சித்தம் ஒரு கட்டமைப்பு ; மனப்பாதிப்பை நனவிலி மொழியில் உருவகமாக்கி கலாச்சாரத்திற்கு
வித்தாகிறது . இப்படி ஒரு தன்னிலை தன் மனப்பாதிப்பை
சமூக விழுமியமாக , இலக்கியமாக்கி விடுகிறது.
“ தனி ஒருவனுக்கு உணவில்லெயெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம் ”
இத்தனை கோபம் பாரதிக்கு ஏன்? ஒருவனுக்கு உணவில்லையெனில் ; யார்?, எந்த சாதி , மதம்
,
என்பதெல்லாம் அவருக்கு பிரச்சினை இல்லை. ஒருவனுக்கு சாப்பிட உணவு கொடுக்க முடியாத
ஒரு சமூகத்தை ,
கலாச்சாரத்தை அழித்துவிடுகிறது அவர் கோபம். அவரின் கோபம் அவர் பசிக்கு அல்ல ; யாரோ ஒருவரின் பசியை இவர்
உணர்ந்ததால் / கேட்டதால்
அவர் மனம் துன்பப்பட்டு விட்டது / பாதிப்புக்குள்ளாகி
விட்டது (
affect
).
“ அந்த பாதிப்பு / மனப்பாதிப்பு – பாரதியின் - தன்னிலை உருவாக்கத்தில் , ஆசைக்குரிய தனிச்சிறப்பான இடத்திலிருந்து பிரிக்க முடியாதது ” என்பது லெக்கானின் கூற்று.
பாரதியின் ஆசை – மனப்பாதிப்பு
–
‘ தனி ஒருவனுக்கு உணவு
இல்லையெனில் ’
என்று மொழிக் கட்டமைப்பாக ( symbolic ) உள்ளது
. அவன்
கலாச்சாரம் ,
மன எழுச்சியை ரத்தமும் சதையுமான குறிப்பானாக்குகிறது - ஜெகத்தினை அழித்திடுவோம்
-
வலியுறுத்துகிறது.
பாரதிக்கு முந்தியவன் தன் உணர்வை
/ பாதிப்பை மொழியில் இப்படி கற்பனை உலாவாக்கி
விடுகிறான்.
1062.
“ இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக
வுலகியற்றி யான் ”
வள்ளுவன் நம்பும் உலகை
இயற்றிவனையே, தன் மனத்திலிருந்து வெளியேற்றுகிறான் - “ பரந்து கெடுக
”.
“ மன எழுச்சியானது , மனத்துயரம் , மனப்பாதிப்புகள் , வார்த்தைகளுடன் உறவுடையதாக இருப்பதைவிட கற்பனையானவற்றுடன் மிக நெருக்கமான
உறவு கொண்டதாக இருக்கிறது ” . - Lewis
A.krishner
இந்த மனப்பாதிப்பு , மொழியில் கற்பனை உலாவாக
வருவது என்பது இலக்கியத்தில் வழமையாக வடிவெடுக்கிறது .
ஒரு கவிஞன் இப்படிக் கேட்கிறான் : என்றோ இழந்த ஒன்றின் நினைவை ( lack ) , இல்லாமை /
வெறுமை உணர்வு உறுத்த , அன்புக்கு ஏங்கி “ நிறமாறாத பூக்களை” த் தேடுகிறான் - தன் கற்பனை உலகில்.
க.செ
14-11-2015
உதவிய நூல் : Having a Life- Lewis
A.Krishner
