22 Aug 2019

ஜாதி அடையாளமான கயிறு

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் அத்திவரதரின் செல்வாக்கு, கவர்ச்சி, மூலை முடுக்கு எல்லாம் ஈர்த்தது ;
       இது நடந்து கொண்டிருக்கும் பொழுதே தமிழகத்தின் சில பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் ஜாதி அடையாளங்களை காட்ட மணிக்கட்டில், அந்தந்த ஜாதிகளின் அங்கீகாரம் பெற்ற கலர் கயிறுகளை கட்டி வருகை புரிந்துள்ளனர்.  இத்தோடு ஜாதிக் குழுக்களாகவும் காட்சி அளித்துள்ளனர்.
       நெற்றியில் நாமம், தின்னூறு, குங்குமம் போன்ற குறியீடுகள் மத அடையாளமாக இருப்பது வழக்கமாக உள்ளது ;  டீன் ஏஜ் மாணவர்கள் ஜாதிக்கான கலர் கயிறுகளை கட்டி நிகழ் கலையாக்கிவிட்டிருக்கின்றனர்.
       கல்வித்துறை “ ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தும் இதுபோன்ற வழக்கங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது ;   கண்கானித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . . .  நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் “ .

       இந்த அறிக்கை வெளிவந்த அடுத்த நாளே “ இந்து மத “ குழுக்கள் கல்வித்துறை , மீது கண்டனக்குரல் எழுப்பியது கண்டித்தது. 
       அதில் ஒரு குரல் குழு மாணவர்கள் கயிறு அணிவது , திலகமிடுவது போன்றவற்றை தடுக்கக்கூடாது , பள்ளி கல்வித்துறை தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் . “  உடனடியாக அரசாங்கம் பணிந்தது .  தினமலர் – 05.08.2019.
       இதே காலகட்டத்தில் ஈரோடு பக்கம் தலித்துகள் ஒரு கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருந்தனர் .  அந்த கோரிக்கை “ தயை “ உள்ள மனங்களுக்கு வேதனை அளிப்பது .  அது தங்களுக்கான சுடுகாட்டை எது ? என்று ஒதுக்கித்தாருங்கள் என்பதுவே .
       இதற்கு எத்தனை ஆதரவுக் குரல் ஒலித்தது ?  தெரியவில்லை .  இந்த அவர்களின் நிலையை கண்டித்தது யார் .  இவர்கள் எந்த மதத்தினர் ?  என்ன கலர் ?  யார் சொல்வது ?
       மாணவர்கள் ஏன் இந்த ஜாதிக் கவர்ச்சியில் விழுந்தார்கள் என்பதையாவது ஆராயாமல் , மாணவர்களை எப்படி கண்டிப்பது ?  அவர்களுக்கு விழிப்புணவர்வு எப்படி கொடுப்பதாம் ?
       பள்ளி மாணவர்களின் அத்துமீறல் சமீபத்தில் அதிகமாயிருக்கிறது என்பதை முன்னிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்ச்சிக்கு ஏற்பாடு செய்து , அது நடக்கவும் ஆரம்பித்துவிட்டது .
       ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்கும் உளவியலார் ஒருவரிடமிருந்து அவரின் பயிற்சி அனுபவம் என்ன என்று கேட்கப்பட்டது .  அவர் மிகத் தயங்கி , தயங்கி சொன்னது ஆசிரியர்கள் பயிற்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை .  கற்பதில் போதுமான , அக்கரையில்லை , தங்களுக்குத் தெரியும் , எல்லாருக்கும் எல்லாம் தெரியும் மனப்போக்கு உண்டு  வெளிநாட்டு உளவியல் கல்வி எதற்கு ?  ( இன்னமும் உண்டு ) மாணவர் படிக்கமாட்டேன் என்கிறார்கள் , அடங்குவதில்லை  என்றனர் .
