19 Feb 2014

புதுமைப் பித்தனின் வாடா மல்லி


ஒரு மன அலசல் வாசிப்பு
       இங்கு புதுமைப்பித்தனின் கலைஞானத்தை ஆய்வுப் பொருளாக எடுக்கவில்லை.  மாறாக அச் சிறுகதையின் மையச் சொல்லாடல் சிலவற்றை வாசிக்க அவைகளை ஆய்வுப் பொருளாக்கப்பட்டிருக்கிறது.
       ஆய்வுப் பொருளை கட்டுடைக்க லெக்கானியம் என்ற ஆய்வுக் கருவியை உபயோகித்தால் அதிர்வோசை எந்தத் திசையில் இருக்கும் ?.
       சொல்லாடலின் வரிகளுக்கடியில் உறைந்துள்ள இயற்கை இணைவு ; வரிகளூடாக ஊடுபாவாக ஓடும் கதை சொல்லியின் மனப் போக்கையும் அறியமுடிகிறது.
       புதுமைப்பித்தனின் அதீத கோபம், மனக் கொந்தளிப்பே இந்தச் சிறுகதை. இரண்டு பக்க கேன்வாசில் – இச்சமூக மேல் சாதியின் கொடூர கலாச்சார வக்ரத்தை சித்ரமாக்கி விட்டிருக்கிறார்.
       இனி அச்சிறுகதையை அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.
வாடா மல்லிகை
அவள் பெயர் ஸரஸூ; ஒரு பிராமணப் பெண்.  பெயருக்கு தகுந்ததுபோல் இருக்க வேண்டும் என்று நினைத்தோ என்னவோ பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது.  அவள் கணவனுக்குக் காலனுடன் தோழமை ஏற்பட்டுவிட்டால் அதற்குச் சமூகம் என்ன செய்ய முடியும்?
       ஸரஸூ ஓர் உலாவும் கவிதை.  இயற்கையின் பரிபூரணக் கிருபையில் மலரும் பருவம்.  காட்டிலே ரோஜா யாருமின்றி உதிர்ந்தால் அதைப் பற்றிப் பிரமாதமாக யாரும் கவலைப்படமாட்டார்கள்.  ஆனால் நந்தவனத்திலே, மனத்தின் களிப்பில் குலாவக்கூடிய இடத்திலே, தனிமை என்ற விதி ஏற்பட்டால் அதைப் பற்றிப் பரிதவிக்காமல் முடியுமா?  இயற்கையின் போக்கைத் தடைசெய்துகொண்டு அவள் தியாகம் செய்கிறாள் ; அவள் பரிசுத்தவாதி என்று சமூகம் களித்துக்கொண்டு இருப்பது அதன் ரத்தவெறிதான்.  அவளுக்கு இந்தச் சமூகத்தில் உரிமையே கிடையாதா?  அவள் நிலைமை என்ன?  சாம்ராஜ்யப் பிரஜையின் நிலைதானா? சமூகம் என்ன செய்ய முடியும், வேதம் சொல்லுகிறது.  தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது என்று பேத்திக்கொண்டிருக்கும்...?
       ஸரஸூவுக்கு இதெல்லாம் தெரியாது.  அவள் ஒரு ஹிந்துப் பெண். வாயில்லாப் பூச்சி.பெற்றோரையும், புருஷனையும், முன்னோரையும் நம்பித்தான் உயிர் வாழ்ந்து வந்தாள்.  பெற்றோர் கலியாணம் செய்து வைத்தார்கள்.  புருஷன் வாழ்க்கையின் இன்பத்தைச் சற்றுக் காண்பித்துவிட்டு, விடாய் தீருமுன் தண்ணீரைத் தட்டிப் பறித்த மாதிரி, எங்கோ மறைந்துவிட்டான். அவனை இந்த உலகத்தில் இனிக் காண முடியாது.  பிறகு . . . கண்டால்தான் என்ன? அது போகட்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவைத்துவிட்டுப்போன முன்னோர்கள் கணவன் சென்றவிடத்தில் இருக்கிறார்கள்.  ஸரஸூ பெற்றோரைத் தட்டியது கிடையாது.  பிறகு முன்னோரை எப்படி எதிர்க்க முடியும்?  அவளும் பெண்தானே!  அச்சம் என்பதுதான் அவளுக்கு அணிகலன் என்று சமூகம் சொல்லுகிறதே.  பிறகு அவள் வேறு என்னவாக இருக்க முடியும்?  அவள் உயர்தர“ப் படிப்புப் படித்த பெண்ணா?  நாலு விஷயங்களைத் தானாக ஆராய்ச்சி செய்து கொள்ள அவளுக்குத் திறன் ஏது?  இயற்கையின் தேவை கட்டுக்கடங்காமல் மீறி ஒரு மிருகத்தின் முரட்டுத் தைரியத்தைக் கொடுக்கவில்லை.  கொடுத்திருந்தால் அவளைச் சமூகம் தூற்றுவதற்குத் தயார்.
       எந்த அமைப்பிலேயும் விதிவிலக்குகளான சிறுபான்மையோர் கஷ்டப்படத்தான் வேண்டும் என்று தத்துவம் பேசலாம்.தத்துவம் நன்றாகத்தான் இருக்கிறது!  ஸரஸூவின் உணர்ச்சிக்கு உரிமையில்லை – அவள் விதிவிலக்கு.
       ஸரஸூ எப்பொழுதும் மாடியின்மேல் காலை ஏழு மணிக்கே தலையை உலர்த்த வருவாள்.  அப்பொழுதே ஸ்நானமாகிவிடும்.  பெற்றோரின் பாசம், அவளைச் சமண முனி மாதிரி, ஒரு பெண்மையின் கோரமாக்கத் துணியவில்லை.  அதை எடுத்திருந்தாலும் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள்.  வாழ்க்கைக்கே வசதியில்லாமலிருக்கும் பொழுது சிகை போவது தானா பிரமாதம்?
       அவளைப் பார்த்தால் யாருக்கும் கண் கலங்கும்.  அவள் கண்களிலே ஒரு நிரந்தரமான துயரம், போக்க வழியில்லாத துன்பம் குடிகொண்டிருக்கும்.  அவள் சிரிக்கத்தான் செய்கிறாள்.  குதூகலமாகப் பேசத்தான் செய்கிறாள்.  இவை யாவற்றிற்கும் பின் சோகந்தான் நிலவும்.
