10 Dec 2014

BJP-யின் விஸ்வரூபம்

பகவத் கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்கவேண்டும்”.சொன்னது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.-டிச.9.2014. தினமலர்.
மேலும் அவர் கூறுகையில் இந்துக்களின் புனிதநூலான பகவத்கீதையை தேசிய புத்தகமாக பிரதமர் நரேந்திரமோடி அறிவிக்க வேண்டும் என்றார்.
சென்ற மாதத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாசாலை பள்ளிகளில் மூன்றாம் பாடாமாக இருந்த ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதத்தை அமுல்படுத்தவேண்டும் என்றனர். [...ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் என்ற உத்தரவு நீடிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு தேர்வில் சமஸ்கிருதம் இருக்காது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது…இது பற்றிய விவாதம் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 16-ல் நடக்கவுள்ளது” -NDTV.com.Dec,09.2014
ஒரு ஆண்டுக்கு முன்னால், "நான் மட்டும் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்தே பகவத் கீதை, மகாபாரதம் ஆகியவற்றை கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்திருப்பேன்' -நீதிபதி ஏ.ஆர்.தவே

கீதை, சமஸ்கிருதம் போன்றவைகள் primordial. ஆதித் தந்தையின் அடையாளமாக, ஆதித் தந்தையின் அங்கலட்சணமாக கருத்தியல்(ideology) மேலாண்மை (hegemony)  கூறிவந்தது; கூறிவருகிறது. அதாவது,பிராமணியத்தின் தனிச்சொத்துரிமை என்ற புனைவை யதார்த்தமாக்க நடக்கும் முயற்சி இது.(ஒரு மொழி எந்த சாதிக்கும் சொந்தமாக இருக்க முடியாது). அப்படி உரிமை கொண்டாடுவது பிற்போக்குத்தனமானது, போக்கிரித்தனமானது என்று கூறுவதை விட்டுவிட்டு ஒரு மொழியையே மறுக்க வேண்டிய அவசியமில்லை. (இதுவேறு விசயம்)
ஆக, இப்போது மேற்கூறியவைகளில் இருந்து சமஸ்கிருதம், பகவத்கீதை என்று அதற்கு புனித அந்தஸ்தைக் கோருவது என்பது தற்செயல் அல்ல.
அகண்ட பாரதம், இந்து ராஜ்ஜியம் போன்ற Fantasy   (புனைவு)-கள் அவர்களுடைய     Desire -, இச்சையை நீடிக்கச் செய்வதற்கானது. உண்மையில் இது நடக்க முடியாதது; மொழியால் சொல்லப்பட முடியாதது. மனஅலசல்படி இதை real   எனலாம்.
இவைகள் அவர்களுடைய பகுதி, ஒடுக்கப்பட்டது; அதில் மூழ்குவதை இதுவரை அரசியலால் தடுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த ஆசை எப்போதும் Fantasy - யாகவே வெளிப்பட்டு வந்திருக்கிறது. இதை ŽIŽEK-ன்  மொழியில் சொன்னால் real:
it is part of ourselves, repressed, that resists immersion, that needs to go through fantasy and accept it.    -The real-ŽIŽEK.
 இப்போது BJP-யைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா போன்றவர்கள் உண்மையில் கீதையைப் புனிதப்படுத்துவதற்காக மட்டும் அதைச் சொல்வதில்லை;அதைக் கோருவதில்லை.
   
