24 Nov 2015

தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.

ஒரு பழமொழி 
தண்ணீரில் இறந்தவரிலும் 
சாராயத்தில் இறந்தவர் அதிகம்.

[போதைக்கான காசில் ( தின்றது போக ) மிச்சம் விலையில்லாப் பொருட்கள் –இலவசம்.] 

  நம்மின் ஒவ்வொருவரின் நனவிலியிலும் தான் சாகாவரம் பெற்றவராக கருதிக் கொள்கிறோம் . _ப்ராய்டு

இந்த நிலையானது மனித மனத்திலிருந்து சாவு பயத்தை ( death fear ) விலக்கி விடுகிறது. மகிழ்விற்கு முன் சாவு பயம் மணடியிட்டு விடுகிறது.

சாராயம் என்பது அதை குடிப்பவர்களுக்கு மற்றமையாய் உள்ளது .சாராயத்தின் ஆட்சிக்குட்பட்டு வாழ்வதற்கு இசைவாகிப் போன அடிமைத்தனம் .ஆனால் , பேசும் தன்னிலையானது , சாராயத்திலிருந்து விடுபட்டு சாவில் நிலைகொண்டுள்ளது .ஆகையால் , அது சுனாமி போன்ற பேரண்ட அழிவை விட சாராயத்தின் சாவு அதிகாரத்தின் வீச்சு அதிகம் என்ற நிலைப்பாடு கொண்டுள்ளது.

தண்ணீரைப் பற்றிய சாவு பயத்தைவிட சாராயத்தை பற்றிய சாவு பயம் இல்லாமையே காரணம் என்பதால் ; தன்னிலை தண்ணீருடன் சாவை ஒப்பிட்டு சாரயத்திற்கும் சாவுக்கும் உள்ள நெருங்கிய உறவைக் குறியீட்டு ஒழுங்கில் ( symbolic order  ) , மொழியில் , அறமாக, சமூக விழுமியமாகக் கட்டுகிறது எனலாம் .

இப்போதைக் காலக் கட்டத்தில் அரசின் சாராயக் கடையில் விற்பனையாகும் மது ஒரு நுகர்வுப் பண்டமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக (  legitimize ) ஆகிவிட்டிருக்கிறது மனத்தளவில்.
நுகர்வு சட்டரீதியான மகிழ்விற்கான பண்டமாக மனதில் கட்டமைக்கப்பாகியுள்ளது .
.ஆகவே ,தானாக மனம் வருந்தி சுய கட்டுப்பாட்டிற்கு வருவதற்கான சூழலும் இல்லை. . தூண்டலின் நிறம் பல வண்ணங்களில் விரவிக் கிடக்கிறது _ சினிமா , சின்னத்திரை , இத்ழ்கள்  மொழியாக - தனிமனித உறவுகள் etc. அதுபோக , மனிதனுக்கு தன் நெருக்கடியை சமனப்படுத்த உறவுகளும் இல்லை ; மனதைச் சமனப்படுத்துமளவிற்கான பொதுவெளி (park) கூட இல்லை.
தானாக மனித இயல்பு மாறுவதற்கான , மகிழ்விற்கான , சட்டரீதியான நுகர்வுப் பண்டமாக சாராயம் இருப்பதாலும் ; தானாக மாறச் சூழலும் இல்லாததாலும் போதை தலைகேறியுள்ளது .
முற்றிலும் வேரோடு ஒழிக்கப்படவேடிய Evil  தான்  (  தீது ) சாராயம் ,மது. உடனடியாக , மக்களின் விழிப்பு , அக்கறைக்கான வெகுஜனக் கருத்தை எல்லா மட்டத்திலும் எடுத்துச் செல்லவேண்டும் .




க.செ.
18-11-2015

20 Nov 2015

பாரதியின் கோபம், பரந்து கெடும் வள்ளுவன்.

சித்தம் ஒரு கட்டமைப்பு ; மனப்பாதிப்பை  நனவிலி மொழியில் உருவகமாக்கி கலாச்சாரத்திற்கு வித்தாகிறது . இப்படி ஒரு தன்னிலை தன் மனப்பாதிப்பை சமூக விழுமியமாக , இலக்கியமாக்கி விடுகிறது.
                       தனி ஒருவனுக்கு உணவில்லெயெனில்
  ஜெகத்தினை அழித்திடுவோம்              