       பிரம்மசாரியாக, உண்மையான பிரம்மசாரியாக நீ இருந்து பார்த்திருக்கிறாயா?  வேறு ஓர் உயர்ந்த இலட்சியம் உனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, உன்னை அப்படியே விழுங்கிவிடாவிட்டால் பிரம்மசரியம் உன்னைக் கொன்றுவிடும்.  உன்னை மிருகமாக்கி உனது உள்ளத்தைப் பேயாகச் சிதற அடித்துவிடும்.  ஆனால் கட்டாயத்தின் பேரில் இப்படிக் கன்னிகையாகக் காலங்கழிக்க வேண்டிய நிலைமையை என்ன சொல்வது?
       அன்று ஸரஸூவின் தம்பி துரைசாமிக்குச் சாந்திக் கலியாணம்.  முதலிலே ஸரஸூவுக்குத் தாங்க முடியாத குதூகலம் – தங்கள் வீட்டில் விசேஷம் வருகிறது என்றுதான், தம்பியின்மீது இருந்த ஒரு ஹிந்துத் தமக்கையின் அளவு கடந்த பாசத்தினால்.
       அன்று பகல் வந்தது. . . .
       அன்று இரவு வந்தது.  ஊரில் இருள்.  வீட்டில் ஒளி.
       வீட்டில் ஒளி:  ஸரஸூவின் உள்ளத்தில்?
       அவளுக்கு என்னென்னவோ நினைவுகளெல்லாம் குவிந்தன.  அப்படித்தானே மூன்று வருஷங்களுக்கு முன், முதல் முதலாக அவருக்கு . . .  என்னென்னவோ தோன்றின.  நேரமாக நேரமாக அவள் மனத்தில் அந்த மூன்று வருஷங்களுக்கு முந்திய சந்தோஷகரமான வாழ்க்கையை ஓர் இன்ப ஒளியாக்க முயன்ற அந்த இரவின் ஒவ்வொரு சிறு சம்பவமும். . . அவர் முதலில் என்ன கூச்சப்பட்டார்!  பிறகு அந்த உரிமை என்ற தைரியம்தானே. . . இவ்வளவு சீக்கிரம் அவள் வாழ்க்கை இருட்டிவிடும் என்று அப்பொழுது கண்டாளா?  என்னவோ சாசுவதமான அழியாத நித்திய வஸ்துவென்றல்லவோ. . .
       துரைசாமியையும் அவன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.  கூச்சலும் அமளியும் அவளுக்குப் பொறுக்க முடியவில்லை.
தன்னை மீறிய, கட்டுக்கடங்காத ஓர் ஆவேசம் அவளைப் பிடர் பிடித்துத் தள்ளியது.  பின்புறம் புழக்கடைக்குச் சென்றுவிட்டாள்.
நானும் பின்தொடர்ந்தேன்.  அவள் நிலைமை எனக்கு ஒருவாறு தெரிந்தது.  அவள்மீது ஒரு பரிதாபம்.  அதனால்....
புழக்கடையில் ஒரு பெண் தேம்பிக்கொண்டு இருந்த சப்தம் கேட்டது.
நெருங்கினேன், அவள்தான்!
ஸரஸூ!
பதில் இல்லை.
இன்னும் நெருங்கித் தோளில் கையை வைத்தேன்.  உணர்ச்சியற்ற கட்டைபோல் இருந்தாள், உடல் தேம்புவதினால் குலுங்கியது.
ஸரஸூ!  நான் இருக்கிறேன், பயப்படாதே!  என்றேன்.
நான் ஒரு ஹிந்துப் பெண்!என்று கூறிவிட்டுச் சடக்கென்று உள்ளே சென்றுவிட்டாள்.
நான் திகைத்து நின்றேன்.  ஹிந்துப் பெண் என்றால் உயிர்வாழ உரிமையில்லையா?
நான் எவ்வளவு நேரம் நின்றேனோ!
மறுபடியும் அவள் வந்தாள்.
ஸரஸூ!  என்னை மன்னித்துவிடு.  நான் கூறியது வேறு.  நீ அர்த்தம் பண்ணிக்கொண்டது வேறு.  நான் உன்னை மணம் செய்து கொள்ளுகிறேன்!  என்றேன்.
கொள்கைக்காக நீர் தியாகம் செய்துகொள்ள முயலுகிறீர்.  அது வேண்டாம்-மிஞ்சினால் நான் உமக்குப் போகக் கருவியாகத்தான், உமது தியாகத்தின் பலிபீடமாகத்தான் நீர் கருதுவீர்.  அது எனக்கு வேண்டாம்.  நான் காதலைக் கேட்கவில்லை.  தியாகத்தைக் கேட்கவில்லை.  நான் தேடுவது பாசம்....
அது என்னிடம் இருக்கிறதுஎன்றேன்.  அவளிடம் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை.
அப்படியானால் திருமணம் வேண்டாம்... பாசம் இருந்தால் போதும்என்று சொல்லித் தலை குனிந்தாள்.
என்ன ஸரஸூ இப்படிச் சொல்லுகிறாய்-இரகசியம் பாபம் அல்லவா? கலியாணம் இதை நீக்கிவிடுமே!
எனக்கு உமது தியாகம் வேண்டாம்.  உமது பாசம் இருந்தால் போதும்!”.
நீ ஒரு பரத்தை!
உமது தியாகத்திற்கு நான் பலியாக மாட்டேன்-அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக் காலத்து நன்மதிப்பு ஏற்படும்.  தைரியசாலி என்பார்கள்.  அதை எதிர்பார்க்கிறீர்.  நான் பரத்தையன்று-நான் ஒரு பெண்.  இயற்கையின் தேவையை நாடுகிறேன்!என்றாள்.
எனது மனம் கலங்கிவிட்டது.  வெளியேறினேன்.....
மறுநாள் அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது.  அதன் மடியில், நான் எதிர்பார்த்தபடியேஎன்று எழுதிய ஒரு நனைந்த கடுதாசி இருந்தது.

