்பு , எண்ணப்போக்கு , கலாச்சாரம் , தீண்டாமை ஒரு படிநிலை நிறுவனமாக உள்ளது. ஆனால் , ரூபமாக அது இல்லை .

             அது அனைவரது ( சமூகத்தில் ) மனத்திலும் நிரம்பிவழிகிறது . அதைப் பாராளுமன்ற அரசியல் நெய்யூட்டி வளர்க்கிறது.

                சாதி அடையாளமாக , அரசியலாக , தனக்கான இடத்தை , உற்பத்தி உறவில் , கல்விக் கூடத்தில் இடம்பிடித்து , ஜீவித்து , அது ஒவ்வொரு தனியனிடமும் உந்தலாக  ( drive ) , சித்தத்தில் ஆட்சி  செலுத்துகிறது.    இந்தத்  தீட்டை எப்படி மனத்திலிருந்து கலாசாலையும், பாராளுமன்றமும் நீக்கும். 

       திருமணம் , கலாசாலை , உற்பத்தி உறவு போன்ற  Elements  (  கூறுகள்  ) சாதியை மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இது பொறாமைக்கு (  jealousy ) வழி வகுக்கிறது.

       பொறாமை அரசியலுக்கு ஒரு உதாரணமாக ஹிட்லர் கூறியதாகக் கூறும் கூற்று கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது . அது We have to kill the Jew within us . இங்கு பொறாமை நனவிலியாக கொலைவெறிக்கான உந்தலாக உள்ளது.
                புறத்தை ஆய்ந்து  PhD  வாங்குவதோடு அகத்தை ஆய உள்நோக்கி பயணம் தேவை. அதற்கான திட்டம்  (  agenda ) அரசியல்வாதிகளிடமும் , அதிகாரவர்க்கத்திடமும் இல்லையே ! அவர்கள் சாதியத்தை ஆயுதமாக பயன்படுத்தும் வியாபாரிகள்.  
          
                இனியாகும் சமூக மனிதனின் நெறியாகவும்  , சுசான்ஸாகவும் அது  இருக்கும்போதே ;நான் யார்? என்ற உள்முகத் தேடல் இருக்கும்போதே சாதியம் என்ற நனவிலியை உயிரூட்டமில்லாமல் இருக்க வைக்க முடியும் .
க.செ
விநாயகம்
1-2-2016