Showing posts with label வள்ளுவர். Show all posts
Showing posts with label வள்ளுவர். Show all posts

20 Nov 2015

பாரதியின் கோபம், பரந்து கெடும் வள்ளுவன்.

சித்தம் ஒரு கட்டமைப்பு ; மனப்பாதிப்பை  நனவிலி மொழியில் உருவகமாக்கி கலாச்சாரத்திற்கு வித்தாகிறது . இப்படி ஒரு தன்னிலை தன் மனப்பாதிப்பை சமூக விழுமியமாக , இலக்கியமாக்கி விடுகிறது.
                       தனி ஒருவனுக்கு உணவில்லெயெனில்
  ஜெகத்தினை அழித்திடுவோம்              

 இத்தனை கோபம் பாரதிக்கு ஏன்? ஒருவனுக்கு உணவில்லையெனில் ; யார்?, எந்த சாதி , மதம் , என்பதெல்லாம் அவருக்கு பிரச்சினை இல்லை. ஒருவனுக்கு சாப்பிட உணவு கொடுக்க முடியாத ஒரு சமூகத்தை , கலாச்சாரத்தை அழித்துவிடுகிறது அவர் கோபம். அவரின் கோபம் அவர் பசிக்கு அல்ல ; யாரோ ஒருவரின் பசியை இவர் உணர்ந்ததால்  /  கேட்டதால் அவர் மனம் துன்பப்பட்டு விட்டது  /  பாதிப்புக்குள்ளாகி விட்டது ( affect ).
      அந்த பாதிப்பு  /  மனப்பாதிப்பு பாரதியின் - தன்னிலை உருவாக்கத்தில் , ஆசைக்குரிய தனிச்சிறப்பான இடத்திலிருந்து பிரிக்க முடியாதது   என்பது லெக்கானின் கூற்று.
      பாரதியின் ஆசை மனப்பாதிப்பு  தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் என்று மொழிக் கட்டமைப்பாக ( symbolic ) உள்ளது . அவன் கலாச்சாரம் , மன எழுச்சியை ரத்தமும் சதையுமான குறிப்பானாக்குகிறது - ஜெகத்தினை அழித்திடுவோம் - வலியுறுத்துகிறது.
      பாரதிக்கு முந்தியவன் தன் உணர்வை  /  பாதிப்பை மொழியில் இப்படி கற்பனை உலாவாக்கி விடுகிறான்.
      1062.         இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
                        கெடுக வுலகியற்றி யான்  
வள்ளுவன் நம்பும் உலகை இயற்றிவனையே, தன் மனத்திலிருந்து வெளியேற்றுகிறான் -   பரந்து கெடுக .
       மன எழுச்சியானது , மனத்துயரம் , மனப்பாதிப்புகள் , வார்த்தைகளுடன் உறவுடையதாக இருப்பதைவிட கற்பனையானவற்றுடன் மிக நெருக்கமான உறவு கொண்டதாக இருக்கிறது   .  - Lewis A.krishner
      இந்த மனப்பாதிப்பு , மொழியில் கற்பனை உலாவாக வருவது என்பது இலக்கியத்தில் வழமையாக வடிவெடுக்கிறது        .
      ஒரு கவிஞன் இப்படிக் கேட்கிறான் : என்றோ இழந்த ஒன்றின் நினைவை ( lack ) , இல்லாமை  /  வெறுமை உணர்வு உறுத்த , அன்புக்கு ஏங்கி நிறமாறாத பூக்களை த் தேடுகிறான்  - தன் கற்பனை உலகில்.
க.செ
14-11-2015
 உதவிய நூல் : Having a Life- Lewis A.Krishner