19 Oct 2016

ஒரு கட்டாய விடுப்புக்குப் பின் மீண்டும்... மற்றமை

          1919 - ல் இத்தாலியில் ஒரு புதிய அரசியல் கட்சி கட்டப்பட்டது .
                அது இதுதான் .  “  பாசிஸ்ட்.
                தன் அரசியல் திட்டமாக முழக்கமிட்டது ....படுகவர்ச்சியாக .
        இத்தாலியை பழைய ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தின் உன்னத நிலைக்கு உயர்த்தவேண்டும் என்றனர்.
       1922 -ல் ஆட்சியைப் பிடித்த பின் செய்த காரியம் ஒன்றுதான் . ஹிட்லருடன் ( நாஜி ) இணைந்து இரண்டாம் உலக யுத்தத்தை துவக்கியதுதான் மக்கள் கண்ட பலன் ; பழைய ரோமாபுரி ஆட்சியை அல்ல.                 ஆனால்,பாசிஸ்ட்டுக்கும் , நாஜிக்கும் “ நிரந்தரப் போராட்டம் , மனித இனத்தை , பலசாலியாக்கியிருக்கிறது ; நிரந்தர சமாதானம் , மனித இனத்தை அழித்துவிடும் ...    – தினமலர் . செப்.18.2016.
       இதுதான் மாவல்லமையின் (  grandiose narcissism )  ஆரோக்கியமற்ற மனம்.
     இதனின் எளிய வடிவம்
        கணவனை செல்போன் திருடியதற்காக கண்டித்த மனைவியை மூன்று முறை
 ‘  தலாக் ‘ கூறி விவாகரத்து செய்தார் தி இந்து 13-10 2016
தனிமனித ஒழுக்கம் , சமூக ஒழுக்கம் என்று பெண் பேசிவிட்டால்.... ஆணின் மாவல்ல சுயமோகம்  மனக்காயத்தால் துடிதுடித்து விடுகிறது . விளைவு மனைவிக்கு தண்டனை வழங்கல்தான் . ஆண் என்பது பெண்ணுக்கு எட்டாத மாவல்லமையானது.

 “ சர்ஜிகல் ஸ்ட்ரைக் ( Surgical Strike ) பற்றி விவாதிப்பது ராணுவத்தை அவமானப்படுத்துவதாகும் – வெங்கைய நாயுடு.
       பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் , தீவிரவாதிகள் மீது மிகத்துணிச்சலாக நமது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் சந்தேகங்கள் எழுப்புவது ராணுவத்தை நாம் அவமானப்படுத்துவது போலாகும் ...
[ மாவல்ல சுயமோகத்தின் (  grandiose narcissism )  பதில் ... “ சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி ஆதாரம் கேட்பதற்கெல்லாம் பதில் அளிக்கவேண்டியதில்லை....]
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொன்றுவிடும் மாவல்லமை .
[ ஈராக்கில் அமெரிக்க ராணுவம் செய்த அட்டூழியங்களை மறந்து போகலாமா? ராணுவம் கேள்விக்கு உட்படாததா ? குறைவற்றதா ” ?!.   வேதம் சொல்லும் “ பிரம்மமா அது ? ]
       பிரம்மம் .......அது ? .   அப்படித்தானே !


