4 Dec 2013

தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது

வெட்ககரமானது என்ற தலைப்பிலிருந்து,
........” இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவின் 354ஏ, 354பி, 376, 376(2) ஆகிய பிரிவுகளின் கீழும், பணியிடங்களில் பெண்களுக்குத் தொல்லை தருவோரைத் தடுக்கவும், தண்டிக்கவும் வகை செய்யும் சட்டத்தின் கீழும் கோவா மாநிலப் போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்து உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து வருகின்றனர்.”                        - நவ 26, 2013, தி இந்து.

இப்படி ஒரு சட்டம் இருப்பது, “ தெகல்கா “ பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு தெரியுமா ?  தெரியாதா ?  தெரிந்துதானே ”தன்னுடன் சேர்ந்து வேலை பார்க்கும் பெண் பத்திரிக்கையாளரை, நவம்பர் 7ந் தேதி நட்சத்திர ஓட்டலின் மின் தூக்கிக்குள் (லிப்ட்) திட்டமிட்டுத் தள்ளி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறார்.....”

….. “ அதே செயலை அடுத்த நாளும் செய்ய முயற்சித்திருக்கிறார்.  பின்பு மீண்டும் மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டு தன்னுடன் பேசுமாறு அச்சுறுத்தியதுடன் நடந்த சம்பவத்தை ஏன் என் மகளிடம் சொன்னாய் என்று சீறியிருக்கிறார்......”

ஊடகத் தலைமை ஆசிரியருக்கு எல்லாம் தெரிந்தும் ஒரு பெண்ணிடம், தன் சகாவிடம் பலாத்காரம் செலுத்த எப்படித் தைரியம் வந்தது?ஏன் வந்தது? தெகல்கா தலைமை ஆசிரியர் தருண்தேஜ்பாலுக்கு, தேஜ்பாலின் நடவடிக்கை தனிமனிதச் செயல், அதற்கான தண்டனை என்பதோடு விசயத்தை முடித்துக் கொள்ள ஊடகங்கள் முயற்சிக்கிறது, கட்சிகளும் அப்படித்தான்.

ஒரு ஆண், பெண்ணை பலாத்காரத்திற்கு அடிபணியவைக்க நடந்த முயற்சி என்பதோடு நிறுத்திவிடாமல், தலைமை ஆசிரியரின் இந்த நடத்தையை ஒரு செய்தியாக வாசித்தால் இந்தச் செய்தி செய்திப்பரிமாற்றத்திற்கானது இல்லையா?

அதாவது, ஒரு ஆண், பெண் என்ற உறவில் மட்டும் இந்த நடத்தை வெளிப்படுகிறதா?  அப்படிச் சொல்ல முடியாது. 
இந்த நடத்தை ஒரு குறி (sign) அல்லது பிரதிநிதி.  ஒரு குறிப்பிட்ட உறவை அல்லது capacity - யை பிரதிநிதித்து வப்படுத்தவில்லையா?  அதாவது , தலைமை ஆசிரியர், மத்திய ஆளுங்கட்சிச் செல்வாக்கு உள்ளவர், அவரின் திமிர் உணர்வும் சேர்ந்துதானே இரண்டாவது நாளும் ஒரு பலாத்கார நடவடிக்கைக்கு முயற்சி செய்திருக்கிறது.  மேலும், தருண் தேஜ்பாலுக்கு இருப்பதென்ன?  சுயமோகம் என்னும் நோய் பீடித்துள்ள கலாச்சாரத்தால் செலுத்தப்படுபவராக, அதைத் தாங்கிப் பிடிப்பவராக இருப்பவர் இவர்.

இந்த சுயமோக நோய்க் கலாச்சாரத்திற்கு , “ Now  you are in Goa; drink as much as you want ” (The Hindu  , 23-11-2011 ) இந்தப் பொன்மொழி தேஜ்பால் உதிர்த்தது ;  ஆண்டு 2011, மேலும், அவர் நடத்தும் “ Think fest  “-ல் அவர் கூறியது, “eat and sleep well with any one you think of , but get ready to arrive early as we have packed house  ”  .  ( இதனை தமிழில் மொழியாக்கம் செய்தால் இப்படிக் கூறலாம் :  ” நீங்கள் கோவாவில் வேண்டுமளவு குடிக்கலாம் ;  நன்றாக சாப்பிட்டு, விரும்புபவருடன் படுத்து உறங்கலாம் ; விரைந்து வாருங்கள்... ” ). எந்தக் கலாசாரத்தை இந்தத் தேஜ்பால் பதாகையாக உயர்த்திப் பிடிக்கிறார்.  இதற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களும், கோவா, இந்திய ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் எத்தனை லட்சம் செருப்புகளை வீசினர்?  (கண்டனத்துக்கான உருவகம்) .  ஏன் வீசவில்லை?  இதை அன்றே செய்திருந்தால் தன் சகதோழியை ஒரு பொது இடத்தில் சீரழிக்க இப்போது முயற்சி செய்திருப்பாரா இந்த ஆள்.  “தனிமனித சுதந்திரம்“ (கருத்து) என்று இதற்குப் பெயர் சூட்டி, இந்த நடத்தைக்குப் போகும் தைரியம் வந்திருக்குமா?  நடத்தையை செயல்படுத்தும் தைரியம் வந்திருக்குமா?