-ஊழியன்.7.1934.
-எப்போதும்
முடிவிலே
இன்பம்.
-புதுமைப்பித்தன்.          -காலச்சுவடு பதிப்பகம்.
ஒரு பெண்ணின் தன்னிலைத்தன்மையை (subjectivity) வாடா மல்லி என்று பெயர் சூட்டி கதையாடுகிறார்.
வாடாமல்லி என்பது மனஅலசல்படி ஒரு சிம்பாலிசம் (symbolism) அல்லது குறி (sign) எனலாம்.
வாடாமல்லி என்ற சிம்பாலிசம் சரசு என்ற பெண்ணின் குறிப்பான தன்னிலைத்தன்மையை பிரதிநிதித்துவம் செய்கிறது.
கதை சொல்லியை, கதைப்பாத்திரம் பாதித்து (affect) விட்டது.  ஒரு காயடிப்புச்சிக்கலால் பதட்ட மேற்பட்டுவிட்டது.  இந்தச் சிம்பாலிசம் சித்தத்தின் (அகத்தின்) முரண்பாட்டால்(intra psychical Conflict)  பிரக்ஞை, நனவிலிக்குமிடையிலான பிளவில் ஏற்படும் சக்தி (energy) பிரவாகமாகி, அவைகள் மனத்தின் அதிக ஒடுக்கப்பட்ட பகுதியை (part) கட்டமைக்கிறது.  அது முழுமையான, ஒரு திசை நோக்கிய சிம்பாலிசமாக (symbolism) கட்டப்படுகிறது.
Only what is repressed is symbolized. Only what is repressed needs to be symbolized”-Ernest jones.1910.


