22 Feb 2020

மோடியின் போர் குரல்



              அமெரிக்க நண்பரை வரவேற்க கோடிக்கணக்கில் சிங்காரிப்பு வேலைகளுக்கு ஒதுக்கப்பட்டு மோடிக்குள்ள நெருக்கத்தை காட்டப்போகிறார். ஆனால் இது அவரின் சொந்த விசயமல்ல.         ( அவர் உடம்பு என்பதே மற்றமையால் ( other ) சிங்காரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது . )  அதற்கு ஆகும் செலவு அவர் வீட்டுப் பணமாக இருக்கலாம். 

                ஆனால் டிரம்ப்பை வரவேற்க கோடிகளில் செலவழிப்பது இந்திய மக்களின் வரிப்பணம்தானே !

                யாரும் இதுபற்றி மோடியை கேட்கவில்லை .  இது அனைவருக்கும்                                        ( எதிர்கட்சிகளுக்கு )  பிடித்தமோ ?  என்னவோ ?  யார் கண்டது . 

                இந்தச் சூழலில் இந்தியாவில் அநேக மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகிறது .  டெல்லி பல்கலை மாணவர்களை கல்லூரி நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை டெல்லி போலீஸ் நையப் புடைத்து எடுத்துவிட்டனர். 

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை                      ( ஒடுக்க ) கண்காணிக்க 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு நியமனம் .  இது இடப்பாடியின் நட்டிவக்கை .

                மேற்கண்ட சமூக அரசியல் சூழலில் 16.1.2020ல் பிரதமர் மோடி “ எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப் போவதில்லை “ என்று மோடி கூறியுள்ளார் . 

                எது மோடியை எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் ;  என்ற சவால் விட்டிருக்கிறார் .  குடியுரிமை திருத்தத்தை நாடெங்கிலும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பிப்பது என்பது மோடியின் சுயமோகத்தை காயப்படுத்திவிட்டதால் தான் சவால்விட அவரது சுயமோக மனம் களத்தில் இறங்கிவிட்டது எனலாம் . 

                அவரது சித்தத்தின் கட்டமைப்பில் ஆட்சி செலுத்தும் சூப்பர் ஈகோ ( ego ) தூண்டல் அவர் தன்னிலை தூண்டியவுடன் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து , குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவை இந்த தேசத்தின் நலனுக்கு மிகவும் அவசியமானவை .  இந்த முடிவுகளுக்காக இந்த தேசம் இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்தது .  எத்தனை எதிர்ப்பு வந்தாலும் (சவாலே ) அரசு எடுத்த முடிவுகளில் உறுதியாக உள்ளது .  அந்த முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றார் . “

                அகண்ட பாரதம் என்ற சூப்பர் ஈகோ ஆட்சி புரியும் வரை இப்படித்தான் பித்துப்பிடித்த நம்பிக்கையின் கையாளாக மோடியும் , அமித்ஷா குழுவும் இருக்கும் . 

சுயமோக ஏக்கம்  வெறி பொது வெளியில் ( Frame Celebrity    )  தன் வாழ்வில்    admiration . flattery  acclaim , tear , repulsion etc ) இவைகள் எல்லாம் , சுயமோக    அன்பளிப்புகள் ,   (  Primary narcissistic supply  )

கருத்தியிலாக மட்டும் மோடியை சொல்லாடலை புரிந்தால் 1/ 2 வேக்காடாகவே முடியும் .  பாராளுமன்ற வாதத்தை தாண்டித்தான் மோடி குழுவினர் உள்ளனர் .  பாராளுமன்றத்தை அகண்ட பாரத ஆசைக்கான அரசியல் நடவடிக்கையாகவே கொண்டுள்ளனர் .  இதன் மற்றொருபுறம் இராமர் கோவில் இதற்காக அறக்கட்டளையை நியமித்தாயிற்று ..

                ( குடியுரிமை ) மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை மோடி ) .  அதாவது குடியுரிமையை நிலைநாட்ட நீண்ட காலயுத்தத்திற்கு அரசியல் , பாராளுமன்ற , பாராமன்றத்தை தாண்டிய போராட்டத்திற்கு மோடி குழுவினர் தயார் .  பாசிசம் களத்திற்கு தன் இராணுவத்தை நகர்த்த திட்டம் போட்டாகிவிட்டது .  பாசிச எதிர்ப்பு ஐக்ய முன்னணி ?

                                                                                                                                                க.செ.

1 comment: