26 Nov 2017

ஔவையும் பஸ் எரிப்பும்

இந்தத் தலைப்பு பிரபல்யமான ஆன்மீகக் குட்டிக்கதை.முருகன் ஆடுமேய்க்கும் சிறுவனாக ஔவையின் பாதையில் குறுக்கிட்ட நேரமது.
கருநாவல் மரத்தடியில் இளைப்பாறும் ஔவையைப் பார்த்து முருகன் “ பாட்டி ,உனக்கு சுட்டபழம் வேணுமா சுடாத பழம் வேணுமா “? என்று கேட்டு வியப்படைய வைத்தான்.
பாட்டி வெயிலில் வறுபட்டிருந்ததால் சுடாத பழம் போடப்பா என்றாள்..
முருகன் கருநாவல் பழத்தைப் போட்டான்.அது தரையில் விழுந்துவிட்டது.பாட்டி பழங்களைப் பொறுக்கி கையில் வைத்து பழத்தை ஊதினாள் ஒட்டியிருந்த தூசியையும் துகளையும் நீக்க.
இப்போது முருகன் “பாட்டி பழம் சுடுகிறதா? ஊதுகிறாயேஎன்றான்.
ஔவை வியப்பின் எல்லைக்குச் சென்றுவிட்டு “ நீ யாரப்பா? என்றாள்.
முருகன் காட்சியளித்தான் ஔவைக்கு.கதை இன்னும் போகிறது. பின்னால் நாம் போகாமல் ஔவை பற்றி வழக்காடுவோம்.
ஔவை ஏன் முருகனிடம் ஏமாந்தாள்.அவள் கவி, போராளியும்கூட. அப்படியிருந்தும் முருகனின் மொழியை எங்கே அறியாமல் கோட்டைவிட்டாள்.
முருகன் கூறிய மொழியில் ‘சுட்டது ‘,சுடாததுஎன்ற குறிப்பான்கள் (வார்த்தைகள்) (signifier) ‘விசாரத்திற்குஉரியது (ஆராய்ச்சி அல்லது சோசித்தல்).அந்தக் குறிப்பான்களை அப்படியே நேரடி குறிப்பீடாக, அர்த்தமாகக் கொண்டுவிட்டாள் ஔவை. அது முருகனின் பரிகாசத்திற்கு இடம் கொடுத்துவிட்டது. இதற்கு மற்றுமொரு புறக்காரணம் ,சுட்ட பழம் வேண்டுமா ,சுடாத பழம் வேண்டுமா?என்று கேட்டது ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் தானே (object). என்ற இந்தப் பார்வையே அவளின் ஆய்வு மனத்தை உஷார்படுத்தவில்லை அவளின் நானுணர்வு ( ego). மற்றொன்று ஒலி (sound image). இரண்டினாலும் அவளிடம் எந்த வினாவையும் எழுப்பத் தோணவில்லை. எப்படியோ முருகன்  சுட்ட பழம் (அல்லது) சுடாத பழம் வேணுமா என்றவுடனேயே ஔவை பிரக்ஞை அடைந்திருக்க வேண்டும்.
“ ஒரு நிகழ்வு ( event ) ஒருவருக்கு எவ்விதத்தில் அர்த்தமாகிறது? அதனோடு இவருக்குள்ள ஈடுபாடு என்ன ,அது அவரை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பொறுத்து ஒரு நிகழ்வானது ஒருவருக்கு யதாத்தமாகிறதுஎன்கிறது மன அலசல்.( Zizek)
இங்கு முருகன் ஒரு விளையாட்டை நடத்துகிறான்.ஔவையும் அதை உணர்ந்து ரசித்திருப்பார்.
இங்கு மொழி குறித்த லெக்கானின் கருத்துகள் கவனத்திற்குரியவையாகும்:
Language was  system of signs none of which signified anything in itself , for meaning arose solely from the place and function of a sign within the system as a whole”-Lacan.
(மொழி என்பது குறிகளின் அமைப்பாக இருக்கிறது, அவற்றில் எதுவும் தன்னளவில் / தனக்குத்தானே குறிப்பீடாக இல்லை,ஏனெனில், ஒட்டுமொத்த அமைப்பிற்குள் ஒரு குறிப்பிட்ட குறியின் இடம் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையிலேயே அதற்கு அர்த்தம் உருவாகிறது)
ஆனால்,ஔவையைப் போலவே கேட்கப்பட்ட வார்த்தைகளுக்கு நேரடிப் பொருள் / அர்த்தம் மட்டும் அதில் இருப்பதான சூழல் உருவாக்கப்பட்டு ( உண்மை மறைக்கப்பட்டு ) ஒரு மாவீரனின் உயிரையும் ஆட்சியையும் பறிக்கப்பட்டது புராணக்கதையாக உள்ளது.
நமது பிரதான ஆய்வுப் பொருளை எடுத்துக்கொள்ளுமுன் ஒரு சமகால நிகழ்வை (event)  புரிந்துகொள்வதில் வரும் சித்தப்போக்கும் , அது தளம் மாறும்பொழுது அந்த நிகழ்வு பற்றிய வாசிப்பின் கோணங்கள் மாறுவதும், அதனால் முடிவுகளின் குணாம்சம் எப்படி மாற்றமடைகிறது என்பதற்கு உதாரணப்பொருளாக, ஆய்வுப்பொருளாக , பிப்ரவரி 2000ல் அதிமுக தலைவி கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகமெங்கும் சட்டமீறல்களும், பலாத்காரமும் நடந்தது. அந்த எதிர்ப்பின் விளைவாக, தர்மபுரியில் ஒரு பேருந்து உயிருடன் கொளுத்தப்பட்டு அதிலிருந்த மூன்று பெண்கள் கருகி செத்தனர்.
