Showing posts with label iit. Show all posts
Showing posts with label iit. Show all posts

3 Jun 2015

“ நமோ கோஷ்டியின் கத்தி ”

1948 –ல் காந்தியின் கொலைக்குற்றத்திற்காக நீதிமன்றத்தால் மரண தண்டனைக்குள்ளான “ கோட்சே ” யின் பேச்சுரிமைக்காக கி.பி 2010- க்குப்பின் அதை அரசியலாக்கிய நமோ கோஷ்டியினர் (group) ; படேல் உரிமைக்காக நேருவை ஓரங்கட்ட முயற்சித்த நமோ கோஷ்டியினர் இப்போது IIT சென்னை மாணவர்களின் – பேச்சுரிமையை - ஜனநாயக உரிமைக்குத் தடைவிதித்துள்ளனர். விசித்திரம்.

மாணவர் அமைப்புகளுக்கு தடைக்கான காரணமாக பொதுவாகச் சொல்லப்படுவது நமோ கோஷ்டியின் அரசாங்கத்தின் மீது மாணவர்களின் விமர்சனம்தான்.

( மீண்டும் மேலிருந்து ஒரு முறை வாசிக்கவும் )

நமோவின் கலாச்சாரம் Symbolic System – மாக இருக்கிறது. அதன் அர்த்தம் மொழியில் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.

”….. Culture is how you react to it in polite way ; To be very vulgar ……” ( Slavoj Zizek, மனஅலசல் ஆய்வாளர், கலாச்சார விமர்சகர், etc.)

நமோ கோஷ்டியின் ஜனநாயகச் செயல் அடிமாட்டிற்கு கேரளா செல்லும் மாடுகள் மாதிரி உள்ளது.

IIT என்பது கல்வித்துறையின் தலையாயதாகவும் Phallic (அதிகார மையமாகவும்) ஆகவும் உள்ள ஒரு வலைப்பின்னல்.

ஏற்கனவே சென்ற ஆண்டுகளில் தெலுங்கானா போராட்டத்தை முன்னின்று நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழகம், E F L U பல்கலைக்கழகம் போன்றவற்றில் மாணவர்களின் சுதந்திரம், ஜனநாயகத்தை மறைமுகமாக கொன்று, முன்னணி ஜனநாயக மாணவர்களை castrate ( உரிமைகளைப் பறித்தது ) செய்து, ஹைதராபாத்தை விட்டு ஓடி அகதிகளாய் வாழ்பவர்களின் கதை இன்னும் அச்சேறாமல் இருக்கிறது. இப்போக்கு சென்னை IIT க்கு ஆரம்பித்துவிட்டது.

இது, பின் நவீனத்துவத்தில் மனு சாஸ்திர அக்ரஹாரத்தை ( IIT ) அரசியல்சட்டரீதியான அக்ரஹாரமாக்கும் ஒருவகை முயற்சி எனலாம்.

இப்போது IIT மாணவர்களும், சில கட்சிகளும் அடையாளப் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டனர் . ஒருவேளை கல்லூரி, பள்ளியில் இடம்பிடிக்கும் போட்டா போட்டிக்கான நேரம் என்பதால் அது தமிழ்நாடு மாணவர்களுக்கான பிரச்சனையாக மாறவில்லையோ?

தமிழகத்தின் ஆளும்கட்சி “ நமோ ” கோஷ்டியினரை எதிர்த்து - தற்சமயத்திற்கு - நிற்காது.புரிந்து கொள்ள முடிகிறது. ( இதையொட்டி மனஉளைச்சல் எல்லாம் தமிழ் மனத்திற்கு இருக்கா, என்ன? )

இந்தவகை பயங்கரவாதம் ஆழப்பட்டு வருகிறது. உச்சியில் தொங்கும் கத்தியாக கருத்தமைவை, கலாச்சாரத்தை கட்டமைக்கின்றனர்.

‘ பசுவதை கூடாது ’ - கலாச்சாரச்சட்டம் இது ; வேறு ஒருவகை கலாச்சாரப் பழக்கத்தை தொங்கும் கத்தியால் அச்சுறுத்துவது.