பிரதமர் நரேந்திர மோடியின் பெருமிதம்

        நாம் விஜயதசமியை கொண்டாட உள்ளோம்.இந்த ஆண்டின் விஜயதசமி நமக்கு மிகவும் சிறப்பான நாள் ஆகும் . தீய சக்தியை வென்றதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் “ ....
        [ “  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 7 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் சமீபத்தில் அதிரடியாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதை மனதில் வைத்து மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். பிடிஐ “ ] - தி இந்து 10,10,2016.
       இது மோடிஅவர்கள் , சரஸ்வதி பூஜை , இன்று பிரபலமாகி வரும் விஜயதசமி அன்று பேசியது.
       விஜயதசமி இந்து சமயத்தில் ஒரு பண்டிகை. அதற்கே உரிய பாரம்பரிய காரணங்களுடன், அதாவது , வாழ்வின் வெற்றிக்கான மூலப்பொருட்களான ஆயுதங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வணங்குவது மூலம் நன்றி செலுத்துவது. இது புராணகாலம் தொட்டு வந்திருக்கிறது.
       பாகிஸ்தான் மீதான    Surgical Strike  (  துல்லிய தாக்குதல் ) மிகச் சமீபகால , இந்திய ராணுவத்தின் ஒரு நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கை மோடி அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இதன் வெற்றியை உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காக  மாவல்ல சுயமோகம் (  grandiose narcissism ) இதை விஜயதசமியுடன் இணைத்து விடுகிறது. அதாவது இனிவரும் ஆண்டுகளில் இந்த வெற்றியும் , விஜயதசமியும், மோடியும் பிரிக்க முடியாதவையாக நினைவுச் சுருளுக்குள் இருக்கும்.-விஜயதசமி என்பது மக்களின் ஆசைப்படுபொருளாகும் .அதற்குள்தான் மோடி தன் அரசியலைச் செயல்படுத்துகிறார்
       இந்த ஆரோக்கியமற்ற மனம் தொன்மையான ஆதி ஆசைப்படு பொருளான ( archaic object )  விஜயதசமியையும் , நவீன காலத்தின் சம்பவத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும். இதைச் செய்யாமல் இரண்டையும் ஒன்றாக்கி தன் மாவல்லமைக்கு எடுத்துக்காட்டாக மக்கள் மனதில் ஒரு கருத்துருவத்தை கட்டுகிறார்கள்.
      இது ஆரோக்கியமற்ற சுயமோகத்தின் பீடிப்பாகும்.
      சர்ஜிகல் ஆபரேசன் பற்றி நாடு முழுவதும் விவாதம் “ – மோடி.
18-10-2016 டிவி செய்தி.

எதில் இருக்கிறது கௌரவம்
        “ தீவிரவாதிகளின் மீதான ராணுவத்தின் துல்லிய தாக்குதல் நாட்டின் கௌவரத்தை உயர்த்தியது-ஆர் எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். - தி இந்து 12-10-2016.
       இங்கும் நாட்டின் கௌவரம் உலக அரங்கின் உச்சாணியில் இருக்க வேண்டும் என்ற பெரு ஆசையே , அந்த நிலையே கௌரவம் என்று இந்த மயங்கிய மனம் புரிந்து கொண்டிருக்கிறது. ராணுவமும் , நாடும் வேறுவேறானது. நாட்டின் கௌரவம் என்பது பல பரிமாணங்கள் கொண்டது . அது ராணுவத்தால் மட்டும் உயர்த்தப்படுகிறது என்று பேசுவது ஆரோக்கியமற்ற பாசிச போக்காகும்.  




ஆசையின்  கருத்துருவம்   உருவகமாக
     பாவம் இராவணன்
       பாவம் இராமன்
       இந்த புராதன நாயகர்களின் புகழில் பங்கு போட புதிதாக வந்துவிட்டனர்.
       பத்துத் தலை இராவணனாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் ;
       அவனை வதம் செய்யும் இராமனாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவதாரம் எடுத்துள்ள இடம் டிஜிட்டல் பேனர்கள் .
       ஊர் , உத்திரப்பிரதேசம் .  A “  Idea
        ஐடியா வுக்குச் சொந்தக்காரர்கள் சிவசேனா கட்சியினர் .
 – தகவல் சேகர் குப்தா . தி இந்து 12-10-2016
கவனிக்க : பரப்புரை
1.        சர்ஜிகல் ஆபரேசன் பற்றி நாடு முழுவதும் விவாதம் “ – மோடி.  .
 18-10-2016 டிவி செய்தி.
2.        .... எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய திடீர் தாக்குதலை இஸ்ரேலின் எக்ஸ்ப்ளாய்ட்ஸ் முறை வியூகத் தாக்குதலுக்கு நிகரானது . எல்லையில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் குறித்து தற்போது உலகளவில் பேசப்படுகிறது. நமது ராணுவத்தின் திறன் மற்றவர்களை விட எந்த வகையிலும் சளைத்தது இல்லை என்பது உலக அரங்கில் நிரூபணமாகியுள்ளது ” .
( இமாச்சலப் பிரதேசத்தில் மூன்று நீர் மின் திட்டங்களை அர்ப்பணித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பேசியது ) – http:// tamil.thehindu.com /india . 18-10-2016
க.செ


No comments:

Post a Comment