20 Sept 2019

அஷீஷ் நந்தியின் சாபம்

"இரண்டாம் முறையாக மோடியின் அதீத வெற்றிக்கு காரணமான மக்கள் ( ஒரு தலைமுறை ) விளைவை சுமந்தே ஆக வேண்டும் என்கிறார் , “ ஆஷீஷ் நந்தி இவர் அரசியலின் உளவியலை ஆராய்ந்து எழுதியவர் .  கேரவன் இதழுக்கு அளித்த பேட்டி .
       மேலும் அவர்நம்முடைய சமூகம் வேற்றுமை பல கொண்டது இது தான் அவர்களை ( ஆர்.எஸ்.எஸ்பா.. ) பயமுறுத்துகிறது “ .
       தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒன்று வெளிப்படையாகத் தெரிகிறது .  இந்தியா பராக்கிரமம் வாய்ந்த நாடு ( MSCULINE STATE   ) என்பதை நோக்கி பெரும்பான்மையாகக் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் ” , ( அதே கட்டுரை )
       மேலும் இந்தியர்கள் தங்களின் நம்பிக்கையை தொலைக்காட்சி ஊடகத்தில் வைத்திருக்கிறார்கள் .  ஒரு ஆரோக்கியமான விமர்சனப் பார்வையை இந்தியர்கள் வளர்த்துக் கொள்ளவில்லை அல்லது வளர்க்கவிடாமல் செய்துவிட்டனர்.
       நீண்ட மேற்கோள் இக்கட்டுரைக்கு அவசியமாகிறது.
       காஷ்மீர் மீது பாராளுமன்ற மிருகபலம் , தேசப்பற்றுக்கும் , தேசிய வெறிக்கும் வித்யாசமில்லாத ?  கண்மூடித்தனமான மக்களின் விசுவாசத்தின் துணை கொண்டு காஷ்மீர் மக்களின் குரல்வளை நெறிக்கப்பட்ட அடுத்த விநாடி ஹிந்தி பேசாத தேசிய இனங்களின் மீது தாக்குதலை ஆரம்பித்துவிட்டது ஆர்.எஸ்.எஸ்பா... கும்பல்.
ஹிந்தியே இந்தியாவை ஒருங்கிணைக்கும்
       சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம் ” , ( உள்துறை அமைச்சர் அமீத்ஷா , தினமலர் , செப்டம்பர் 15 )
       இதற்கான எதிர்வினை கருத்தியலாக பல்வேறு தேசிய இனங்களிடமிருந்து உரத்த குரலாக கேட்க ஆரம்பித்துவிட்டது. ( ஒரு சில பிழைப்பு வாத அரசியல் வாத குழுக்களைத் தவிர )
       அமீத்ஷாவின் சொல்லாடலின் உளவியல் பற்றி மட்டுமே இக்கட்டுரை .  உளவியல் பார்வை கருத்தியலின் விதையாகும் .
       கிந்தியே இந்தியாவை ஒருங்கிணைக்கும்
       இந்தியா விடுதலை பெற்று அரை நூற்றாண்டாக ஒருங்கிணைக்கப்பட்டுத்தானே இருக்கிறது .  இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களுக்கும் ஒரே அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றுதானே !  அனைத்து தேசிய இனத்திற்கும் ஒரு பாராளுமன்றம் தானே !!  அனைத்து தேசிய இனங்களுக்கும் ஒரே சுப்ரீம் கோர்ட்டுதானே !
       அதுபோல் ரிசர்வ் வஙகியும் ஒன்றுதானே !
       இது உள்துரறை அமைச்சருக்கும் , மோடிக்கும் தெரியும் .
       குஜராத்திலிருந்து இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பிரதமர் , உள்துறை அமைச்சரானது எப்படி ?  இந்தியா ஒருங்கிணைக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று இந்தியாவை ஆளும் அதிகாரம் உங்கள் கைக்கு வந்திருக்குமா ?