       ...பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது.  மனமுவந்து என்ற பதத்தில் பிறர்துன்பத்தை கண்டு மகிழ்வு  அடையும் சமூகமிது என்கிறார் கதைசொல்லி.  அதாவது சமூகத்தின் வக்கிரத்தை அப்படிக் கிண்டலடிக்கிறார்.
அவள் ஒரு வாடாமல்லி.
இங்கு அது ஒரு குறியாக (sign) / சிம்பாலிக்காக வெடித்திருக்கிறது.  அந்த மலர் ஒரு பிரதி நிதித்துவம் ; அது சரசுவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
சரசுவின் தன்னிலைத் தன்மையை பிரதிநிதித்துவம் செய்கிறது.
வாடாமல்லி உயிருடன் இருக்கும் போதே அது சற்று காய்ந்திருப்பதாகப்படும்  மற்ற மலர்களோடு ஒப்பிடும் போது.
அது விதவையான பின்பும் கூட  அதன் தன்மையை இழக்காமல் இருப்பதே வாடா மல்லி.
இதைத்தான் வாசகருக்கு புதுமைப்பித்தன் slide show வாக 1934ல் காட்டியிருக்கிறார்.
விதவைப் பெண்ணின் பால் விருப்பத்தை (desire) தடை செய்து கொண்டு ... பரிசுத்தவாதி என்று சமூகம் களித்துக்கொண்டு இருப்பது அதன் ரத்த வெறிதான்என்கிறார்.  அவள் இப்போது காயடிக்கப்பட்டவளாக, எந்த அதிகாரமும், பேசும் சுதந்திரமும்-தன்னிலையாக-இல்லாதவள். அவளிடம் மொழி கூட இல்லை, அவள் தன் phallic யை இழந்துவிட்டாள். புதுமைப் பித்தன் கூறியபடி சமூகத்தின் ரத்தவெறிக்கு அவளின் phallus பறிபோய்விட்டது.
இப்போது அவள் சமூகத்தின் ஒரு பொருள் (object) அவ்வளவே..  நல்லது/கெட்ட/ சுபகாரியம் மூச்! அனைத்தும் பறிக்கப்பட்டவள்.  வரிக்க/ தரிக்க உரிமையற்றவள்.
புதுமையின் லட்சணத்தை கதை சொல்லி இப்படி வரைகிறார்.  ... புருஷன் வாழ்க்கையின் இன்பத்தைச் சற்று காண்பித்து விட்டு, விடாய் தீருமுன் தண்ணீரைத் தட்டிப் பறித்த மாதிரி, எங்கோ மறைந்துவிட்டான்.
புதுமைப்பித்தன் துயருறுபவர் மனத்தினூடே பயணிக்கும் கலையை கற்றுத் தேர்நதவராக இருந்திருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி இதுதான்.  பிரம்மச்சாரியாக, உண்மையான பிரம்மச்சாரியாக நீ இருந்து பார்த்திருக்காயா?  வேறு ஓர் உயர்ந்த இலட்சியம் உனது உள்ளத்தைக் கொள்ளைகொண்டு, உன்னை அப்படியே விழுங்கி விடாவிட்டால், பிரம்மச்சர்யம் உன்னைக் கொன்றுவிடும்”.
பால் வேட்கைக்கு  உயர்ந்த லட்சியம் / பதிலி  (sublimation) இல்லாவிட்டால் வேட்கை உன்னை அழித்துவிடும் என்பது ப்ராய்டின் 1900களின் கண்டுபிடிப்பு.  கிட்டத்தட்ட அதே காலத்தில் அது இலக்கியப் பிரதியாக தமிழில் சுவடுகளைப் பதிப்பித்திருக்கிறது.
கதையின் 3ம் பக்கத்தில் 8ம் பாராத் துவக்கத்தில் நானும் பின் தொடர்ந்தேன்”.  இந்த நான்யார்? கதைசொல்லியா / புதுமைப்பித்தனா?  அசரீரியாக சரசுடன் வாழ்ந்த அண்டை அசலானா?
 இனி ஓரங்கநாடகம்.
ஸரசு!  நான் இருக்கிறேன், பயப்படாதே!
நான் ஒரு ஹிந்துப் பெண்!
அவனின் கூற்றை அவள் வாசித்துவிட்டு பதிலை குறியீடாக நான் ஒரு ஹிந்துப் பெண்என்கிறாள்.தான் ஒரு Grandiose self என்ற மற்றமை(ஹிந்து) அடையாளத்தை முன்னிறுத்துகிறாள்
புதுமணத்தம்பதிகளின் குதூகலம் அவளைப் பாதித்துவிட்டது (affect).  இப்போது அவள் ஒரு நியுராட்டிக் . இந்நிலையில் ஆடவன் நானிருக்கிறேன் என்பதும், அவள் உடனடி மறுவினையும் வெளிப்படுகிறது.  அவள் மனம் தன் கடந்த காலம் நோக்கி கொண்டுசென்றுவிட்டது.
(புது வாழ்க்கை வந்தவுடன் கடந்த காலம் அழிந்து விடுவதில்லையே.)
நான் உன்னை மணம் செய்து கொள்கிறேன்.
அவன் சமூக யதார்த்தத்திலிருந்து இப்படிக் கூறுகிறான்.  விதவைக்கு என்ன வேண்டும்.  பொதுவழக்கு திருமணம்/மறுமணம் என்பதாகத்தானே இருக்கிறது.
ஆனால் இவள் வேற.
ஆனால்,
சரசுவின்  (Grandiose)   தன்னிலை வேண்டியது... நான் தேடுவது பாசம்.
இங்கே அவள் தேடுகின்ற பாசம் என்பது ஒரு குறிப்பான்.  குறிப்பீடல்ல.  அச்சொல் நனவிலியாய் அவள் தன்னிலையை (subject) பிரதிநிதித்துவம் செய்கிறது.
மனஅலசல்படி :
பாசம் ஒரு சிம்பாலிசம் (symbolism) / குறி (Sign).அது தாய் – சேய் கருத்தை அல்லது உறவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்தக் குறிக்கு இப்போது 2வது குறித்தலையும் (secondary signification) பெறுகிறது.
அதாவது தாய் என்றும் அல்லது தாயுமானவர்(Motheror) என்றும் அர்த்தம் பெறுகிறது.
இக்கணத்தில் சரசு வேண்டுவது தாய்ப்பாசம் / வாஞ்சை. அது குறியாகிறது.
பாசம் என்பதை சிம்பாலிசம் என்று கூறுவதற்கான முகாந்திரம் மன அலசல் கோட்பாடுதான்.
பாசம் /குறி தொடக்க காலத்தை (primary element)  (சரசுவின்) பிரதிநிதித்துவப்படுகிறது.
பாசம்/குறிக்கு பருண்மையான பண்பு உள்ளது.
அல்லது பருண்மையாக வெளிப்படும் (சரசுக்கு) etc- Ernest jones.
நான் ஒரு பெண்.  இயற்கையின் தேவை ”. சரசுவின் ஆசை(Desire) எத்திசையை நோக்கியிருக்கிறது என்பது புலனாகிறது.  சரசுக்கு தலைசாய்க்க தாய்மடி வேண்டும் அவ்வளவே.
       அவனிடமும் அதைத்தான் எதிர்பார்த்தாள். ஆனால் மனைவி அந்தஸ்து (சமூக) கிடைக்கிறது. முடிவு நான் எதிர்பார்த்தபடியேஎன்ற சொல்லுடனும் கனத்த மனத்துடனும் முடித்துக்கொண்டாள்.
இதுவும் ஒரு பெண்தன்மைதான்.  பெண்ணியம் தான்.  ஆனால் தளம் வேறு.  தேடினால் கிட்டும். 
புதுமைப் பித்தனின் மனத்தை வெகுவாகப் பாதித்த சம்பவத்தின் தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்றி வைத்துப் பார்த்ததால் பயந்து வரலாறு புனைவாயிருக்குமோ என்று தோன்றுகிறது.
[பி.கு:  இப்போது அவர் இருந்து அதே காத்திரத்துடன் இருந்திருந்தால் தர்மபுரி கல்லூரி மாணவன் இளவரசனின் காதல், திருமணம், சமூகம், அவன் இறுதி மூச்சை தண்டவாளத்தில் விட்டதை எப்படி எதிர் கொண்டிருப்பார்?       அந்த இலக்கியப்பிரதி என்ன சொல்லும்]
க.செ.

