3 May 2019

நவீன அரசியல் கலாச்சாரம்


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் மையப்பொருளாக,முக்கிய அரசியல் ,பொருளாதாரப் பிரச்சினைகள் என்னென்னவாக இருந்தன? என்று ஞாபகத்தை திருகினால் , அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெளிவருகின்றன.
ஆனால் , தலைப்புச் செய்திகளாக அனுதினமும் இடம் பிடித்தது எது, எது என்றால்  , உணர்ச்சிகளை மையமாகக்கொண்டு குற்றச்சாட்டுகளும் ,பதிலுக்கு உணர்ச்சிமயமான குற்றச்சாட்டுகளே.
[ பொள்ளாச்சி பிரச்சினைக்கு எந்தக் கட்சியும் அரசியல் போராட்டம் தெருவில் நடத்தவில்லை.மாறாக, ஊடகங்களில் காட்சி அளிப்பதோடு சரி.அவர்களுக்கு அது குற்றப் பிரச்சினையாக மட்டுமே தெரிகிறது }
உதாரணமாக,ராகுலின் மோடிமீதான உணர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள். அதற்கான பதிலோ / விடையோ இல்லாமல், மோடி தன் உடல் மீதான சுய ஆராதனையோடு ராகுல் மீது வாரியிறைக்கும் உணர்ச்சிமயமான குற்றச்சாட்டுகள் கேள்விக்குப் பதிலாக தரப்பட்டது.
தமிழக அரசியலில் “ திரையில்” ஸ்டாலின் எடப்பாடி மீது விடாது நீள நீளமான – பொள்ளாச்சி பிரச்சினை உட்பட- உணர்ச்சிமயமான விமர்சனங்கள்;
பதிலாக, எட்டப்பர் ( எடப்பாடி ) ஸ்டாலின்மீது உணர்ச்சிகரமான , தனிமனிதர் மீதான பாய்ச்சல் பதிலாக வீசப்பட்டது.
சமூக அரசியல் பிரச்சினைகள் , மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லாமல்         ( 21-ம் நூற்றாண்டில் கூட) நகரங்களுக்கு எட்டுவழிப்பாதை ,ஆறுவழிப்பாதை , நான்கு வழிப்பாதை கேட்கிறது. வாக்குச்சீட்டு எந்திரங்கள் கழுதை மீதேற்றி ( சாலை வசதி இல்லாததால் ) ஊர்வலம் போவது காட்சியாகக் காட்டப்பட்டது.
குடிநீருக்காக காலிக்குடங்களோடு இந்தக் கொடூரமான வெயிலில் வீதி வீதியாக பெண்கள் அலைமோதுவதும் ; வியாபாரிகள் குடம் தண்ணீர் ரூபாய் 10 வரைகூட விற்று ஆதாயம் தேடும் அவலம் ( பெண்களுக்கான ஒதுக்கீடு எப்போது )
இது ஒவ்வொரு வெயில் காலத்திலும் திரும்பத் திரும்ப யதார்த்தமாகும் பிரச்சினை. என்ன செய்யப்போகிறார்கள் பருண்மையாக ; அதற்கான திட்டம் என்ன, எவ்வளவு காலத்தில்?
மோடி அரசின் சூப்பர் ஹைவேயால் ஆயிரக்கணக்கான மரங்களும் ,எண்ணற்ற செடிகொடிகளும் வாழ்விழந்தன ,கொல்லப்பட்டன ( கொள்ளை லாபம் ).இந்த இழப்புகளை எப்போது ,யாரால் சீரமைக்கப் போகிறார்கள்? திட்டமென்ன ,தீர்மானமென்ன?
முக்கியமாக ஒன்றைக் கவனிக்கவேண்டும் . சமூக ஊடகங்கள் அரசியல்வாதிகளையும் மிஞ்சி ,உணர்ச்சிமயமான தலைப்பில் வாதப் பிரதிவாதங்களை நடத்தி பிழைப்பை ஓட்டுகிறார்கள். சினிமாவின் சண்டைக் காட்சிகளுக்கு இணையாக அவைகள் நடந்தேறுகின்றன..
ஜனநாயகம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. இவர்கள் நடத்தும் லாவண்யக் கச்சேரியை அரசியல் என்று ஜனத்திரள் ஏற்று அல்லது ஏமாந்து வழிதெரியாமல் முழிக்கிறது ; மற்றொருபுறம் இலவசத்திற்காக காத்திருக்கிறது.
நடந்து முடிந்தது சமூக அரசியல் அல்ல.அது பொம்மலாட்ட பொழுதுபோக்கு.       அதன் அடிப்படை அதிகாரப்பசி . அவ்வளவே.
க.செ

1 comment:

  1. சரியாகச் சொன்னீர்கள். ஊடக தர்மம் கூட ஒரு பொம்மலாட்டமாகவே கடந்து செல்கிறது.

    ReplyDelete