       இப்படி பேருண்மைகள் இருக்க இந்தியாவை ஒருங்கிணைக்க  என்று  பேசுவது எதனால் ?  அரசியல் அமைப்பு சட்டம் , பாராளுமன்றம் என அரசியல் ரீதியாக , சட்ட ரீதியாக இருப்பதை புறந்தள்ளிவிட்டு , கூட்டாச்சி அதிகாரங்களின் செயல்பாட்டை வலிந்து மறுப்பது , புறந்தள்ளுவது , அதன் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் மூர்க்க வெறிகொண்டு எதிர்த்தலின் வெளிப்பாடுதான் இது .   இந்த உணர்வு யாருக்கெல்லாம் வெளிப்படும் ?  வக்ரமனம் இந்த குறிப்பிட்ட விசயத்தில் பேருண்மையாக வெளிப்படுகிறது.
       வக்ரமனம் / காயடிப்பை (  CASTRATION  ) மறுக்கும் சமூக வழக்கம்  நீதி நெறிகளை மறுத்துத்தான் அது வெளிப்படும்.
       வக்ரம் , சமூக அடிப்படையை  கட்டளைகளை நல் ஒழுக்கங்களுக்கு மாறாகத்தான் வக்ரமனம் சிந்திக்கும் , செயல்படும் , இது கவனத்துக்குரியது என்றும் , யாராண்டால் நமக்கென்ன என்று இருந்தாலும் , இந்துத்துவாவே கோலோச்சும் வக்ரம் தன்னை சிலுவைப் போராளி என்றுகூட காட்சிப்படுத்தும்.
       வக்ரத்தின் மனம் அரசாங்கத்திற்கு போதுமான அதிகாரம் இல்லை என்று அதுவாக யூகித்துக்கொள்ளும் வக்ரமனம் குறிப்பான வழிகளிலிலேயே ( ஆர்.எஸ்.எஸ்பா.. ) தன்னை இருத்திக் கொண்டு சம வெளியை பார்க்கும் , செயல்படும் .
       இனி சொல்லாடலின் மற்றொரு பரிமானத்தைப் பார்க்கலாம் .
       சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக  ஒரு மொழிதான் இருக்க வேண்டும் ” ,
       மோடி விடிந்தும் விடியாததுமாய் ஒவ்வொரு நாடாக உலா வருகிறாரே !  அவரை குஜராத்தின் பிரதமர் மோடி என்றா உலகம் அடையாளப்படுத்துகிறது .
       இந்தியப் பிரதமராகத்தான் அடையாளம் காண்கிறது உலகம் .

       அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடிக்குத்தான் ஆங்கிலம் நன்றாக பேசுவார் என்று பாராட்டுப் பத்திரம் வழங்கினாரே .  அமெரிக்க அதிபர் மோடிக்கு கொடுப்பது இந்திய அடையாளமா ?  இல்லை குஜராத்தின் பிரதமர் என்றா ?
       தெரியும் வக்ரத்திற்கு , வக்ரத்தின் கற்பனை பயணமே உலக அடையாளம் என்ற  பேச்சு , தான் சார்ந்த ஆர்.எஸ்.எஸ், பா...-க்கு என்பதை மறைத்து இந்திய அடையாளம் , உலக அடையாளம் என்று பிதற்றுகிறது .
       வக்ரமனம் அதன் கட்டமைப்பு மிக பிரமாண்டமானது வக்ரத்தின் சித்த கட்டமைப்பின் வெளிப்பாடாகும் .  ஒரு போதும் சட்டம் , சமூகத்திற்கு கட்டுப்படாது , ஏற்றுக் கொள்ளாது , தன் சொந்த ஆசையை வெளிப்படுத்தாது மறைத்து , சமூகத்திற்காக , நாட்டிற்காக , கலாச்சாரத்திற்காக ( OTHER  ) என்று கற்பனை பயணத்தை மேற்கொள்ளும் ,
       இன்னும் 4 ஆண்டும் மக்கள் பாடு திண்டாட்டமே .  வெந்ததை தின்று விதிவந்தால் சாவோம்.
                                                              .செ.