16 Feb 2016

ஆசையின் வர்ணமென்ன ?

நெறி (  Ethics ) பற்றி லெக்கான் இப்படிக் கூறுகிறார் : 
                 மனிதர்களாக உள்ள நாம் , சரியான முறையில் செயல்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் “  என்பதாகும் .

                சமீபத்தில்  ‘ வாட்ஸ் அப் மூலம் மக்களுக்கு முதல்வர் கொடுத்த உறுதிமொழி ;

                 “  வெள்ள துயரத்தில் இருந்து உங்களை விரைவில் மீட்பேன் ‘
                ‘ வாட்ஸ் அப் ‘ மூலம் மக்களுக்கு உறுதி “ .

                 “  ......வெள்ள சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து வருந்துகிறேன் . கவலை வேண்டாம் . இது உங்கள் அரசு . உங்களுக்காக உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன் . விரைவில் இப்பெரும் துன்பத்தில் இருந்து உங்களை மீட்பேன். இது உறுதி .
உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் . எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது . எனக்கென உறவினர் கிடையாது . எனக்கு சுயநலம் அறவே கிடையாது . எனக்கு எல்லாமும் நீங்கள்தான் . என்  இல்லமும் உள்ளமும் தமிழகம்தான் . எத்துயர் வரினும் அதை இக்கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் “ என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார் .               - தி இந்து 15-12-2015 . -http ://tamil.thehindu.com/tamilnadu )                                                                                                                 
                                                                   
      அவர் கூற்றில் உள்ள உண்மைத்தன்மை பற்றி அறிந்துகொள்வது நல்லது .
                எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது , எனக்கென்று உறவினர் கிடையாது.... என்கிறார்.
                லெக்கானியம் ,  ரத்த உறவுகளின் அடிப்படைக் கட்டமைப்புகள் ( elementary structures  of kinship ) உள்ளன ; சொத்து மற்றும் பொருட்களின் பரிமாற்றம் குறித்த கட்டமைப்புகள் என்ற சிலவை உண்டு .
                இந்தக் கட்டமைப்புகளின் விளைவாகத்தான் ஒரு மனிதன் தன்னைத்தானே ஒரு குறியாக ( sign ) அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட பரிமாற்றத்தின் நபராக்கிக் கொள்கிறான் “ என்கிறது.
                முதல்வரின் மேற்கூறிய கூற்று கேள்விக்குறியாகிறது.
                ஒருவேளை இதற்கு அப்பால் இருக்கிறாரோ !
                அவருக்கான சுசான்ஸ் ( jouissance ) உறவுமுறையிலிருந்து அல்ல என்பதும் மேற்கூறியதிலிருந்து தெரிகிறது .
                அதிகாரத்தில் ( முதல்வர் ) இல்லாதபோதும் மக்களுக்கு வரும் துன்பத்தை செல்வி ஜெ. வே சுமக்கிறாரா ?
                மன அலசல் ,  அதிகாரம் பற்றி ஆண் / பெண் இருவருக்குமே ஆசை உண்டு என்கிறது.
                அதிகாரம் : இல்லாமையின்  ( lack ) குறிப்பான் ,
( காயடிக்கப்பட்டுவிடுவோம் ; அதைத் தவிர்க்கவேண்டுமானால் அதிகாரம் வேண்டும்) .
      அதிகாரம் : ஆசையின் குறிப்பான் , மேலதிக முக்கியத்துவமுள்ள குறிப்பான்.
      அதிகாரம்தான் சென்னை பாரிஸ்கார்னர் முதல் கன்னியாகுமரி அய்யன் சிலைவரை லட்சக் கணக்கானோரை மேடம் ஜெ . யின் காலில் விழவைக்கிறது .
      ஏன்  வாட்ஸ் அப்பில் ‘ “ உங்களுக்கு வரும் துன்பங்களை நானே சுமக்கிறேன் என்கிறார்.
       மற்றமை ( மக்களின் ) ஆசையின் ஆசைப்படுபொருளாக இருக்கவேண்டும் என்பது ( ஜெ ) தன்னிலையின் ஆசையாக உள்ளது . இது , மற்றமையால், தான் ஏற்கப்படவேண்டும் , அங்கீகரிக்கப்படவேண்டும் ( recognized ) என்பதற்கான ஆசையைக் குறிப்பிடும்  ” -  Calum Neill.
      ஆக ,  வாட்ஸ் அப்பில் ‘ பேசியது அன்பை , பாசத்தைப் பரிமாற அல்ல . மாறாக , அதிகாரத்திற்கான அங்கீகாரம் பெற மட்டுமல்ல . தன் சுசான்ஸை
( மகிழ்வை ) அதிகாரத்தின் மூலம் அடையவும்தான்.
      இதேமாதிரி மற்றொரு குரலும்  கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாவேன் எனத் தினமும் முகாரி பாடும் .
      லெக்கான் , “ கடமையாளர்கள் , தனிமனிதர்களின் நெறி உணர்வு ( Ethics ) , 
ஒரு தன்னிலையானது , சமூகக்கட்டமைப்பில் நனவிலியாகத்  தேடுகிற   நல்லது  குறித்த  பிரச்சினையை  எழுப்புகின்ற அந்தத்தருணத்தில்  நெறி துவங்குகிறது “ என்கிறார் .
      ……“  இப்போதுதான் தன்னை முன்னிறுத்துகிற ஆசையின் கட்டமைப்பு நெருக்கமாக இணைந்துள்ளது . அதாவது , தகாத உறவுக்கான ஆசையாக ( as a desire of incest ) இருப்பதை அந்தத் தன்னிலை கண்டுபிடிக்கும் என்கிறார் ப்ராய்ட்.
      ஆக , கடமை , அதிகாரம் என்னும் பெயரில் உறைந்துள்ள ஆசையின் வர்ணங்களை ( தகுந்த / தகாத ) ஆராய்ந்து அறிவது நமது கடமையாகிறது.
க.செ
16-2-2016




No comments:

Post a Comment