1 Feb 2016

முதலில் நமக்குள் உள்ள சாதியத்தைக் கொல்லுங்கள்

ராகுல் ஹைதராபாத்தில் உண்ணாவிரதம் ( 30-1-2016 ) இருந்தார் .
       இறந்த மாணவர் ரோஹித்தின் பிறந்தநாள் நினைவு கூறப்பட்டது .
                அந்தப் பல்கலைக் கழகத்தில் 4 ஆண்டுகளில் 18 தலித் மாணவர்கள் தற்கொலை என்பது , அப்படி ஒன்றும் அது  அல்பமல்ல.
       அந்தப் பல்கலைக் கழகத்தில் ஏதோ ஒருவகை வாழ்க்கை நடத்தப்பட்டு வந்திருக்கிறது ; வருகிறது . இதில் ஆராய்ச்சி மாணவர்கள் என்பதற்கு பொதுவான அர்த்தமொன்றும் , குறிப்பான (மறைபொருளாகவும் ) அர்த்தமொன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது எனலாம்.
                அதாவது ,  F C  ஆராய்ச்சி மாணவர்கள் என்றும் ,  S C ஆராய்ச்சி மாணவர்கள் என்றும் இருந்து வந்திருக்கிறது எனலாம்.
                பொதுவாக , மேம்போக்கான உறவு தலித்துகளோடும்  ;  மற்றவர்களோடு வேறுவகை உறவும் இருந்துவருகிறது.
                அதாவது , முதல் வகையினருக்கு தலித் உறவில் சுசான்ஸ் ( மகிழ்வு / திருப்தி )
( Jouissance ) இல்லை . அதுபோல் தலித்துகளுக்கு  F C - களுடனான உறவில் சுசான்ஸ் ( மகிழ்வு  / திருப்தி ) கிட்டவில்லை . அதாவது , அவர்களிடையே வித்தியாசமான சுசான்ஸ் முறையே இருந்துவருகிறது.
சுசான்ஸ் அரசியல்
                ஒருவருக்கொருவரின் உறவில் சுசான்ஸ் நிறைவளிக்கவில்லை ( Other’s jouissance is insupportable  ) .  F C - களிடம் தீட்டு ( taboo ) என்ற நனவிலி உள்ளுறைந்துள்ளது ; ஒவ்வொரு கலாச்சார நடத்தையிலும் அதன் சாயலைத் தேடி உண்மையான மாணவர்கள் , மனிதர்கள் , உறவுக்குக் குந்தகம் விளைவிக்கிறது அது.
              S C  மாணவர்களிடம் தாம் இரண்டாம்தர குடிமகன் என்ற கட்டப்பட்ட கலாச்சார ஒடுக்குமுறை நனவிலியாக உறைந்துள்ளது.
             F C  நடவடிக்கைகளை சந்தேகத்துடனே , தாக்குதலுக்கான தயார் மனநிலையிலேயே இருக்கவேண்டிய கட்டாயத்தில் ( obsession ) உள்ளனர்.
                அடிப்படையில் ஒன்றை அனைவருக்கும் நினைவூட்டவேண்டும் . அது மன அலசல் ஆராய்ச்சியாளர் சிசாக் கூறியது :
       “  The ultimate incompatibility is not between mine and other’s Jouissance, but between myself and my own jouissance , which forever remains an ex-timate  intruder  “  – zizek.
                இங்கு ஒரு முட்டுச்சந்தை ( deadlock ) எதிர்கொள்கிறோம். ஒவ்வொருவரின் சுசான்ஸிற்கும் மற்றவரின் பண்பு மீதான முன்னிலைப்படுத்தலே முக்கிய காரணியாக உள்ளது.

                ஆனால் , சாதியம் என்ற பண்பு , எண்ணப்போக்கு , கலாச்சாரம் , தீண்டாமை ஒரு படிநிலை நிறுவனமாக உள்ளது. ஆனால் , ரூபமாக அது இல்லை .

             அது அனைவரது ( சமூகத்தில் ) மனத்திலும் நிரம்பிவழிகிறது . அதைப் பாராளுமன்ற அரசியல் நெய்யூட்டி வளர்க்கிறது.

                சாதி அடையாளமாக , அரசியலாக , தனக்கான இடத்தை , உற்பத்தி உறவில் , கல்விக் கூடத்தில் இடம்பிடித்து , ஜீவித்து , அது ஒவ்வொரு தனியனிடமும் உந்தலாக  ( drive ) , சித்தத்தில் ஆட்சி  செலுத்துகிறது.    இந்தத்  தீட்டை எப்படி மனத்திலிருந்து கலாசாலையும், பாராளுமன்றமும் நீக்கும். 

       திருமணம் , கலாசாலை , உற்பத்தி உறவு போன்ற  Elements  (  கூறுகள்  ) சாதியை மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இது பொறாமைக்கு (  jealousy ) வழி வகுக்கிறது.

       பொறாமை அரசியலுக்கு ஒரு உதாரணமாக ஹிட்லர் கூறியதாகக் கூறும் கூற்று கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது . அது We have to kill the Jew within us . இங்கு பொறாமை நனவிலியாக கொலைவெறிக்கான உந்தலாக உள்ளது.
                புறத்தை ஆய்ந்து  PhD  வாங்குவதோடு அகத்தை ஆய உள்நோக்கி பயணம் தேவை. அதற்கான திட்டம்  (  agenda ) அரசியல்வாதிகளிடமும் , அதிகாரவர்க்கத்திடமும் இல்லையே ! அவர்கள் சாதியத்தை ஆயுதமாக பயன்படுத்தும் வியாபாரிகள்.  
          
                இனியாகும் சமூக மனிதனின் நெறியாகவும்  , சுசான்ஸாகவும் அது  இருக்கும்போதே ;நான் யார்? என்ற உள்முகத் தேடல் இருக்கும்போதே சாதியம் என்ற நனவிலியை உயிரூட்டமில்லாமல் இருக்க வைக்க முடியும் .
க.செ
விநாயகம்
1-2-2016


No comments:

Post a Comment