Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

24 Nov 2015

தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.

ஒரு பழமொழி 
தண்ணீரில் இறந்தவரிலும் 
சாராயத்தில் இறந்தவர் அதிகம்.

[போதைக்கான காசில் ( தின்றது போக ) மிச்சம் விலையில்லாப் பொருட்கள் –இலவசம்.] 

  நம்மின் ஒவ்வொருவரின் நனவிலியிலும் தான் சாகாவரம் பெற்றவராக கருதிக் கொள்கிறோம் . _ப்ராய்டு

இந்த நிலையானது மனித மனத்திலிருந்து சாவு பயத்தை ( death fear ) விலக்கி விடுகிறது. மகிழ்விற்கு முன் சாவு பயம் மணடியிட்டு விடுகிறது.

சாராயம் என்பது அதை குடிப்பவர்களுக்கு மற்றமையாய் உள்ளது .சாராயத்தின் ஆட்சிக்குட்பட்டு வாழ்வதற்கு இசைவாகிப் போன அடிமைத்தனம் .ஆனால் , பேசும் தன்னிலையானது , சாராயத்திலிருந்து விடுபட்டு சாவில் நிலைகொண்டுள்ளது .ஆகையால் , அது சுனாமி போன்ற பேரண்ட அழிவை விட சாராயத்தின் சாவு அதிகாரத்தின் வீச்சு அதிகம் என்ற நிலைப்பாடு கொண்டுள்ளது.

தண்ணீரைப் பற்றிய சாவு பயத்தைவிட சாராயத்தை பற்றிய சாவு பயம் இல்லாமையே காரணம் என்பதால் ; தன்னிலை தண்ணீருடன் சாவை ஒப்பிட்டு சாரயத்திற்கும் சாவுக்கும் உள்ள நெருங்கிய உறவைக் குறியீட்டு ஒழுங்கில் ( symbolic order  ) , மொழியில் , அறமாக, சமூக விழுமியமாகக் கட்டுகிறது எனலாம் .

இப்போதைக் காலக் கட்டத்தில் அரசின் சாராயக் கடையில் விற்பனையாகும் மது ஒரு நுகர்வுப் பண்டமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக (  legitimize ) ஆகிவிட்டிருக்கிறது மனத்தளவில்.
நுகர்வு சட்டரீதியான மகிழ்விற்கான பண்டமாக மனதில் கட்டமைக்கப்பாகியுள்ளது .
.ஆகவே ,தானாக மனம் வருந்தி சுய கட்டுப்பாட்டிற்கு வருவதற்கான சூழலும் இல்லை. . தூண்டலின் நிறம் பல வண்ணங்களில் விரவிக் கிடக்கிறது _ சினிமா , சின்னத்திரை , இத்ழ்கள்  மொழியாக - தனிமனித உறவுகள் etc. அதுபோக , மனிதனுக்கு தன் நெருக்கடியை சமனப்படுத்த உறவுகளும் இல்லை ; மனதைச் சமனப்படுத்துமளவிற்கான பொதுவெளி (park) கூட இல்லை.
தானாக மனித இயல்பு மாறுவதற்கான , மகிழ்விற்கான , சட்டரீதியான நுகர்வுப் பண்டமாக சாராயம் இருப்பதாலும் ; தானாக மாறச் சூழலும் இல்லாததாலும் போதை தலைகேறியுள்ளது .
முற்றிலும் வேரோடு ஒழிக்கப்படவேடிய Evil  தான்  (  தீது ) சாராயம் ,மது. உடனடியாக , மக்களின் விழிப்பு , அக்கறைக்கான வெகுஜனக் கருத்தை எல்லா மட்டத்திலும் எடுத்துச் செல்லவேண்டும் .




க.செ.
18-11-2015