    மாறாக, அவர்களின் ஒடுக்கப்பட்ட, வெளிப்படுத்த முடியாத, சொல்ல முடியாததான ஆசையை, ‘Hindu Raj’-ஐ கீதையாக உருவகப்படுத்துகிறது (metaphor). அதாவது, கீதை இவர்களின் மேலாண்மைக் கருத்தியல் மட்டுமல்ல; இவர்களின் பேராசையின் உருவகமும் கூட.
இந்த இடத்தில் real ( இது எதார்த்தத்தைக் குறிக்காது) என்ற கருத்தமைவைப் பற்றி கொஞ்சம் விரிவாக, ஆழமாகத் தெரிந்து கொள்ள ŽIŽEK -ன் எழுத்தை அப்படியே கொடுக்கப் படுகிறது:
“The Real appears fantastic and incredible, impossible even, because it is impossible in our everyday realities(it is not meant to happen, it is not supposed to be an option at all)and when it intrudes in them, even briefly, it seems like a nightmare. The only way to process the Real is through a sort of ‘translation’ into some thinkable. In other words, the Real might only be looked at indirectly”.
இனி புனித அரசியல்
'அரசியல் சட்டமே ஜனநாயகத்தின் புனிதப் புத்தகம்' என்று கூறுவதாக பத்திரிகா தர்மம் சொல்லுகிறது.
இப்படிக் கூறுவது ஒருநம்பிக்கை(belief ) மட்டுமே. அது ஒருகருத்தியல்(ideology ) மட்டுமே. மொழியில் உள்ள கூற்றில் கருத்து மட்டும் இல்லை; மனமும் அந்தக் கருத்துக்கடியில் உறைந்திருக்கும். இது மனஅலசல் உண்மை. ஆகவே புனிதம்என்ற கருத்தாக்கத்தில் உறைந்திருப்பதை மனஅலசல் இப்படிக் கூறுகிறது:
....”purity can therefore be defined as a narcissistic ideal of omnipotence and absolute sovereignty (well being)that is completely free from the instinctual dimension”.     - On Narcissism- Bela Grunberger.
இதை எளிமையாக விளக்கினால், புனிதம் சுயமோகத்தின் உச்சமும்(தனி)ஆட்சி உரிமை கோருவதுமாகும்.
இது ஒரு வகையில் பேரகனின் (super ego) கோரிக்கையாகும். அதாவது ஆதித்தந்தையின் கோரிக்கையை, லட்சியக் கனவை நனவாக்கும் முயற்சி எனலாம்.
"சுயமோகம் என்பதே புனிதம்தான் (pure)" என்கிறது மனஅலசல்.
இதை விளக்க Bela Grunberger என்ற ஹங்கேரி உளவியலாளர் Monad  என்ற கலைச்- சொல்லை உபயோகப்படுத்துகிறார். சுயமோகம் தான் புனிதம் என்று தன் பிம்பத்துடன் இணையும் முயற்சி இது.[ இந்த பிம்பம் உடைபடும்போது வலுத்தாக்கு எண்ணம் (aggressivity )  காத்திரமாக வெளிப்படும். இது ஒரு சாதாரண மனிதனுக்கும் பொருந்தும் ].
(Monad) மோனாட் என்பது கரு(Fetus)வானது ஏதோ ஒன்றினால் சூழப்பட்டுள்ளது.(ஒரு நிலை)(பருப்பொருள் அல்ல அந்த நிலை). அது அந்தக் கருவின் பார்வை(view). ஆகையால் புனிதம் என்பது ஒரு புனைவு. ஆனால், அதால் தீவிரமாக கட்டுண்டு கிடந்தால்... "purity is a force and value in its own right".     
 
புனிதத்தின் உச்சவெறிக்கு மனஅலசல் கொடுக்கும் உதாரணம்,
உனது கண் உன்னைப் பங்கப்படுத்தினால் அதனைப் பிடுங்கியெறிந்துவிடு-Gospel   (திருமறை).
புனிதம் என்ற புனைவு வாழ்வனுபவத்தின் வலிமை பெற்றதாகும். இதை எந்தவிலை கொடுத்தாவது பாதுகாக்கப்படவேண்டும். இதில் குறுக்கிடும் எதனையும் அழித்தாவது இது நிறைவேற்றப்படும்.
இதற்கான வரலாற்று உதாரணம் ஹிட்லர். ஹிட்லரின் பாசிசமும், ஆரிய ரத்தத்தை சுத்தப்படுத்த லட்சங்களில் யூதர்களைக் கொன்றழித்த பாசிசப் புனிதம் நினைவுக்கு வருகிறது.நினைவு கூற வேண்டும்.
இறுதியாக புனிதத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற நீங்கள் எத்தனிக்கும் தருணம் பாப்ரி மஸ்ஜித் மனக்காயம் இன்னும் ஆறவில்லை. அதுபோக இதரரின் (others) (நீங்கள் நினைக்கும்) மதஅரசியலும் அரசியல்தளத்தில் கொலுவாக உள்ளது. சாதியால்/மதத்தால்/பிளவுண்ட மக்களிடம் பகை உணர்வுக்கு நெய்யிடாதீர்கள்.
        வெளிப்பட்டது...
நனவிலி அரசியலாக -லெக்கான்.
ஒடுக்கப்பட்டது மீண்டும் தலைதூக்குகிறது.


ஆதாரம்: Bela Grunberger- On Narcissism

No comments:

Post a Comment