 இத்தனை கோபம் பாரதிக்கு ஏன்? ஒருவனுக்கு உணவில்லையெனில் ; யார்?, எந்த சாதி , மதம் , என்பதெல்லாம் அவருக்கு பிரச்சினை இல்லை. ஒருவனுக்கு சாப்பிட உணவு கொடுக்க முடியாத ஒரு சமூகத்தை , கலாச்சாரத்தை அழித்துவிடுகிறது அவர் கோபம். அவரின் கோபம் அவர் பசிக்கு அல்ல ; யாரோ ஒருவரின் பசியை இவர் உணர்ந்ததால்  /  கேட்டதால் அவர் மனம் துன்பப்பட்டு விட்டது  /  பாதிப்புக்குள்ளாகி விட்டது ( affect ).
      அந்த பாதிப்பு  /  மனப்பாதிப்பு பாரதியின் - தன்னிலை உருவாக்கத்தில் , ஆசைக்குரிய தனிச்சிறப்பான இடத்திலிருந்து பிரிக்க முடியாதது   என்பது லெக்கானின் கூற்று.
      பாரதியின் ஆசை மனப்பாதிப்பு  தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் என்று மொழிக் கட்டமைப்பாக ( symbolic ) உள்ளது . அவன் கலாச்சாரம் , மன எழுச்சியை ரத்தமும் சதையுமான குறிப்பானாக்குகிறது - ஜெகத்தினை அழித்திடுவோம் - வலியுறுத்துகிறது.
      பாரதிக்கு முந்தியவன் தன் உணர்வை  /  பாதிப்பை மொழியில் இப்படி கற்பனை உலாவாக்கி விடுகிறான்.
      1062.         இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
                        கெடுக வுலகியற்றி யான்  
வள்ளுவன் நம்பும் உலகை இயற்றிவனையே, தன் மனத்திலிருந்து வெளியேற்றுகிறான் -   பரந்து கெடுக .
       மன எழுச்சியானது , மனத்துயரம் , மனப்பாதிப்புகள் , வார்த்தைகளுடன் உறவுடையதாக இருப்பதைவிட கற்பனையானவற்றுடன் மிக நெருக்கமான உறவு கொண்டதாக இருக்கிறது   .  - Lewis A.krishner
      இந்த மனப்பாதிப்பு , மொழியில் கற்பனை உலாவாக வருவது என்பது இலக்கியத்தில் வழமையாக வடிவெடுக்கிறது        .
      ஒரு கவிஞன் இப்படிக் கேட்கிறான் : என்றோ இழந்த ஒன்றின் நினைவை ( lack ) , இல்லாமை  /  வெறுமை உணர்வு உறுத்த , அன்புக்கு ஏங்கி நிறமாறாத பூக்களை த் தேடுகிறான்  - தன் கற்பனை உலகில்.
க.செ
14-11-2015
 உதவிய நூல் : Having a Life- Lewis A.Krishner

7 Nov 2015

சகிப்புத்தன்மை Vs அ . சகிப்புத்தன்மை

கோவன், ஷாரூக்கான் & தலைவெட்டி ஆசை.
லெக்கானின் ’ வாழ்க்கைக் கோட்பாடு ‘ :  ‘ வாழ்க்கைக் கோட்பாடானது குறித்தல் சங்கிலியில் ( Signifying chain ) மகிழ்வுக் கோட்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது ’ என்கிறார்.
யதார்த்தத்தில் மகிழ்வு என்பது உடலின் விருப்பப் பொருள். ஆனால் , யதார்த்தத்தில் ?
நீங்கள் இன்று உங்கள் மதிய உணவாக புலால் ( கறியை ) உணவை தேர்ந்தெடுக்க உரிமையும் , விருப்பமும் கொண்டு அமுது செய்யலாம்.
ஆனால் , ‘ மாட்டுக் கறியை  தேர்வு செய்ய யதார்த்த அரசியலில் இடமில்லை.
இந்த நிலையை அலென் மில்லர் , “ வாழ்க்கையானது மகிழ்வு மற்றும் யதார்த்த கோட்பாடு -களுக்கிடையில் நிரம்பி வழிகின்றது என்கிறார்.

லெக்கான் இதனை மேலும் வளர்த்து   வாழ்க்கையானது உண்மையுடன் இணைக்கப்பட- வில்லை ; மாறாக , அறிதலுடன் ( knowledge ) இணைக்கப்பட்டுள்ளது   என்கிறார்.
ஆனால் எப்படி ? வாழ்க்கை , அறிதலை எதிர்கொள்ளமுடியாது.
அறிதலை எதிர்கொள்ள முடியாத வாழ்க்கை குருடாகவும் , ஊமையாகவும் உள்ளது . மேலும் , அது தன்னளவில், ஏன் ? அல்லது  எப்பொழுது ? அல்லது எங்கு ? என்ற எந்தவொரு அறிதலும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது ” .
வெந்ததைத் தின்று
விதி வந்தால் சாகலாம்என்னும் சொலவடை ( மற்றமை ) யுடன் தொடர்புடையதாய் இருக்கிறது வாழும் வாழ்க்கை.
         மாட்டிறைச்சி சாப்பிட்டால்
     சித்தராமையா தலையை வெட்டுவேன்