8 Feb 2014

படேல் ஒரு 3-ம் தனிமம்






 
ரேந்திரமோடி:
 ..... "குஜராத் அரசு சார்பில் நர்மதா நதிக்கரையில் உள்ள தீவுப்பகுதியான பஹ்ரவுச்சில் இரும்பு மனிதர் படேலுக்கு ரூ 2500 கோடியில் சிலைஅமைக்கப்படுகிறது. சுமார் 600 அடி உயரத்தில் எழுப்பப்படவுள்ள இந்தச் சிலை அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையைவிட இரண்டு மடங்கு பெரியது.....
... "படேல் மதச்சார்பற்றவர்தான்.ஆனால்,சோமநாதர் கோவிலைப் புனரமைத்தபோது அவரது மதச் சார்பின்மை குறுக்கிடவில்லை. அவர் கடைப்பிடித்த மதச்சார்பின்மை நாட்டைப் பிரிக்கவில்லை, ஒன்றிணைத்து வலுப்படுத்தியது",என்றார்.                                                      -தி இந்து நவம் 1 -2013

இந்தத் திடீர் படேலின் மோகம் பற்றி அறிய வேண்டிய அவசியம் உள்ளது.
2014-ல் நடக்கவிருக்கும் தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், B.J.P-   யின் அரசியல் சொல்லாடல்களில் உள்ள திரைமறைவுப் பிரதேசங்கள் தெரிந்தால் அவர்களின் 21ம் நூற்றாண்டின் அரசியல் சொல்லாடல்களின் வர்ணங்கள் புலப்படும்.
இனி, படேலை  B.J.P ஏன் கண்டுபிடிக்கின்றனர் என்ற கேள்விக்கான பதிலைஅறியும் முன்;     B.J.P- யின் மூத்த தலைவரும்  B.J.P- யின் அடிக்கட்டுமானத்தின் முக்கியமானவருமான எல்.கே.அத்வானியின் படேல் பற்றிய நிலைப்பாட்டை அவரின் வலைத்தளத்தில் வெளியிட்டாராம்.
அது இங்கே ஆய்வுப்பொருளாக ஏற்கப்படுகிறது,
[ இது மறைவுப் பிரதேசம் (unconscious); பிரக்ஞையுடன் செயல்படும்போது மொழி எப்படியெல்லாம் பிறக்கிறது. JustificationRe-interpretation-ஆக வெளிப்படுகின்றன.  இது B.J.P- க்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் - தமிழகத்து அரசியல்வெளி உட்பட.-பொருந்தும்; மற்றபடி எந்தக் கட்சிக்கானதாகவும் இருக்கப்போவதில்லை].
படேலை வகுப்புவாதி என்றார் நேரு: அத்வானி தகவல்.
.......தனது வலைப்பூவில் அத்வானி கூறியுள்ளதாவது: "நாடு சுதந்திரமடைந்தபோது ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆட்சி செய்த நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்து வந்தார்.  அப்போது அவரது ஆதரவாகச் செயல்பட்ட தீவிரவாதப் படையினரான ரஸாக்கர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் அங்கு  ராணுவத்தை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று படேல் வலியுறுத்தினார்.இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நேருவுக்கும் படேலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த நேரு,படேலை வகுப்புவாதம் செய்பவர் என விமர்சித்தார். அத்தோடு படேலின் யோசனையை ஏற்றுக் கொள்ள நேரு மறுத்துவிட்டார்....                        -தி இந்து .நவம். 6- 2013
(ஆனால் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது- இணைத்தவர் படேல். ம.ஆ.)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்ப நேரு தயங்கினார்.
"பாகிஸ்தான் துருப்புகள் 1948-ம் ஆண்டு காஷ்மீரை நெருங்கியபோதிலும் அங்கு ராணுவத்தை அனுப்ப அப்போதைய பிரதமர் நேரு தயங்கினார் என்று B.J.P- ன் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் ‘சர்தார் வல்லபாய் படேலை முழுமையான வகுப்புவாதி என்று நேரு விமர்சித்ததாக அத்வானி சமீபத்தில் தனது இணையதள வலைப்பூவில் தெரிவித்திருந்தார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது......
-தினமணி நவ.8-2013
இன்றைய அரசியல்,காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியினர் B.J.P -யை மதவாதிகள், மதவாதம்என்று சொல்லுகின்றனர்.குறிப்பாக அத்வானி,மோடி போன்றவர்களுக்கான செல்லப்பெயர் அது.
பாபர் மஜீத் இடிக்கப்பட்டபின்பும், குஜராத்தின் மோடி அரசாங்கத்தில் நடந்த குஜராத் மதக் கலவரத்திற்குப் பின்பும் 'மதவாதம்' என்ற சொல்லும், அதன் அரசியல் நடைமுறையும் இப்பெயரால் இனம் காணப்படுகிறது. 

