மதுரையில் முருகபக்தர்கள் மாநாடு.. இது ஒரு கற்பனைப் பொருள், பகற்கனவுப் பொருள்.
ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது? முருகனை விட்டுவிட்டு, முருகனைக் கனவாக / பகற்கனவாக காணும் தன்னிலையை (சுயம்) விசாரணைக்கு உட்படுத்தினால், இந்தப் புனைவு (FANTASY ), பகற்கனவு (அதாவது எண்ணம்) ஏனென்று புரியும்.
நீண்டகாலமாக தாமரையை ( BJP
) முளைக்கவைக்க முயற்சி
நடக்கிறது. இந்த இச்சை ( DESIRE ) -- ( WISH அல்ல) . இச்சை (DESIRE ) என்பது நனவிலி ஆசை (உளவியல் ஆசை). இது அடக்கப்பட்டதால் ஏற்படும்
ஆசை. அதாவது நீண்டகாலமாக தமிழ் மண்ணில் புறக்கணிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு, அடக்கப்பட்டு வருகிறார்கள் (தேர்தலில்).
இந்தத் தோல்வி அடக்கப்பட்ட ஆசை.
மீண்டும் மீண்டும் நனவிலியாகத் தோன்றுகிறது .
அப்படித் தோன்றும் இச்சை (DESIRE ) க்கு ஒரு புனைவு (FANTASY ) , கற்பனைவடிவம் உளவியலாகத் தேவைப்படும். அப்படித் தேவைப்படும் புனைவு (FANTASY )
தான் முருகபக்தர்கள்
மாநாடு. இச்சையைப் பூர்த்திசெய்ய எழுந்த இந்தப் புனைவு (மாநாடு),
பகற்கனவு திருப்தியை
ஒருவேளைத் தரக்கூடும் அவ்வளவுதான்.
க.செ
19.06.2025
படம்: முருகன் சிலை, வடக்கு கம்பூசியா,கி.பி-7
தட்டச்சு: சிவக்குமார்
நெறியாளர்: புகழேந்தி
No comments:
Post a Comment