       வள்ளுவர் , திருமூலர் போன்றவற்றிலிருந்து ஏன் நடத்தமாட்டேன் என்கிறீர்கள் . 
       இப்பிரச்சனையை மிக எளிதாக முடித்து வைத்த பெருமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சாரும்.
       அவரின் தீர்வு இதுதான் “ மாணவர்கள் தங்கள் ஜாதி , மத அடையாளங்களை கட்டிக் கொள்ள எந்த தடையும் இல்லை “ , தினமலர் 16.08.2019 .
       மேற்கண்டதை ஆராயும் முன் மாணவர்கள் , ஜாதி , ஆசிரியர்கள் பற்றிய கருத்தமைவு மிக முக்கிய ஒருவரான “ ஈ.வெ.ரா “ வை திரும்பிப் பார்க்கலாம் .
ஆசிரியர்களுக்கு . . . ஈ.வெ.ரா
       “ நீங்கள் ( ஆசிரியர்கள் ) முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் .  மானம் , ஆண்மை இன்னதென்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் , சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் , மக்களிடம் அன்பு காட்ட கற்றுக் கொடுக்க வேண்டும் ;  தேசபிமானத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் . “
       “ நமது நாட்டில் அறிவாளிகள் கல்வி விசயத்தில் செய்ய வேண்டிய வேலை முதலில் உபாத்தியாயர்களுக்குப் படிப்பளிக்க வேண்டும் .  100இல் 5 உபாத்தியாயர்களுக்குக்கூட அறிவு என்பதாக ஒரு விசயம் இருப்பதே தெரியாது “ ,  மேலும்
       இன்றைக்கு ஆசிரியர்களுக்குச்  சம்பளம் பெறுவதுதான் முக்கியமாக இருக்கிறதே ஒழிய ,  பையன்களைப் படிப்பதில் ,  நல்வழிப்படுத்துவதில் அதிக கவனம் , அக்கறை இல்லை .  இந்த நிலை மாற வேண்டும் “ ,
       ( இன்னும் நிறைய இருக்கிறது . விரும்பினால் நூலைப் படிக்கலாம் )
மாணவர்களுக்கு
       “ முதலாவதாக மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் .  ஈ.வெ.ரா-வின் கருத்தமைவை உள்ளார்ந்து நோக்கினாள் ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு சமூகப் பிரக்ஞை , சமூக பொறுப்பானது அவர்களின்  அடிக்கட்டுமானமாக இருக்க வேண்டும் என்பதாகத் தோன்றுகிறது .  
       “ மாணவத் தன்மையிலேயே இன உணர்வு பெற வேண்டியது முக்கியம் என்கிறார் .  எதற்கு ?, “ இன இழிவு நீங்க வேண்டிப் பாடுபடுவதுதான் முக்கியம் . “ , என்கிறார் .   மேலும் “ படிப்பதால் சூத்திரப் பட்டம் போய்விடுமா ?  சமூக இழிவு நீங்கிவிடுமா ?  என்றாலும் – படித்துக் கொண்டிருக்கும்  போது அதை கெடுத்துக் கொண்டு கிளர்ச்சி செய்தல் கூடாது ;  “ , என்கிறார் .  மேலும் அவர் “ படிக்கும் பிள்ளைகள் கல்லூரியின் சட்ட திட்டங்களுக்கு அடங்கித்தான் இருக்க வேண்டுமே தவிர , சண்டை விளைவிப்பதோ, கலகம் செய்வதோ கூடாது “ ,
       மாணவர்கள் “ சினிமாவுக்கும் , கோவிலுக்கும் போகக்கூடாது “ போகிறவர்களிடமும் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கூறி  தடுத்து நிறுத்த வேண்டும் .  “ பெரியார் கணினி “         – புலவர் நன்னன் .