படேல் பற்றிய அத்வானி, மோடியின் கருத்துக்கள் செய்தியல்ல.அது கூற்றல்ல. அவைகள் விளக்கமளித்தல்( interpretations)  எனும் வகை சார்ந்தது. 
இந்த மறுவாசிப்பு  நனவிலி ரீதியில் நடைபெறுவது. இதற்கான காரணம் மற்றமை தான்(Other).அதாவது மக்களும்,மொழியும்,கூடவே ஊடகங்களும்.
காங்கிரஸ் எனும் அரசியல் சொல்லாடலானது நேரு பரம்பரையுடன் கட்டப்பட்டுள்ள கருத்துருவம். அத்துடன் அது சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்ததாயும், தியாகப் பரம்பரையாயும் சொல்லாக்கம்,பொருளாக்கம்  பெற்று ஊடகங்களிலும்     அரசியல் பொது வெளியிலும் உலாவி வருகிறது,
நேரு பரம்பரையாகத்தான் ராகுல்காந்தி அறிமுகப்படுத்தப்படுகிறார்.  ராகுல்காந்தியும் தியாகப்பரம்பரை என்ற பதாகையை ("தானும் சுட்டுக் கொல்லப்படலாம்"- ராகுல்) உயர்த்திப் பிடிக்கிறார்,அதாவது  phallic -ஆகவும்,தங்களை மாஸ்டர் சொல்லாடலாகவும் பாவித்துக் கொள்கின்றனர். இது நேற்றைய , இன்றைய மற்றமைச் சொல்லாடல். அதாவது வெகுஜனங்களின் ஆசைக்குரிய பொருளின் இடத்தில் காங்கிரஸ், ராகுல் உள்ளனர்.
அதுவாக B.J.P  இல்லை-மற்றமையின் ஆசைப்பொருளாக,  அந்தஸ்தான பரம்பரா இடம்(phallic­) என்று ஏதுமில்லை(lack).
இது B.J.P-க்கு உளவியலாக இடைவெளியை(gap),  இல்லாமையைக் (lack) கொடுக்கிறது.
ஆகவே இந்த இடைவெளியை அடைக்க, சமூகத்தில் நேரு என்ற ஓர்மையான இடத்தைப் பிளக்க மக்கள் மனத்தில் சுதந்திரத்துடன் பிணைக்கப்பட்ட, ஆனால் காங்கிரஸால் புறக்கணிக்கப்படும்,மேலும் தங்களின் அகண்ட பாரதம்,மதவிசுவாச அடையாளத் தேடலில் B.J.P -க்குக் கிடைத்த அருமருந்துதான் படேல் என்ற மனிதர்.
இவரைப்பற்றி மோடியின் கருத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கலாம்.
..."படேல் மதச்சார்பற்றவர்தான்.ஆனால் சோமநாதர் கோவிலைப் புனரமைத்தபோது அவரது மதச்சார்பின்மை குறுக்கிடவில்லை...” -மோடி. அதாவது, படேல் மதச் சார்புள்ளவராக நடந்துகொண்டார்  அல்லது அதற்கு ஆதரவாக நடந்து கொண்டார். அதனால் மோடியின் பாசம் படேலின் பக்கம். அதாவது,அடையாளத்தேடலில் அடையாளம் கிடைத்துவிட்டது.
மற்றொன்று..."அவரின் மதச்சார்பின்மை நாட்டைப் பிரிக்கவில்லை,ஒன்றிணைத்து வலுப்படுத்தியது"....மோடி.
அதாவது, முஸ்லீம் ராஜ்யங்களான ஹைதராபாத்,காஷ்மீர் இந்தியாவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டது. இன்றைய தேசிய இனங்களின் சிறையாய் இந்தியா இருப்பதற்கு படேல் ஒரு காரணம்.அதாவது, B.J.P-யின் அகண்ட பாரதத்தின் கனவை ஓரளவாவது செயலாக்கத்திற்கு வித்திட்டவர் படேல் என்ற மற்றொரு அடையாளமும் பட்டயமும் படேலுக்கு.
படேலின் எந்தத்தன்னிலையை ஏற்றிருக்கிறார்கள் என்று கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இவர்களின் அடையாளத்துடன் ஒத்துப்போகும்(simile) தன்னிலைத் தன்மையையே ஏற்றிருக்கிறார்கள்.படேலுடனான ஐக்கியம்  other-உடனான ஐக்கியம் அல்ல;ஒத்த தன்னிலைகளுக்கிடையிலான ஐக்கியமே.
இப்போது மோடியும், B.J.P-யும் படேலின் வாரிசு.அதை நிலைநாட்ட,மக்கள் மனத்தில் நேருவுடன் படேலையும் அக்கம் பக்கமாக நிறுத்த 600 அடி உயர சுதந்திரச்சிலை உருவாகிறது.
தொழில்நுட்பரீதியில் படேலின் மீதான ஆசை எப்போது எழுந்தது?(Desire can only exist as unsatisfied-Lacan).
அதிருப்தியில் ஆசை எழுகிறது ”.
மற்றமையில் தானும். B.J.P-யும் ஆசைப்பொருளாக இல்லாததால்;அதுவும் காங்கிரஸின் வீழ்ச்சி நேரம் என எண்ணும் கணத்தில், தாங்கள் மரபின் நீடிப்பு என மற்றமை ஏற்கவில்லையோ என்ற எண்ணமே ,அதனால் ஏற்பட்ட மனப்பதட்டமே (anxiety) படேல்.
ஆக, அத்வானி, மோடியின் ஆகுபெயர்தான் (metonymy) படேல் (displacement) என்றாகிறது.
கூடுதலாக படேல் ஒரு குஜராத்தியும் கூட. மேலும் B.J.P-யின் மரபுரீதியான அடையாளத் தேர்வு(identity) ஒரு குழந்தையின் கண்ணாடிப்பருவத்தைக் காட்டுகிறது. கண்ணாடிப் பிம்பத்தை (3-ம் element) தானாக (அடையாளமாக) குழந்தை கருதுவது குழந்தைத் தனத்தால். ஆனால் மோடி, அத்வானியின் 3ம் மூலாதாரத்தை - படேலிடம்-தேடுவது நனவிலி விருப்பமே.