அவரின் சுயமோகம் நோய் பீடித்துள்ள கலாச்சாரத்திற்கு ஆட்பட்டது. இதை அவர் உணரவுமில்லை, யாரும் உணர்த்தியது மாதிரி தெரியவும் இல்லை.
   
“ சுயமோகம் அன்றாட வாழ்க்கையில் நிலவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததையும் தனதாக்கிக் கொள்ளுகிறது . அன்றாடச் செயலில் பிறரிடம் பணிவை எதிர்பார்ப்பது , சமூகத்துடன் இணைவு இல்லாமை, ஒரே கெத்தாக தன் நிழலைப் பார்த்தே காலத்தைக் கடத்துவது, ஜனநாயக மறுப்பு, பாசிசப்போக்கு, அனைத்தும் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற என்ற கோஷத்தில் மக்கள் விரோத நடவடிக்கை”                                        - சிசாக்.

ஆக, சுயமோகக் கலாச்சாரம், அதைப் பிரதிநிதித்துவம் பண்ணும் தன்னிலைகளுக்கு பொதுவெளி என்ற எண்ணமோ மரியாதையோ, பெண் என்பவளை ஒரு தன்னிலையாகப் பார்ப்பதற்கு பதில் ஒரு  object - ஆகத்தான் பார்க்கிறார்கள், பார்ப்பார்கள் என்பது கவனத்துக்குரியது.

தனியார் அலுவலகமாக இருக்கட்டும் அல்லது அரசு அலுவலகமாக இருக்கட்டும் இந்த வகைச் சுயமோகப் பிரதிநிதித்துவங்கள் கலாச்சாரமாக இருக்கும் வரை இம்மாதிரிப் பலாத்காரம் ( aggressivity  ) போன்றவைகள் வாடிக்கையாகத்தான் இருக்கும்.  இந்த வளமை நீடித்துக்கொண்டுதான் இருக்கும்.

இங்கு  seduce  பண்ணுவதற்கும் (மயக்குதலுக்கும்) பஞ்சம் இராது . ஆக, இ.பி.கோ தண்டனைகள் நடந்தவைகளுக்கானது.  நடக்கப் போவதற்கு?  பள்ளி முதல் ஆகாய விமானம் உட்பட பெண்தன்மைக்கு ஒரு காத்திரமான நெருக்கடி இருந்துகொண்டே இருக்கிறது.
   
இந்தத் தளத்தில் (space) புதிய தன்னிலைகளை, அதாவது பெண்ணை  object ஆக இல்லாமல் தன்னிலையாகப் பார்க்கும் சித்தக்கட்டமைப்பை எப்படிக் கட்டமைக்கப் போகிறது இச் சமூகம் .  காத்திரமான விவாதத்திற்கு தயாராவோம்.

குறிப்பு :
வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த அவலத்திற்கு முடிவு கட்டும் திட்டம் எந்தக் கட்சிக்கேனும் உண்டா என்பதை ஓட்டளிப்பதற்கு முன் பரிசீலிக்கவும்ஃ

ஆக – 21, 2013,, இந்தியா டுடே-யில் அடுத்த பிரதமர் எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற கேள்விக்கு

 ஊழல் ஒழிப்பு         பொருளாதார          பயங்காரவாத்த்               பெண்கள்
                                     ஸ்திரத்தன்மை       திலிருந்து காப்பது        பாதுகாப்பை
                                                                                                                          உறுதிசெய்வது
         70%                                   13%                                 10%                                   4%


இந்தப் பிரச்சினை, அதாவது பெண்ணின் பாதுகாப்புப் பிரச்சினை நாலாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.யாரிடமிருந்து என்றால் பி.ஜே.பி தலைவர் திரு.எல்.கே.அத்வானியிடமிருந்து.
                                           
                                                                                                          க.செ

                                                                                  மற்றமை – 5வது இதழுக்காக


No comments:

Post a Comment