24 Dec 2018

மதவெறி அல்லது இறையாண்மை


வக்கிரமனமானது , தன் லட்சிய அகனை சாந்தப் படுத்துவதற்கு,   பகுத்தறிவுக்குட்படாத வகையில் கோரிக்கைகளை முன்னிறுத்தியும் முரட்டுத்தனமாகவும் , , மதவாதிகளுக்கு , ,எளிமையானவர்களுக்கு                  சுயஅழிப்புக்கு வழிகாட்டுகிறது.

      இது ஒன்றும் புதிதல்ல.வடக்கில், மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கான   இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேல்சாதி மாணவர்கள் கலகம் செய்யும்போது ஒருவர் தீயிட்டு தன்னை அழித்துக்கொண்டது வரலாறு.

 தென்னகத்தில் காலூண்ட அய்யப்பன் உதவிக்கொண்டிருக்கிறார். 
 அயோத்தியில் இராமர் உதவிக்காக காத்திருக்கிறார்.

      ஆளும்கட்சியின் மிகச்சமீபத்திய தேர்தல் ( சட்டசபை ) தோல்விகள் சுயமோகவெறியை தூண்டிவிட்டிருக்கிறது. இது அவமானத்தின் விளைவு.. சுயமதிப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் கட்டுக்கடங்காத சுயமோகவெறி பலவடிவங்களில் வெளிப்படுகிறது..

தன்மோகவெறி , அனைத்து சுற்றுச்சூழல்களையும் கட்டுப்படுத்துவதற்கான  தன்மோகவிருப்பம், காத்திரமாக வெளிப்படுகிறது..
மன அலசல் இதை ( சுயமோக வெறியை ) “ செயலற்ற பழியெடுப்பு  உணர்விலிருந்து மற்றவர்களுக்கு வலியை / துன்பத்தை கொடுக்கக் கூடிய செயலுக்கான பாத்திரமாக மாறுவதற்கான சுயமோகியின் ஒரு முயற்சி இது ; ”
“ அதேநேரத்தில் தன் சொந்த ( உண்மையில்  பொய்யான ) சுயமதிப்பு குறித்த உணர்வை மறுகட்டமைப்பதற்கான முயற்சி இது “ என்கிறது.- ஹோகட்

மதத்தில் உள்ள ஆன்மீகத்தை தவிர்த்துவிட்டு மத அரசியலை முன்னிறுத்தும் வழமையான போக்கு நவீனமாக உடையுடுத்தி உலா வருகிறது.. பக்தர்கள் பாவம்.

இந்தியாவில் பிறந்த மற்றொரு மதக்கருத்தைப் பார்க்கலாம். மத அரசியலின் புரட்டு / பகட்டைப் புரிய இந்த வாசிப்பு உதவக்கூடும்.

ஆன்மீகமற்ற மத அரசியலுக்கும், ஆன்மீகத்தை  ( தன்னகங்காரத்தை  ஒழிப்பதை ) முன்னிறுத்தும் வழிபாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இதன்மூலம் அறியலாம்.
……….” புலால் மறுத்தலாலும், உடை அணியாது நிர்வாணமாக இருப்பதாலும், தலையை மழிப்பதாலும், அல்லது முடியை வளர்ப்பதாலும், முரட்டுத் துணிகளால் உடை உடுத்துவதாலும், புழுதியை உடல் முழுவதும் பூசிக் கொள்வதாலும், அக்னிக்கு   ஆகுதி செய்வதாலும், தன்னை பொய்மையால் ஏமாற்றிக் கொள்வதாலும் ஒருவர் புனிதமடையப்போவதில்லை.

வேதங்களைப் படிப்பதாலும், பூசாரிகளுக்கு காணிக்கையைத் தருவதாலும் ,கடவுளருக்கு ஆகுதிகளை வழங்குதாலும் , வெயில் மூலமோ குளிர் மூலமோ தன்னை வருத்திக் கொள்வதாலும், அதேபோன்று மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதற்குப் பல தவங்களைச் செய்வதாலும் ஒருவன் மாசற்றவனாக ஆகமுடியாது.

 புலால் உண்பதாலேயே ஒருவன் அசுத்தப்பட்டுப்      போவதில்லை. மாறாக கோபம், குடிப்பழக்கம்,பிடிவாதம், வெறி,ஏமாற்றம், பொறாமை, தற்புகழ்ச்சி, புறங்கூறுதல்,   
பிறரிடம் அலட்சியம், தீய நினைப்புகள் ஆகியவையே    அசுத்தத்தை உருவாக்குகின்றன.”.புத்தரின் புனிதவாக்கு

தன்னகங்காரத்தைத் துறத்தலே ஆன்மீகத்தின் மையம் என்பது புரிகிறதல்லவா? அய்யப்பனின் ஆரோக்கியம் என்ற பெயரில்    மத வெறிதான், தீண்டாமைதான் வெளிப்பட்டுள்ளது.

