11 May 2018

உங்களுக்கு வந்தா ரத்தம்

எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்டினியா ?



இது பழமொழி அல்ல. பழமொழி மாதிரி தெரியும் ஒரு சொல்லாடல், அரசியல் சொல்லாடல். இது கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வெளிப்பட்டது.
அதாவது, கர்நாடக சட்டசபைத் தேர்தலில் இப்போதைய கர்நாடக முதல்வர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
சித்தராமையாவின் பேராசையால் தன் மகனுக்கும் ஒரு      சட்டசபைத் தொகுதியை ஒதுக்கியுள்ளார்.
இநத பகாசுர பசிக்கான ஆசையையை பிஜேபி      கதாநாயகனும்,இந்திய பிரதமருமான மோடி,    சித்தராமையாவின் பயமாகவும்,கட்சித் தொண்டர்களின் வாய்ப்பை தந்தையும் மகனும் அபகரித்து விட்டதாகவும் விமர்சித்தார். எங்கு ? தனது டிவிட்டரில்.
இதற்கு சித்தராமையாவின் சீற்றம்தான் “ உங்களுக்கு வந்தால் ரத்தம் ; எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா “? ( தகவல் ; தினகரன் .2-5-2018)
ஏன் அப்படிச் சொல்கிறார் என்பதை அவரே விளக்கிவிடுகிறார்.
சித்தராமையா தனது டிவிட்டர் பதிலில் பிரதமர்       மோடி வாரணாசியில் மட்டும் போட்டியிடவில்லை; வதேரா தொகுதியிலும் போட்டியிட்டது ஏன் என்று கேட்டுள்ளார்.
கடந்த பாரளுமன்ற தேர்தலில் மோடியின் பயம் ; எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஆசைதான் 2 எம்.பி தொகுதிகளில் போட்டியிட வைத்தது. அதாவது ‘ஆசைப்படு பொருளாக எம்.பி தொகுதி உள் உறைந்துள்ளது.
இதை கர்நாடக காங்கிரஸ் முதல்வர்  “ நான் தக்காளி சட்டினி, நீ  ரத்தமா?என்று கேட்டுள்ளார்.
இதுவரை கண்டது அரசியல் சொல்லாடல். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு பழமொழியைப் பார்க்கலாம்.
காலில் பட்டது கண்ணில்பட்டது போல்
இந்தப் பழமொழி நேரடிப் பொருளுடன், ஒருவரின் அறிகுறியை ( symptom ) குறிப்பிடுகிறது. இந்தக் குறி  ஒரு நிகழ்வையே ( phenomena ) குறிப்பிடுகிறது.
மொழியில் வெளிப்படாத நபர் மற்றொருவரின் வெளிப்பாட்டையே குறிப்பிடுகிறார். .அதாவது, காலில் பட்டது என்பது நடந்தது.அதைத் தன்னின் மிகு உணர்ச்சியால் –கண்ணில்பட்ட காயம்போல் வெளிப்படுத்துகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
பிரதமர் மோடி தனக்கு வந்த பயத்தை ரத்தமாகவும் ,முதல்வர் சித்தராமையாவின் பயத்தை தக்காளிச் சட்டினியாகவும் வெளிப்படுத்துகிறார். பிரதமர் மோடி தனக்கான பாதிப்பை மிகு உணர்ச்சியால்-அதாவது,நனவிலி உந்தலால்-காலில் பட்ட ஒன்றை கண்ணில் பட்ட ஒன்றாக ,அதாவது, காலில் பட்டது கண்ணில் பட்டது போல என்பதை, ஒரு மிகு உணர்ச்சிக் கோளாறு என்று கூறலாம்.பிரதமர் மோடியிடம் இந்த மிகு உணர்ச்சி கோளாறு இதற்கு முன்னரும் பல நேரங்களில்  வெளிப்பட்டிருக்கிறது  .
இந்த மிகு உணர்ச்சி வெளிப்பாடு சுயமோக ஆளுமைக் கோளாறிலும் வெளிப்படும்.
இவர்கள் தான் பிறரால் கவனிக்கப்படவேண்டும் என்ற தீவிர ஆசை உள்ளவர்கள் ( மோடி ரூபாய் லட்சங்களில் ,விலைகளில் தன் உடைகளுக்கு செலவழிப்பதில் வல்லவர்).
“ இந்த சுய மோகிகளின் பெருமித நம்பிக்கைகள் ( grandiose self belief ) புதைமணல் மேல் கட்டப்பட்டவையாக உள்ளன”.
பிறரால் மதிக்கப்பட வேண்டும்,கருதப்பட வேண்டும் என்ற இந்தப் போக்கை ஓட்டோ கெர்ன்பெர்க் ( Otto kernberk) மொழியில் கூறினால் இப்படியிருக்கும். அவர் , புற்றுநோய் சுய -மோகமானது இவ்வுலகில் நிலவும் பெரும் தீங்கிற்கான தோற்றுவாயாக உள்ளது “ என்கிறார்.
வாய்மொழிக் கலாச்சாரத்திலேயே சுயமோகத்தின் அங்கலட்சனத்தை அறிந்து, சமூகத்தை எச்சரிக்கவே இந்த பழமொழியை சொல்லாடலாக உலாவ விட்டிருக்கிறார்கள்.
இந்தப் பழமொழி interpersonal relation-லும் ( ஒருவருக்கொருவருடனான உறவிலும்) ,சமூக உறவிலும் நமக்கு மிகு உணர்ச்சி நோய்க்குறியை அறியவும் , புரியவும் உதவுகிறது. 
       இந்தியப் பிரதமர் என்ற ஆசைப்படுபொருளே
       கர்நாடக முதல்வர் என்ற ஆசைப்படுபொருளே