       மாணவர்களுக்கு ஜாதி அடையாளக் கயிறு கட்ட வேண்டியது எப்படி நடைபெறுகிறது ?  என்று நாம் கேட்டால் சாதி ஒரு அமைப்பு ( system   ) / ஒழுங்கு முறை என்று புரிந்து கொண்டால் , மாணவர்களின் சித்த தளமும் , அது கருத்தியலோடு கொண்டுள்ள உறவும் , ஜாதியம் மாணவர்களை கொஞ்சம் , கொஞ்சமாகப் பதப்படுத்துகிறது “ , வீடு , பள்ளி , போன்ற கலாச்சாரத் தளத்தில் அரசியலும் , கருத்தியலும் வடிவ உருக்கம் , வரலாற்று ரீதியிலும் , அரசியல் நிகழ்வினாலும் கட்டப்படுகிறது .
       அதாவது சமூக உருவாக்கத்தின் இயங்கு நுட்பமாக ( mechanism  ) மேலே கூறியவைகள் இருக்கின்றன .  இது உளவியல் பார்வை .
       சாதியத்தின் முக்கிய அலகான தீண்டாமையும் , அந்நியப்படுத்தலும் பிரக்ஞையாகிறதும் இந்த தளத்தில் தான் நடைபெறுகிறது .  ஆக சாதிக் கயிறால் மாணவன் கட்டப்படுகிறான் என்பதே சரியாக இருக்கும் .
இனி ஆசிரியர்கள்.
       ஆசிரியர்களின் உறவு என்பது  சமூகத்  தொடர்புக்கான சங்கிலியின்  ஒரு  வளையம் ( Link   ) சமூகத்தோடு தொடர்புபடுத்தும் கரணை ( Link  ) அது ஆசிரியர்களுக்கு , மாணவர்கள் மீது நனவிலியாகவே ஒரு விலகள் / வெறுப்பு என்பது அகவய யதார்த்தமாக உள்ளது .
       இந்த தப்பென்னமே / முன் அனுமானமே ஆசிரியரகளிடம் ஒரு விட்டேத்தியான மனோபாவத்தை கொடுக்கிறது .  இந்தப் போக்கு மாணவர்களை இதரராக ( other  ) கருத வைக்கிறது .  இதனால் ஆசிரியர்கள் சங்கிலியின் கரணை (  Link   ) யாக இருப்பதிற்குப் பதில் விலக்கு ஏற்பட்டுவிடுகிறது .
       மாணவர்கள் “ விலக்குதலும் , மனிதாபிமானமற்ற தன்மை நிலவுகிற தீவிரமான அரசியல் முரண்பாடுகளிலும் , நாசகரமான வெறுப்பு    மனப்பான்மை நிலவுகிற தளத்தில்தான் “ , வளர்ந்து ஆளாகிறார்கள் .
       மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் அங்கீகரிப்பு இல்லை ,  ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் அங்கீகரிப்பிள்ளை .  இதுவே இருவரிடமும் மன ஆரோக்கியமில்லாமல் போவதற்கு காரணமாகும் .
       அங்கீகரிப்பு என்பது இருவர்களுக்கிடையிலான பரஸ்பர உறவாக மாறும் .  இருவரும் சமமே அதே நேரத்தில் அவர்களுக்கான தனித்தன்மையும் உண்டு .
       “ பிறரால் அங்கீகரிக்கப்படும் போதே சுயம் பற்றிய பிரக்ஞை ( sense of self  ) வளர்கிறது “ .
       இறுதியாக இந்து ஆன்மீக குழுக்களுக்கு இவ்வளவு அதிகாரமா ?
       “ அத்திவரதர் தரிசனம் நீடிக்க முடியாது “ என்றும் கோவில் மரபு , வழிபாட்டு முறையில் தலையிட முடியாது .  கோவில்  அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும் “ உயர்நீதிமன்றம்.
       கோவிலும் , மதமும் அதிகார அரியணையில் இருக்கிறதா ?  இல்லையா ?