மாசற்றவராக இருப்பதற்கு, தன்மன விடுதலைக்கு,                  தான்  யார் என்ற சுய ஆய்வுக்கான கேள்வியை உள்நோக்கிக்         கேட்பதே தன்னகங்கார விடுதலைக்கு வித்தாகும் என்கிறது           ஆன்மீகம்”. 
அய்யப்பன் விசயத்தில், ஊடங்களில் உண்மையான மறுதலிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன.விவாதங்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டும்; திட்டம், கொள்கைகள், தொடர்பற்றவைகளாகம் உள்ளன. உண்மைகளுக்கு இரண்டாம்தர முக்கியத்துவமே தரப்படுகிறது; உண்மைகள் பொய்யாக்கப்படுகின்றன.

செய்திகளைக் கொடுப்பதில் ஏற்றதாழ்வுகள் உள்ளன. சமூக ஊடகங்கள் பல்கிப் பெருகியுள்ள நிலைமைகள் மூலம் இது சாத்தியமாகிறது. அதிகாரமும், சமூக ஊடகங்களும் சாதாரன மனிதனுக்கு இருண்ட கண்டத்திற்கு வழிகாட்டு கின்றன..தங்கள் நம்பிக்கைகளை / மனச்சார்புகளை உண்மை அரசியலாக முன்னிறுத்துகின்றன. தன்னிலைகள் / பார்வையாளர்கள் சந்தையில் வித்த ஆடுகள் போக சொச்ச ஆடுகள் விழிப்பது போல பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்.
-க.செ

16 Dec 2018

இறை ஞானத்தை காசுக்காக விற்பவர்கள்


இப்போது ஒரு ஜூஃபியின் கதை….

 ‘’ ஜுனைத் பாக்தாதி எனும் ஒரு சூஃபி மகான்.அவரிடம் ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர் வந்து ஐநூறு பொற்காசுகள் கொண்ட ஒரு பணமுடிச்சை கொடுத்து ” இதை தங்கள் தேவைகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள் “ என்றார்.
பணமுடிச்சையும் அந்த செல்வந்தரையும் பார்வையிட்ட ஜுனைத் அவர்கள் “ தங்களிடம் இன்னும் பொற்காசுகள் நிறைய இருக்கின்றதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த செல்வந்தர் மிகவும் பெருமையாக நிறைய இருக்கின்றது” என்று பதிலளித்தார்.
 “ தங்களுக்கு மேலும் மேலும் பணம் பெருக வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் மனதில் இருக்குமே? ” என்று மீண்டும் மகான் கேட்டார்.
     “ ஏனில்லை? நிறைய பணம் சேரவேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்குமா? “ என்றார் அந்த செல்வந்தர்.
அவர் கொண்டுவந்து கொடுத்த பொற்காசுகள் அடங்கிய பணமுடிச்சை அவரிடமே திருப்பிக் கொடுத்தவாறு ஜுனைத் அவர்கள் கூறலானார்கள் : ”அப்படி என்றால் இந்தப் பொற்காசுகள் உங்களுக்குத்தான் மிக அதிகமாகத் தேவையாக உள்ளது . பணத்தின் ஆர்வம் என்னிடம் இல்லை. அந்த ஆசை உங்களிடம் நிறைய இருக்கின்றது.ஆகவே இது உங்களிடம்தான் இருக்கவேண்டும் “.

” நான் ” எனும் தன்னகங்காரம் தம்மிடமிருந்து அகற்றப்பட்டிருந்தால் பணத்தாசையோ / அதிகார ஆசையோ / புகழாசையோ அந்தத் தன்னிலையை அண்டாது.

இதனால்தான் ஜுனைத் பாக்தாத் என்ற அந்த ஜூஃபிக்கு ( ஞானி ) இதரர் வழங்கும் பொற்காசுகளை கொடுப்பவருக்கே திருப்பிவிடுகிறார்..     ( பொற்காசுகளின் ஒலி,ஒளி அவரை மயக்கமுடியவில்லை )
அப்துல்லாஹ் பின் முபாரக் எனும் ஜூஃபியின் ஆன்மீகம் இப்படிச் சொல்கிறது:
. “ உலகத்தை அனுபவிப்பதற்காக தம்முடைய இறை ஞானத்தை சொற்பக் காசுக்காக விற்பவன் இழிவானவன்

இந்தியத் துணைக்கண்ட வெளியில் எத்துனை ஆன்மீக மடங்கள் ! , எத்தனைவிதமான ஆன்மீக வியாபாரங்கள் !. ஆனால் ஜூஃபி ஞானத்திற்கு சுய ஒழுங்கு, கண்ணியம் , சுயமோகத்தை கட்டறுத்தல் ஆகியவை   ஞான வெற்றிக்கு பாதையாக உள்ளது.
ஜூஃபிகளின் தன்னிலை சுயமோகத்தின் பல அடுக்குகளை அறிந்துள்ளது. ஞானத்தின் லட்சணங்களில் ஒன்றாக சுயமோகப் பற்றறுத்தல் உள்ளது. அது ஜூஃபிகளின் சமூகச் சொல்லாடலாகவும் உள்ளது.
-    முள்ளிப்பள்ளம் பிட்சு