வழக்கு விசாரணைமன்றம், குற்றவாளி என்று 3 பேருக்கு தண்டனையாக தூக்குஎன்றது. இப்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்று அங்கு “ Diminished Responsibility என்று சொல்லிவிட்டது.
.... இச்சம்பவம் கட்டுக்கடங்காத வெறியின்போது ( mob frenzy),
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ஒன்றாகும், ஏற்கனவே திட்டமிடப்பட்டு
நடந்ததல்ல (not premeditated); Diminished Responsibility-தான்.; பலிகடாக்கள்
யார் என்பது கூட குற்றவாளிகளுக்கு தெரியாது; இக்குற்றச் செயல் மரணதண்டனைக்கு ஏற்றதல்ல  என்றது உச்சநீதிமன்றம்.
- The  Hindu ,march 11,2016
       Diminished Responsibility-என்பதின் பொருள் என்ன? நோக்கம் என்ன? வேறு எது, எது இதில் அடங்கும் என்று தெரியவில்லை. .இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள் என்று எவரையும் சுட்டிக்காட்ட முடியாது என்கிறதா உச்சநீதிமன்றம்.?
        அந்த நிகழ்வில் பங்கேற்றவர் அனைவரும் யதார்தத்தில் குற்றவாளிகள்தானே ! தனியாக பொறுப்பாளியைத் தேடுவானேன்.
3 உயிர்கள் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்க வைக்கப்பட்டது மகிழ்ச்சியே. பிரச்சினை அது பற்றியதல்ல; மாறாக, இம்மாதிரி தூக்குத் தண்டனைக்கு விலக்கு அளிக்கப்பட்ட சட்டத்தின் நெறிதான் ( Ethics) என்ன? உண்மை என்றால் என்ன அந்தச் சட்டத்தில்?? என்பதை புரிய முயற்சிக்கும் ஆய்வுதான் இது.
1. Diminished Responsibility. இதற்கு தரவு (data) என்ன? எந்தக் கோணத்தில் இந்தச் சட்டம் இந்த நிகழ்வைப் பார்க்கிறது.?
2. பலிகடாக்கள் யார் என்றுகூடத் தெரியாது.....
பேருந்தில் பெண்கள் இருந்தது தெரியாதா? தீயில் எரியும்பொழுது எழுந்த சாவுக்குரல் குற்றவாளிக்கு எட்டவில்லையா? பலிகடாக்களின் நிறம், உயரம், முகவரி வேண்டுமானால் தெரியாமல் (கண்ணால் பார்க்காமல்) இருக்கலாம். ஆனால், உயிருக்கான போராட்டக் குரல் குற்றவாளிகளுக்கு கேட்காமலா இருந்திருக்கும்? அக்கூக்குரலின் மூலம் பலிகடாக்கள் உள்ளிருப்பது தெரிந்திருக்குமில்லையா? காப்பாற்ற முயற்சி எதுவும் இந்தக் குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்டதா?
3.பேருந்துகள் எதற்காக எரிக்கப்பட்டது? பேருந்தை எரித்ததே சட்டப்படியான கைதை (ஜெ) எதிர்த்துத்தானே! தங்களின் மமகாரத்தை வெளிப்படுத்தத்தானே!
இதுவா Diminished Responsibility என்பது.
ஆக, நீதிக்கு, கொலையாளிக்கு பலி ஆட்டின் முகவரி தெரிந்திருந்தால்தான் அது படுகொலை என்றும் , இல்லாவிட்டால் Diminished Responsibility -யில் நடந்த செயல் என எடுத்துக் கொள்ளப்பட்டதுபோல் தெரிகிறது.
குற்றவாளிக்கும் இந்தப் பேருந்திற்கும் கூட ( things) நேரடி உறவோ, பகையோ கிடையாது; அதேபொழுது பலிகடாக்களுக்கும் நேரடி உறவு கிடையாது. இந்த நிகழ்வுக்கு Diminished Responsibility –தான் இந்தக் குற்றவாளிகளுக்கு என்றால் , தினம் லட்சக்கணக்கில் / கோடிக் கணக்கில் பயணிக்கும் பயணிகளுக்கு யார்தான் பாதுகாப்பு? எல்லாம் பலி கடாக்கள் தானா?
[ அதாவது,அப்படிப்பட்ட (risk)-ல்தான் பயணம் செய்யவேண்டும்]
கொலையாளிகளுக்கு பலிகடாவின் முகவரி தெரிந்திருந்தால் முழு கொலையாளி (தூக்குதண்டனைக்கு தகுதி); இல்லாவிட்டால் குறைந்த குற்றவாளி என்ற Technical point சரியாகக்கூட இருக்கலாம்.
ஆனால்,அது நெறியின் ( Ethics) மீதும், உண்மையின் மீதும் நிற்க வேண்டுமல்லவா...?

க.செ

No comments:

Post a Comment