Spatial- realism மேற்கூறிய அடையாளம் பற்றியதை மன அலசல் இப்படிக் கூறுகிறது :
“… where   am I’. It has no idea of itself as a whole.         When it sees itself in the mirror, however it does see itself as a whole, but it is only  an  image  of  the whole.  The other in the mirror is Imaginary.  The child will now identify itself with the image.  This is called a dual kind of relation.  As will be argued later, this is not yet a real relation, because therefore a third element is needed.  This is also not only a stage in the development of the child, but will be important for the rest of its life, notably in relation to ‘the other who is the same’….”.
                                                                                                                                                                Zizek  Slavoj: 1991.
இவர்களுக்கு வெறும் அடையாளம் உள்ளது. தேவை எதுவென்றால் நேருவிற்கிணையான அடையாளம் அது. லட்சியத் தன்னிலை (ideal subject )  வேண்டும்;அதுதான் படேல்; அது B.J.P  தலைமைத் தன்னிலையைத் தவிர வேறு ஒன்றுமில்லை,
மேற்கூறிய ஆய்வுக்கு மிக நெருக்கமாக உள்ளது மோடியின் கூ,ற்று
"படேல் மதச்சார்பற்றவர்தான்,  ஆனால் சோமநாதர் கோவிலைப் புனரமைத்தபோது அவரது மதச்சார்பின்மை குறுக்கிடவில்லை,  அவர் கடைப்பிடித்த மதச்சார்பின்மை நாட்டைப் பிரிக்கவில்லை, ஒன்றிணைத்து வலுப்படுத்தியது.
அதாவது B.J.P-யின் ஆசையான அகண்ட பாரதமும், இராமர் கோவில் புனரமைப்பு ஆசையுடன் படேலிடம் (குறிப்பிட்ட விசயத்தில்) ஒத்த தன்மை காணப்படுவதால் லட்சிய அகனாக ஏற்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.
படேலின் சிறப்பான தன்மைக்கு சில எடுத்துக்காட்டுகள்:  லட்சத்தீவுக்கும் படேலுக்கும் உறவு உள்ளது, 
லட்சத்தீவுகள் 
இத்தீவுகள் இந்திய நிலப்பரப்பிலிருந்து பல மைல்கள் அப்பால் உள்ளவை. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த இத்தீவுகள் சென்னை ராஜதானியின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, இந்தியா சுதந்திரம் அடைந்தது பற்றி இங்கு வசித்துவந்த மக்களுக்கு 1947 ஆகஸ்ட் 15க்கு பிறகு சில நாட்கள் சென்ற பிறகுதான் தெரியவந்தது.  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய சுதந்திரச் சட்டம் 1947-ன்படி இத்தீவுகள் இந்திய யூனியனுக்கு உட்பட்டதாக மாறியது.  இங்கு வசித்து வந்த மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் இத்தீவுகள் மீது பாகிஸ்தானும் உரிமை கோருவதற்கான சாத்தியங்கள் இருந்தது.  அதனால் இந்தியாவின் கடற்படை இத்தீவுகளுக்குச் சென்று அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றி அவை இந்தியாவுடன் இணைந்துவிட்ட பகுதி என்பதை உறுதி செய்தது.  இதற்குச் சில மணிநேரங்கள் கழித்து அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படை நிலைமையைப் புரிந்து கொண்டு கராச்சிக்குத் திரும்பின.
நாடு பிரிவினையாகும்போது 1.5 கோடி மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர். இந்நிலையில் இந்து    முஸ்லிம் கலவரம் வெடித்தது, அப்போது டெல்லி, பஞ்சாப் போலீஸ் பிரிவினரின் மேல் குற்றம் சாட்டப்பட்டது. பஞ்சாப், டெல்லி போலீசாரே முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.  இதைப்புரிந்த பட்டேல் இப்பகுதிகளுக்குத் தென்னிந்திய ராணுவப் படைப்பிரிவை அனுப்பி அமைதியை நிலைநாட்டினார்.
.......காங்கிரஸ் தலைமைப் பதவிக்கான போட்டியிலிருந்து விலகிவிடுமாறு காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்று படேல் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காங்கிரஸின் தலைவரே சுதந்திர இந்தியாவில் அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துவார் என்ற அடிப்படையில் இத்தேர்தல் மிக முக்கியமான ஒன்றாகும்.