5 Aug 2019

பெரியண்ணனின் திண்ணைப் பஞ்சாயத்து


டிரம்ப்  vs      இந்தியா
     ஜூலை 23ல் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
அது யார் உண்மை பேசுவது ( டிரம்ப் அல்லது மோடி ) என்ற கேள்வி எழுந்தது.
       அதாவது உலக போலீஸ் டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்குமாறு பிரதமர் மோடி தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக டிரம்ப் தெரிவித்தார்.   “ தினமணி 24 ஜூலை “
இதை டிரம்ப் எத்தருணத்தில் தெரிவிக்கிறார் என்றால் . . . ?
       அண்டை நாட்டு பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க அதிபரை 22 ஜூலை வாக்கில் சந்தித்து பேசினார்.  அப்போது அவர் இம்ரானிடம்
“ காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என இந்தியா விரும்புகிறது.  அதையே நீங்களும் விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன் . . . .  நான் மத்தியஸ்தம் செய்வதற்கு , நான் தயாராக உள்ளேன் ,  “ தினமலர் ஜூலை 24
       இம்ரான் வரவேற்பு
       டிரம்பின் இந்த பேச்சிற்கு ( இந்தியா – பாகிஸ்தான் ) இடையிலான பிரச்சினைகளுக்கு , இரு தரப்பு பேச்சு மூலம் மட்டுமே தீர்வுகாண முடியாது.  இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு , - டொனால்டு டிரம்ப் முன் வந்துள்ளது , மகிழ்ச்சி அளிக்கிறது .  அதை வரவேற்கிறேன் .
       இந்த செய்தி வெளிவந்தவுடன் எதிர்கட்சிகள் கச்சை கட்டி களம் இறங்கிவிட்டனர்.
மோடி விளக்கமளிக்க ராகுல் வலியுறுத்தல் , தினமணி ஜூலை 24.
மேலும்  . . . “ காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி உதவி கோரியிருந்தால் அது நம் நாட்டுக்கு பிரதமர் மோடி இழைத்த மிகப்பெரிய துரோகம் “ என்றுள்ளார்.
       டிரம்ப் பிரதமர் மோடியை சந்தித்தது பற்றி இப்படி சொல்கிறார்.
       “ ஜப்பானில் நடந்த ஜி – 20 நாடுகள் மாநாட்டின் போது , பிரதமர் மோடியை சந்தித்தேன் , அப்போது , காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகாண மத்தியஸ்தம் செய்ய முடியுமா என அவர் என்னிடம் கேட்டார் ,
“ அதே நாளிதழில் இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசிய போது, “ காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை என்பது இந்தியாவின் கொள்கை .  ஆனால் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் உதவி கோரியுள்ளார் .  இது குறித்து அவர் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் , “ என்றார்.
       இந்த இரண்டு விமர்சனத்திற்கும் மோடி வழக்கம் போல் பேசாமல் இருந்து கொண்டார் .  பிரதமர் ( தமிழகத்து விவசாயிகள் 100 நாள் அரை நிர்வாண போராட்டமெல்லாம் நடத்தியும் அவர்களை இதுவரை சந்திக்கவில்லை ) , மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய போது காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை என்பது இந்தியாவின் கொள்கை .  அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் நரேந்திர மோடி , எந்த கோரிக்கையும் , முன் வைக்கவில்லை “ என்றார் .  இந்து – தமிழ் – ஜூலை 24.
       இந்த நேரத்தில் ஆளும் கட்சியும் , எதிர்கட்சியும் சிம்லா , லாகூர் ஒப்பந்தம் அடிப்படையில்தான் இருதரப்பு பேச்சு நடத்த வேண்டும் . . . . என்பதில் ஒத்த கருத்தில் உள்ளனர் .  அதாவது லாகூர் , சிம்லா ஒப்பந்தம் என்பது தான் சமாதான பேச்சுக்கு அடிகட்டுமானம் என்கின்றனர்.  ( இப்போது பயங்கரவாதமும் ஒரு கண்டிசன் ) .
