21 Feb 2015

நானே மோடி ! நானே ராஜா !



நானே ராஜா  என்பது சிவாஜி , எஸ். வி. சுப்பையா நடித்த படம். வக்ர சுயமோகமுள்ள தம்பி எஸ். வி. சுப்பையா. அண்ணனின் அரச பதவியை ( சிவாஜி ) கைப்பற்ற நினைக்கும் பேராசை பற்றிய படம் அது. அரசனை ( சிவாஜியை ) கைது செய்துவிட்டு தன் மாளிகையில் ஆளுயுர கண்ணாடி முன் நின்று , நானே ராஜா ! ; நானே ராஜா !! என்று புல்லரித்து தன் பிம்பத்தைப் பார்த்து பூரணத்துவம் அடைவார் ராஜா.
   
பொதுவாக, தனியன்கள் சமூகக் குழுக்களுக்குள் வாழும்பொழுது சுயமோக வளர்ச்சிக்கான அமைப்பு அங்கில்லாததால் அந்த ஆசை நிறைவேறுவதில்லை. 
      பின்னர் , அரசியல் , கட்சி எனும்போது அதிலேயும் அடக்கித்தான் சுயமோகம் வெளிப் படுகிறது. ( தமிழ்நாடு விதிவிலக்கு )
      பாரதப் பிரதமர் பதவி அப்படி அல்ல. உச்சபட்ச சுயமோக வெளிப்பாட்டிற்கான அமைப்பு (structure) இருக்கும் போல் தெரிகிறது. சட்டரீதியாக இல்லை என்றுதான் தோன்றுகிறது.
      ஆனால், மோடி அரசபதவி ஏற்றபின் அவரின் அங்கங்களை மறைக்கும் உடைகள்
 ( தலைப்பாகை உட்பட ) வர்ணங்களும், கவர்ச்சிகளும், சுயமோகமும் வளர்ந்து ( self love ), அமெரிக்க அதிபருக்கு இணையாக தன்னை பிம்பப்படுத்தி , அவரை வரவேற்க மோடி அணிந்திருந்த மேல்கோட்டில் தங்க சரிகையில் மோடி, மோடி என்று எழுதப்பட்டிருந்தது உட்பட பல லட்சம் பெறுமானம் உள்ள உடையாக இருந்ததாம் . தான் எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என்ற சுயமோக ஆசை வெற்றி பெற்று, பிரதமர் என்ற அதிகார தளம் ( phallus ) நெறிகள் அற்ற, பகட்டானதாக இப்போது காட்சியளிக்கிறது. இனி அது கீழ்நோக்கி, கலாச்சாரமாக வரும் நாள் தொலைவில் இல்லை.
க.செ
©the author

No comments:

Post a Comment