பிரதமர் யூதரானால் “ I don’t eat pork ” - அது ஒரு குறியீட்டு அமைப்பு ( Symbolic order ) ஆகிவிடும்.

( ஆனால் சாதியம் மட்டும் அப்படியே இருக்கிறது ).

மாணவர்கள் அமைப்பு என்பது குறியீடு அல்ல.அது ஒரு குறிப்பான் . பலசாதியாக , மதமாக , மொழியாக , நுழையும் தன்னிலைகள் மாணவர்களுக்கான ஜனநாயக அமைப்பில் ஒன்றுதிரளும்போது பல்வேறு தன்னிலை ஆக்கங்களுக்கு இடையில் ஒரு கொடுக்கல் வாங்கல் உறவும் , ஒரு வகை நிலப்பிரத்துவ பிற்போக்கிற்கு கேள்விக் குறியுமாகிறது. குறுங்குழுவாதத்தில் மிதந்த தன்னிலைகளுக்கு உலகளாவியமும் அறிமுகமாகிறது ; அன்பும் கூட விரிய (எல்லை கடந்து ) வாய்ப்புள்ளது.

பயங்கரவாதம் பகுதிபகுதியாக கதவைத் தட்ட ஆரம்பிக்கிறது.

அரட்டிக்கு அடங்கவேண்டுமா என்ன?.

“ கலாச்சாரம் ஒரு நம்பிக்கை தான். அது எதார்த்தம் அல்ல ” ( Reality-content ; Belief- always thought ) – zizek


       நினைவூட்டவேண்டிய கவிதை


ஜெர்மனியில்
நாசிக்கள் முதலில் கம்யூனிஸ்டுகளைத் தாக்கினர்.
நான் கம்யூனிஸ்ட் இல்லையென்பதால்
மௌனமாக இருந்தேன்.
பிறகு
அவர்கள் யூதர்களைக் குறி வைத்தனர்.
நான் யூதனில்லையென்பதால் அப்பொழுதும்
குரல் எழுப்பவில்லை.
பின்
தொழிற்சங்கவாதிகளைத் தாக்குகையிலும்
எனது பதில் மௌனமே : ஏனெனில்
நான்தான் தொழிற்சங்கவாதியில்லையே !
அப்புறம்
கத்தோலிக்கர்களைத் தாக்கினார்கள்
நான் புராட்டஸ்டண்ட் என்பதால்
அமைதியாகவே இருந்தேன்.
பிறகு
அவர்கள் என்னைத் தாக்க வந்தனர்
அந்த சமயத்தில் எனக்காக  குரல் எழுப்ப
                                                                 எவரும் இல்லை

நன்றி : மார்டின் நிமால்லர் (1892-1984)

( புறப்பாடு இதழ்-31. 91-92 ல் வெளிவந்தது )

~க.செ


11 Feb 2012

ஐ.ஐ.டி யின் காப்புரிமைகளும்.. தற்கொலைகளும்.



இப்போது ! 
..டி-யின் துறைத்தலைவர், Dr. M. கோவர்தன்.
நீங்கள் ஏன் ..டி சென்னை குறித்து எப்போதும் எதிர்மறையான செய்திகளையே வெளியிடுகிறீர்கள். இப்பல்கலைக் கழகத்தில் அதிகமான patent-கள் (காப்புரிமை பெற்ற மாதிரிகள்) உள்ளன. அதுபற்றி செய்தி எதுவும் வெளியிடுவதில்லையே ஏன்?
5000 மாணவர்களில் 3 பேர் இறந்து விட்டால் அதுபற்றி செய்தி வெளியிட விரும்புகிறீர்களே. ஏன்?
புள்ளி விபர அடிப்படையில் இந்த எண்ணிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ”
இந்த மனப்பதட்டம் (anxiety) சுயமோகம், நோய்க்கூறு வகைப்பட்ட சுயமோக அதிர்வுக்குக் காரணம், சென்னை ..டி-யில் M.Tech மாணவர் நிதின்குமார் ரெட்டி தற்கொலை பற்றி (தற்கொலை செய்து கொண்ட நாள் 4-5-2011) செய்திகளை வெளியிட்டதுதான். அந்த ஊடகங்களை நோக்கித்தான் பல்கலைக் கழக துறைத்தலைவர் மேற்கூறிய மொழிதலைச் செய்தார்.