  இவர்களை ஆட்டிப்படைக்கிறது

                                                                   க.செ               

11 Mar 2018

ஆணவக் ... கொலை... மனித உரிமைதான் என்ன..?

திருச்சி:
 மார்ச் 9ம் தேதி முன்பக்கத்தில் தமிழ் தி இந்து நாளிதழில 4 பத்தி தலைப்பில்
3 மாத கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான
போக்குவரத்து காவல் ஆய்வாளர்
 திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
      கொலைகளில் பல வகை உண்டு,  அதில் ‘‘ஆணவக் கொலைஎன்பது சாதிவிட்டு வேறு சாதியில், குறிப்பாக தலித் இளைஞனை திருமணம் செய்து- விட்டால், அந்த தம்பதியான இருவரையுமோ அல்லது தலித் இளைஞனை மட்டுமோ மேல் சாதிக்காரர்கள் கொன்று விடுவதின் மூலம் தங்களின் ஆதிக்கத்தை மீட்டுருவாக்கம் செய்துவிட்டதாக ஒரு கற்பனையை கட்டமைத்து கொள்வர்.  ஆனால் காவல் ஆய்வாளர் அந்தப் பெண்னைக் கொல்லவில்லை, ‘‘உயிரிழப்புக்கு காரணமான?! காவல் ஆய்வாளர் என்று தி இந்து நீதி வழங்கி விட்டது. 
      வழக்கு என்ன?  சுருக்கமாக;
      மோட்டார் சைக்கிளில் தம்பதிகள் வருகின்றனர்.  திருச்சி நோக்கிவண்டியை ஓட்டி வந்த கணவர் ஹெல்மெட் அணியாமல் இருந்திருக்கிறார்.
       துவாக்குடி சுங்கச்சாவடி அருகே மேற்படி காவல் ஆய்வாளர் அவர்களை கணவன்-மனைவியைநிப்பாட்டி இருந்திருக்கிறார்.  அவர்கள் நிற்காமல் சென்றதால், ‘‘ ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் காமராஜ் ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜாவைகணவர்- விரட்டிச் சென்று, திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை கணேசா ரவுண்டானா அருகே ராஜாவின் மோட்டார் சைக்கிளை
3 முறை எட்டி உதைத்துள்ளார்.  இதில் நிலை தடுமாறிய ராஜா மற்றும் பின்னால் அமர்ந்திருந்த கர்ப்பிணி மனைவி ஊஷா ஆகியோர் கீழே விழுந்தனர்.
      உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  ராஜா காயமடைந்தார்.
      மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்த போது நிலை தடுமாறி ஆய்வாளர்
காமராஜு ம் கீழே விழுந்துள்ளார்.
      காவல் ஆய்வாளர் காமராஜு ம்; இந்த ம்க்கு என்ன அர்த்தம்? இலக்கணம் மட்டும்தானா?இந்தவகை எழுத்தில்வேறு செய்தி இல்லையா?     
      இந்த நிகழ்வில் ,
(1)  காவல் ஆய்வாளரின் ஆணை மீறப்பட்டிருக்கிறது.
(2)  அதனால் காவல் ஆய்வாளர் காமராஜ் ஆத்திரமடைந்திருக்கிறார்.
(3)  தம்பதியை விரட்டிச் சென்று அவர்கள் வண்டியை 3 முறை எட்டி உதைத்திருக்கிறார்.
கர்ப்பிணிப் பெண் இறந்துவிட்டார்.
நமக்கான சந்தேகம் இதுதான். ஆத்திரம் அடைந்தது காவலர் என்ற போலீஸ் அதிகாரமா?.  அல்லது காமராஜ் என்ற மனிதனா? (சுயமோகியா?)
   வண்டியை விரட்டிப் போய் அவர்களின் வண்டியை 3 முறை மிதித்து கீழே
விழ வைத்து . . . அதனால் ஒரு கொலையும்விபத்து என்று சொல்ல சாட்சி இல்லை கொலைக்கு காரணமாய் இருந்த ஆய்வாளர் காமராஜ் மீது என்ன வழக்கு தி இந்துவும், போலீஸ் துறையும் போட்டிருக்கிறார்கள்?    
   ஆத்திரம் பற்றி உளவியல் பார்வை என்ன சொல்லுகிறது?
   காவல் ஆய்வாளர் காமராஜரின் ஆத்திரம் வெறும் ஆத்திரமல்ல. அது சுயமோக வெறி (Narcissistic rage).
சுயமோக வெறி என்பதை கோஹட்(Kohut) என்ற அமெரிக்க ஆய்வாளர்,
..‘‘ எந்த வகையிலாவது பழியெடுப்பதற்கான , தவறை சரி செய்வதற்கான , காயத்தை ஆற்றுவதற்கான விருப்பம் உள்ளிட்டு ... அனைத்து சுற்றுச் சூழல்களையும் ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்துவதற்கான சுயமோகியின் விருப்பத்துடன் சுயமோக வெறியை (Narcissistic rage) இணைத்துப் பார்க்கிறார்.
   மேலும் கோஹட்(Kohut)  . . . சுயமோக வெறி என்பதை, தோல்வியை சந்தித்ததில் உருவான அவமானத்தின் விளைவு என்கிறார்”.
   காவல் ஆய்வாளர் காமராஜ் வண்டியுடன் அவர்களின் வண்டியை 3 முறை ஏன் எட்டி மிதிக்க வேண்டும்? அது பழி எடுப்பதற்குதானே (rage)?.
 சட்டத்தை மீறியவர்களின் வண்டியை  முந்திச்சென்று ( over take) அவர்கள் வண்டியை நிறுத்தியிருக்கலாமே?
   சுயமோக வெறி பகுத்தறிவுக்கு வழிவிடாமல் பழியெடுப்புக்குத்தான் பாதை காட்டும்.
   அதாவது,‘‘ ஒரு சுயமோகியை பொருத்தளவில், சுயமோகியை அவமானப்- படுத்தியதாக உணரப்படும் நபர்கள் மீது வெறி செலுத்தப்படுகிறது”.
   தம்பதிகளின் வண்டி நிற்காமல் போனதே; அவர்கள் அவமானப்படுத்திவிட்டார்கள் என்ற காமராஜின் சுயமோக எண்ணமே வெறிக்கு பாதை போட்டுவிட்டது.  அந்தப் பாதையிலே சென்று, காவல் ஆய்வாளர் காமராஜ் வெறிக்கு பலியாகிவிட்டார், வெறி பழியும் எடுத்துவிட்டது.
   காவல் ஆய்வாளர் காமராஜின் சுயமோக வெறியை ஆணவக் கொலையின் ஒரு வடிவம் என்று சொல்லக்கூடாதா?    
                              