சித்தராமையா குப்பனுமில்லை , சுப்பனும் இல்லை .கர்நாடகா மாநிலத்தின் முதன் மந்திரி ; அன்னை காவிரிக்குச் சொந்தக்காரர் . அவர் தலையே வெட்டுப்பாறையில் இருக்கும் அவலம்.
இந்தக் கொலைத் தண்டனையை விதித்தது சென்னபசப்பா மாவட்ட பா... செயலாளர். துணைக்கு வந்தது விஸ்வ ஹிந்து பரிஷத் , ஸ்ரீராம் சேனா , சிவ சேனா, பஜ்ரங் தள் முதலிய அமைப்புகள்.
இத்துனைக்கும் கர்நாடக முதன் மந்திரி செய்த குற்றம்   எனக்கு மாட்டிறைச்சி பிடித்தால் சாப்பிடுவேன். அதை யாரும் தடுக்க முடியாது என்று கருத்து தெரிவித்ததுதான் . [ ஏற்கனவே மாட்டிறைச்சி சாப்பிட்டதாக உ.பி.யில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கும் ] .
முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்ட முடியாததால் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அவருக்கு பன்றிக் கறி பார்சல் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கி , முதல் கட்டமாக பன்றிக் கறி பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.” – தி இந்து 5-11-2015.
ஆக ,  இது தொடர் போராட்டமாக சமூகத்தின் அடிமட்டம்வரை (grass root level ) எல்லா விதிகளையும் , சட்டங்களையும் மீறி கலாச்சார , மத அரசியலுக்கு பாதை வகுத்துக் கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற அரசியலையும் தாண்டி பிரபலமான தனிநபர்கள் மீதும் தாக்குதலைத் தொடர்ந்துவிட்டனர் . இதில் சிக்கியவர் நடிகர் ஷாரூக்கான்.
பா...வின் இந்தப்போக்கை ஷாரூக்கான் இப்படி விமர்சித்துள்ளார் ;
….“  நாட்டுப்பற்றுடைய ஒருவர் மதச் சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் , மதச் சார்பின்மை அற்றவராகவும் இருப்பது ( religious intolerance and not being secular ) மாபெரும் குற்றமாகும் “.- www.Indian Express.com.3 -11-2015.
இதற்கு ஆரவார பதிலடியாக ( rhetoric ) பா...வினர் ஷாரூக்கான் இங்கே ; அவருடைய ஆத்மா பாகிஸ்தானில் ;  அதாவது , ஷாரூக்கானை பாகிஸ்தானின் ரகசிய உளவாளி என்று முத்திரை குத்த ஆரம்பித்துவிட்டனர்.
இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவரிடம் நேரடியாகச் சென்று அதை எதிர்த்து ஒரு பிராது கொடுத்துள்ளது . அந்தப் பிராதில்….
  சமூக நல்லிணக்கத்தை உடைத்து இரு துருவங்களாக மாற்றும் தீய குறிகளை
 (  sinister ) கொள்கையாக்கி மக்களிடம் பரப்புகின்றனர் என்று கூறியுள்ளது.
இதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி ,…. அமைதியும் நல்லிணக்கமும் இந்தியாவில் நிலவுகிறது . இந்த மாதிரி சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கக்  கூடாது . ஆனால், இதை இவ்வளவு பெரிய விசயமாக மாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சகிப்புத் தன்மை எங்கே இல்லை ? என்று காங்கிரஸை கேட்டுள்ளார் ”.   - The Hindu 4-11-2015.
எதிர்க்கட்சிகள் , சிந்தனையாளர்களும், ஒரு சில பத்திரிக்கைகளும் , சின்னத்திரையின் உராய் வீச்சுகளிலும் , சகிப்புத்தன்மை பா.ஜ.க. கம்பெனியில் இல்லை என கடுமையாக விமர்சிக்கும் போக்கு நடைபெறுகிறது.