அதிக காப்புரிமையும் 3 பேர் தற்கொலையும் என்பது... புள்ளி விபர அடிப்படையில் இந்த எண்ணிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. கணக்குத் தெரியாத இந்தத் தன்னிலைக்குக் கூட விளங்க வைத்து விட்டீர்கள். பேராசியரே நன்றி.
ஆனால், உயிர்கள் புள்ளிகளாக, நிகழ்தகவு அடிப்படையில் மாற்றியிருக்கிறீர்களே! எண்களும் உயிர்களும் சமச்சீரற்றதே.

இந்த உங்கள் சமச்சீராக்கம் மனஅலசல் ஆய்வில் ஒரு மனிதனுள் எப்போது நடைபெறும் என்றால் சுயமோகம் (narcissism) தலைவிரிக்கும் கணத்தில் நடைபெறுகிறது நனவிலியாக  (unconscious). 
" The system unconscious selectively treats the converse of any relation as identical to it. It treats logically asymmetrical relations as if they were symmetrical"
…" The process of selectively ignoring certain asymmetrical or difference relations is called symmetrization.” - 'Matte Blanco'.
..." symmetrization suggests a move into greater simplicity. It can thus thought of as a slippage or regression into crudity which can then suggest an evasive or avoidant activity…"
-Unconscious logic, Eric Eayner.
3 உயிர்களை, புள்ளிகளாக மாற்றியதின் மூலம் ஒரு மறுத்தல் (negation) எவ்வளவு எளிதாக நிகழ்கலையாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கலையின் ஆளுமை பற்றி அரங்கக் கூட்டம் போட்டு இந்தியாவெங்கும் பேசக் கூடியதுதான் இது.

சுயகொலைக்கு முன் அந்த மாணவர் பட்ட அவஸ்தை, வலி எத்தகையது?  பின் அவரின் உறவினரின் இழப்பு

..டி-ன் காப்புரிமையில் (patent right), இந்த (சுயமோக) சமச்சீரற்றதை, சமச்சீராக்கும் வித்தையை (Technic) சீக்கிரம் காப்புரிமை பெற்று  ..டி-ன் காப்புரிமை புள்ளிக் கணக்கில் ஒன்றைக் கூட்டுங்கள்.

இப்போது, மற்றொரு சமச் சீராக்கத்தை (symmetrization) யும் பார்க்கலாம்.
அது,  அந்த  மூன்று உயிர்கள் பற்றிய ஊடகங்களின் அக்கறை வெளிப்பாட்டை; அதிக காப்புரிமைகளை விட அந்த உயிர்கள் ( மதிப்புக் கூட்டப்படாததால் ) அற்பம் என்று ஊடகங்களால் சொல்லாமல் சொல்லப்பட்டுவிட்டது.

அதிக காப்புரிமைகளின் அடியில் ஒளிந்திருப்பது உங்களின்  Imaginary.  சர்வவல்லமை / ஆண்டவர், (omnipotent narcissism).  அதுதான் உயிர் பற்றிப் பேசும்போது காப்புரிமையைப் பேசி உவகை கொள்கிறது உங்கள் சுயமோகம்.

சமச்சீராக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள Clinical finding  ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. (சற்று மனச்சிதைவுக்கு உள்ளான ஒரு நோயாளியின் கூற்று):
"சிறையில் உள்ள ஜன்னல்களுக்கு கம்பிகள் உள்ளன. எனது அறையில் உள்ள ஜன்னல்களிலும் கம்பி உள்ளது, எனது பைஜாமாவில் கோடுகள் (Stripes) உள்ளன..... சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்காக நான் என் பைஜாமாவைக் கிழித்தெறியப் போகின்றேன்".