       இந்த இரண்டு ஒப்பந்தங்கள் மூலம் இதுவரை எதையும் சாதிக்க முடியவில்லை.  ஏனென்றால் இரு தரப்பும் மேஜையில் உட்காருவதற்கே வாய்ப்பை ஒருவருக்கு ஒருவர் மறுக்கிறார்கள்.
       இப்போது இம்ரான் , இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகளுக்கு , இருதரப்பு பேச்சு மூலம் மட்டுமே தீர்வு காணமுடியாது ,  இந்த விசயத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு , டிரம்ப் முன் வந்துள்ளது , மகிழ்ச்சி அளிக்கிறது . “
       இம்ரானின் பயம் . . .  எதிர்காலத்தில் இந்தியா ஆப்கன் நாடுகளுக்கிடையே பாகிஸ்தான் சிக்கி பெரும் நெருக்குதலுக்கு உள்ளாகும் என அஞ்சுகிறோம்.  பாகிஸ்தான் ராணுவத்திடமும் அந்த அச்சம் நிலவுகிறது . “ , இந்து – தமிழ் ஜூலை 25.
தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்க எம்.பிக்கள் மத்தியில் உரையாற்றிய போது ,  
“எனது தலைமையிலான ஆட்சி அமைந்ததற்கு பிறகே , தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது .  தீவிரவாதத்தின் பாதையில் பாகிஸ்தான் செல்வதை எனது அரசாங்கம் விரும்பவில்லை , “
மேலும் 40 தீவிரவாத குழுக்கள் உள்ளன என்றும் , அவர்களின் எண்ணிக்கை 30 முதல் 40 ஆயிரம் வரை இருக்கும் என்றும் இவர்கள் ஆப்கானிஸ்தான் , காஷ்மீரில் சண்டையிட்டவர்கள் ஆவர் என்றும் , இதனை நிறுத்திக் கொள்ள எனது அரசாங்கம் தற்போது முடிவு செய்துள்ளது , “ என்று இம்ரான் பேசியுள்ளார் .  அதே பத்திரிக்கை .
       அமெரிக்காவின் எச்சரிக்கை மேலும் , “ தீவிரவாத ஒழிப்பு , ஆப்கான் அமைதி பேச்சு வார்த்தைக்கு உதவுவது தொடர்பாக அமெரிக்காவிற்கு அளித்த வாக்குறுதிகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செயல்படுத்த வேண்டும் ,  தினகரன் ஜூலை 27 .
       “ இதுவரை இந்த மனப்போக்கு பாகிஸ்தானிடம் வெளிப்பட்டதில்லை “ .
       இது சமாதானத்திற்கான நல்ல சமிக்கை இல்லையா ?  இப்போது இந்தியா , பாகிஸ்தான் முரண்பாடுகளைப் பற்றிய அரசியல் பேச்சு முற்றிலும் நின்று போயிற்று .
       பிரதமர் மோடி டிரம்ப்பிடம் கோரிக்கை வைத்தாரா ?  இல்லை டிரம்ப் இப்படத்திற்கு கதையாக்குகிறாரா ?  யாரும் இதுபற்றி பேசவில்லை .
       டிரம்ப்பின் ராணுவ அரசியல் போர் தந்திரத்தை இந்தியா , பாகிஸ்தானிடம் காட்ட முயற்சிக்கிறாரா ?  இது பற்றி ஆளும் கட்சி , எதிர்கட்சி , திராவிட கட்சிகளிடம் பேச்சில்லை .
       சமாதானத்திற்கு பேச்சு பற்றி பேசும் காலத்திலேயே , கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளம் பிரதமர் மோடி பெருமிதம் .  தந்தி – ஜூலை 28 .
       கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது .  இது கோலிப் பண்டிகை கொண்டாட்டம் அல்ல .  போர் நடவடிக்கை சம்பந்தப்பட்டது .  இந்தியாவின் ஜீபிளி கொண்டாட்டம் .  தோற்றவரின் மனக்காயத்தை கீறுவதாக இருந்துவிடக் கூடாது .  அது வன்மத்தை தூண்டி சுயமோக வெறிக்கு வித்திடும் .
பாகிஸ்தானில் பல அதிபர்கள் வந்து போய்விட்டனர் .  இவர்களில் பிரதமர் இம்ரான்கான் வித்தியாசப்படவில்லையா ? பயங்கரவாதம் பற்றிய அவரின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கதா ?  இல்லையா ?
       இம்ரான்கானின் அச்சம் இந்தியா , ஆப்கான் பற்றிய அவரின் அச்சம் உண்மையானதா ? இல்லையா ?
       பெரிய அளவிலான குணரீதியிலான மாற்றம் இல்லாவிட்டாலும் , சில அம்சங்களில் தெரியும் மாற்றம் கவனத்துக்குரியதாக ஆகாதா ?
       முற்றிலும் தடாலடியாக மறுக்கும் போது , ஒரு நாட்டின் பிரதமரின் முக்கியத்துவம் கேள்விக்குள்ளாகாதா ?  இதனால் அவருக்கும்  , மக்களுக்கும் ஆரோக்கியமற்ற சுயமோக மன உளைச்சலை இந்தியா கொடுப்பதாக ஒரு எண்ணம் தோன்றாதா .  அது சமாதான தேவையின் முக்கியத்துவத்தை பாதிக்காதா ?  கார்கில் வெற்றியை ஆளும்கட்சி தன் அரசியலின் பகடையாய் மாற்றி காட்டுகிறது .  நினைவு நாளை அடக்கி வாசித்தால் என்ன கெட்டுவிடும் .
       கொண்டாட்டம் தோல்வியை சந்தித்த எதிரிக்கு அவமானத்தை விளைவித்து சுயபோக வெறிக்கு வித்திடும் .  சுயகௌரவம் , சுயமதிப்புக்கான அச்சுறுத்தல் ஆகும் .  அது கட்டுக்கடந்த கோபம் , பல உணர்ச்சியை தூண்டும் .  சுயமோகிகளின் வெறியானது பயத்தின் அடிப்படையிலானது என்கிறது மனஅலசல்.  “ வெறி அவர்களின் பகுத்தறிவை சிதறடிக்கிறது. “
       பிரதமர் இம்ரான்கானின் மேற்கூரிய மாற்றம் அங்கீகரிக்காத போது இப்போதுள்ள உறவும் வக்கரிக்காதா ?
       “ அங்கீகரிப்பு மறுக்கப்படும் போதும் தப்பாக புரிந்து கொள்ளப்படும் போதும் இது நடக்கிறது , “
இந்தியா , பாகிஸ்தான் மக்களிடையே , விலக்குதலும் , மனிதாபிமானமற்ற தன்மையும் தீவிரமான அரசியல் முரண்பாடுகளிலும் , நிஜகரமான வெறுப்பு மனப்பான்மை நிலவுகிறது என்பது யதார்த்த உண்மைதானே !
இந்திய , பாகிஸ்தான் மக்கள் இரு அரசுகளின் அரசியல் சொல்லாடல்களையே கேள்விக்கு இடமின்றி தலையில் வைத்து கொண்டாடுகின்றனர் .
       சமரசரத்திற்கான முன் நிபந்தனைகள் ஆரோக்கியத்திற்கான நெறிகளை உள் அடக்கித்தானே இருக்க வேண்டும் . 
       ( மீடியாக்கள் இது பற்றி ஏதும் ஆரோக்கியமாக பேசினார்களா ?  என்ன ? )
                                                                     
                                   க . செ .