சரியான நபரைத் தேர்வு செய்யுமாறு காந்தி மாகாணப் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டார். 16 மாகாணப் பிரதிநிதிகளில் 13பேர் படேலை முன்மொழிந்தனர், ஆனால் இந்தியாவின் முதல் பிரதமராக படேல் இருக்க வேண்டாம் என்ற காந்தியின் வேண்டுகோளிற்கு படேல் மதிப்பளித்து ஏற்றுக் கொண்டார்.

16 மாகாணப் பிரதிநிதிகளில் 13 பேர் படேல் தலைவராக முன்மொழிந்தனர்.
காந்தி படேலை மறுத்துவிட்டார். அதைப் படேல் ஏற்றுக்கொண்டு நேருவுக்கு வழிவிட்டிருக்கிறார் தலைமைக்குக் கட்டுப்பட்டு.

நவீன காலத்தில் அத்வானிக்கும் மோடிக்கும் தலைமைபற்றிய பிணக்கில் என்னவிதமான போக்கை இவர்கள் கடைப்பிடித்தார்கள்? வரலாற்றைப் பார்க்கவும்.

படேலின் இருப்பைக்கூட நேருவின் குலப்பெருமை இல்லாமல் ஆக்கிவிட்டது.
இப்போது மோடி,அத்வானியின் ஆசையானது நேருவின் இருப்பை இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது. இது நாணயத்தின் அடுத்த பக்கம் அவ்வளவே.


காந்தியின் பேரன் ராஜ்மோகன் கூறியது:

....குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தனது கொள்கைரீதியான வாரிசாக நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் அங்கீகரிக்க மறுத்திருப்பார்”....


"....2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை படேல் பார்த்திருந்தால், ராஜநீதியை மோடி கடைப்பிடிக்காத காரணத்துக்காக அவர்மீது அதிருப்தி அடைந்திருப்பார். குஜராத்தைச் சேர்ந்த படேல், கலவரத்தைத் தடுக்க மோடி அரசு தவறிவிட்டது குறித்தும், துயரச் சம்பவத்தைக் கண்டும் மிகவும் வருந்தியிருப்பார்"

..."ஒரு காங்கிரஸ்காரனாக இருப்பதில் படேல் மிகவும் பெருமை கொண்டிருந்தார்.1947-ம் ஆண்டுவரை ஆர்.எஸ்.எஸ்.ஸின் பணிகளைப் பாராட்டிவந்த படேல் காந்தி படுகொலைக்குப்பின் இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக எதிர்த்தார்...                                    

தி இந்து நவம்.5-2013
                                                                                    -க.செ