   ஒரு நீதியின் குரல் இப்படிக் கேட்டது.  ஹெல்மட் அணிந்து வந்திருந்தால் எல்லாம் சரியாயிருக்கும்.
   இந்தக் குரலில் சட்டம் ‘‘காட்சி அளிக்கிறது”.  ஆனால், நெறி (ETHICS)  இல்லாமல் இருக்கிறது.காவல் ஆய்வாளர் காமராஜ் சட்டத்திற்கு கட்டுப்- பட்டவராக (அத்துமீறாமல்) நடந்திருந்தால் திருமதி.உஷாவுக்கு எதுவும் நேர்ந்திருக்காதே.
   இந்த அநீதியை, அநியாயத்தை கேள்விக்குட்படுத்திய பொது ஜனங்கள்மீது பயங்கரவாதிகளைப் போல் போலீஸ் மூர்க்கதனத்தை காட்டியது பற்றி சட்டம் ஏதாவது பேசுமா?      மனித உரிமைதான் என்ன?



தலைவர் கமல் போன்றவர்களுக்கு உயிரின் விலையை மதிப்பிடத் தெரியும் போல் உள்ளது. உடனே மதிப்பிட்டு 10 லட்சம் என்று கூறிவிட்டார்.
அவரது கட்சி என்றாவது அதை எதிர்ப்பின் ஆயுதமாக (Tool) மாற்றுமா?



-.செ.
ஆதாரம்: Narcissistic rage and Narcissistic injury -From Wikipedia