       தமிழகத்தின் சமீபத்திய சுயமோக அரசியல் செயல்பாட்டிற்கான உதாரணமாக சாராயக் கடையை எதிர்த்து , தெருமுனைப் பாட்டு ஒலிக்கக் கூட உரிமையில்லை ; மேலும் , முதல்வரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் உரிமை இல்லை என்பதற்காக பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
                       Sexuation
       அரசு இயந்திரம் பன்முகச் செயல்பாட்டிற்கானது . ஒரு செயல்பாட்டுத் தன்மை எப்படி உள்ளது என்பதுதான் ஆய்விற்குரியது . முரட்டுத்தனமானது , எரிசாராயம் விற்பது  ஆண் தன்மையிலானது .  அதன் தலைமை ஆணா? / பெண்ணா ? என்ற உயிரியல் ( biology ) வரையறையை கணக்கில் கொள்வதில்லை லெக்கானியம் ; அது நவீனத்துவமான கோட்பாடும் கூட.
        Phallic  ( அதிகாரத்தளம் ) என்பது ஆணைக் குறிப்பதல்ல. ஆண் தன்மையைக் குறிப்பது.
       அதிகாரத் தளம் பெண்ணிடம் இருந்தாலும் , அந்த அதிகாரம் ஆண்தன்மையில் -தாக்குதல், கோபம், ஒடுக்குமுறை, ஜனநாயக மறுப்பு போன்றவைகள் - Phallic Power தான். ஆட்சி செலுத்துபவர் ஆணா? / பெண்ணா? என்ற உயிரியல் பார்வை முதலாளியத்திற்கு முந்தியதிலிருந்து , ஏகாதிபத்தியம் வரை நீடித்த பால் ( அடையாளம் ) பற்றிய வரைமுறை அது.
       லெக்கானியம் அதை மறுதலித்து , செயல்முறை , விளைவுகளுக்கேற்ற முரணியக்கத் தன்மையில் ஆண் / பெண் என்ற   Sexuation கருத்தியலை முன்வைத்தது. அதுதான் பிந்தைய முதலாளியத்தில் முன் நிற்கிறது.
       இந்தக் கோணத்தில் பார்த்தால் , ஜெ. என்ற பெண் முதல்வரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனமாக கோவன் பாடலை அர்த்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
       Moral law divides the Subjects  [ ஒழுக்கவிதி தன்னிலைகளை பிளவு படுத்து கிறது.,  வலியை உண்டாக்குகிறது ] .
       இனி,   தலைவெட்டி ஆசை கொண்ட தன்னிலைகளின் தன்னிலைகள் ; “ அவர்கள் பிறரைத் துன்புறுத்தி இன்புறுபவர்கள் ( sadist ) ;   தன்னைத்தானே  [ அதே  ஒழுக்க முகவர்களால் ( moral agent ) ]  துன்புறுத்தி இன்புறுபவர்கள் ( masochist ) ”.   -  ப்ராய்டின் கண்டுபிடிப்பு இது.
       இவர்களின்  நடைமுறைக்கான - பிறரைத் துன்புறுத்தி இன்புறுதல் ( sadist ) , தன்னைத்தானே துன்புறுத்தி இன்புறுதல் ( masochist ) -   காரணத்தை மனஅலசல் இப்படிப் பார்க்கிறது :
       பிறரைத் துன்புறுத்தி இன்புறுகிறவன் ( sadist ) வலிமையான பேரகனை ( Super Ego ) கொண்டுள்ளான் ; அவன் பேரகனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான் ; அவன், அவனுடைய சொந்தப் பேரகனாகவே ஆகிவிடுகிறான் ( own super ego )  - ப்ராய்டு.
       ஆக, இவர்கள் - பா... , சிவ சேனா, பஜ்ரங் தள், etc ... - தங்களை பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமாக; அல்லது அரக்கர்களை ஒழித்துக் கட்டும் அவதாரமாக எண்ணி பூரிப்படைபவர்களோ? .
       கலாச்சாரத்தால் யார் ஆள்கிறார்கள்?
       இறுதியாக பா... விற்கு சகிப்புத்தன்மை இல்லை / குறைந்துவிட்டது என்பது உண்மைதான். அது அரசியல் கலாச்சாரம் தான்’ .
       வித்தியாசங்கள், அரசியல் வித்தியாசங்கள், அரசியல் சமத்துவமின்மையால் கட்டப்பட்டுள்ள மதங்களும் கூட ; கலாச்சாரமே ( புனித ) காட்டுமிராண்டித் தனத்திற்கு வழி வகுக்கிறது என்கிறார் சிசாக்.
       சாதியையும் , வறுமையையும் , வேலையில்லாத் திண்டாட்டத்தையும்., நுகர்வு முதலாளிய கலாச்சாரத்தையும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு சகித்துக் கொள்ள வேண்டும். (உதவியவர் சிசாக்).
       சிசாக் Joseph Goebbels  என்பவரின் சூத்திரத்தை இப்படிக் கூறுகிறார் ,  When I hear the word culture , I reach for my gun . But not when I hear the word civilization ” .
க.செ
5-11-2015