12 Dec 2018

ஆன்மீகத்தன்னகங்காரம் ( RELIGIOUS NARCISSISM )


இந்தியாவின் ’ஆன்மீகவாதிகள்,’ நம்பிக்கைவாதிகளின்- பக்தர்களின் – தன்னகங்காரம் ( NARCISSISM ) நீதிபரிபாலனத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
ஐயப்பனை வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு    என்கிற உட்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பும், அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கத்தை எதிர்த்தும், ஐயப்பன் வாசஸ்தலத்தில் 144 தடை உத்தரவு போட வேண்டிய அளவிற்கு பெண்களின் வழிபாட்டு உரிமையை எதிர்த்து கலகம் செய்வதும், சட்டத்திற்கு அடங்க மறுப்பதும் இன்றுவரை தொடர்கிறது.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆன்மீகச் சொற்பொழிவு நடத்த சென்னை உயர்நீமன்றம் தடைவிதித்துவிட்டது.
இதற்கு ஆன்மீகத்தின் ( ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ) எதிர்வினை: 
“ சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினால் பெரியகோவில் இடிந்துவிடுமா?”
 ( இந்து தமிழ் டிச.4 2018)
ஒருவரின் தன்னகங்காரத்தை எதிர்க்க / ஒழிக்க அதை முற்றிலுமாக அழிக்கச் சொல்கிறது இந்திய ஆன்மீகம்.
முற்றும் துறந்த ஆன்மீகவாதிகளோ, தன்னின் ஆசை சட்டத்தால் மறுக்கப்பட்டவுடன், மனம் கொந்தளித்து, தன்னகங்காரம் வெடித்து,                   “ தஞ்சைப் பெரிய கோவில் இடிந்துவிடுமா? ” என்ற தீச்சொல்லை               உமிழ்கிறார்கள்..
      உயர்நீதிமன்றத் தடை என்று தெரிந்தும் எத்தி விளையாடுகிறார்கள்.
அரசியல் ஆன்மீகம் :  ராமர் கோவிலுக்காக அவசரச் சட்டம் இயற்றச்சொல்லும் இந்து இயக்கத்தினர்.
இவர்களின் போக்கு இந்தியாவில் விரைவில் மதக்கலவரத்தை தூண்டிவிடுவார்கள் போல் தெரிகிறது. பயங்கரவாதம் காவி வண்ணத்தில் சூலாயுதத்தை தூக்கும் காலமாகிவிட்டது.
தன்னகங்காரத்தை ( NARCISSISM ) வெல்லாமல் ஆன்மீகச் சொற்பொழிவு என்ன செய்யும்?
            லட்சங்கள் செலவுசெய்து உடையலங்காரம் அம்பானியிசமாகாதா?
[ அம்பானி தன் மகள் மணவிழாவுக்காக விருந்தினரை அழைக்க 100 விமானங்கள் வாடகைக்கு எடுத்திருக்கிறார் ]
இந்த மனப்போக்கின் வீச்சு எதுவரை? எதிர்காலத்தில்.
                                                              க.செ.

11 Dec 2018

வெறுப்பு மனப்பான்மை ( Cynicism )


ஒருவரின் தன்னகங்காரம்  ( Narcissism ) பிறரால் அங்கீகரிக்கப்படாவிட்டால், புறக்கணிப்பு, நட்பை பகையாக்குதல்,அவதூறு, இதரரின் நடத்தையை பழித்தல் / அவதூறு செய்தல் ( Assassinate ) போன்றவைகள் தனிமனித உறவில் நடக்கிறது.
 ஒருதலைக் காதலில் தன்னகங்காரம் தன்னின்  காதல் இணையை உடல் ரீதியாக அழித்தொழிக்கிறது.
மறுபுறம் ME TOO என்கிறது,.
சரி. அரசியலில் இதன் பங்கென்ன?
இயற்கைச் சீற்றத்தால் தண்டிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்டு, தங்கள் இருப்பே கேள்விக்குள்ளாகியிருக்கும் மக்களை அணுகி,தேவைகளை அறிந்து , அவற்றை நிறைவேற்றவேண்டிய கடமையும்,அந்த மக்களிடம் அன்பும் அனுதாபமும் காட்டவேண்டிய கட்டாயமும் சக்கரவர்த்திக்கு (Prime Minister ) இருந்தும்கூட, அதைவிடுத்து, மௌனமாக இருந்தே காலம் கடத்தி,,மக்களின் மறதிக்கு விட்டுவிடும் சாமர்த்தியம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு?
மாநிலங்களுக்கிடையில் தண்ணீர் பிரச்சினை இருக்கும்பொழுது, ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து அணைகட்டும் பேராசைக்கு கொடி அசைத்தல் போன்றவைகள் பயங்கர வாதமாக ஆகாதா?
ஒரு மாநில மக்கள் மீது இவ்வளவு பகைமை / வெறுப்பின் வெளிப்பாட்டை பின் எதில் சேர்ப்பது?
உதவிக்காக, உடுத்த, படுக்க , கதறியழும் குழந்தைக்கு பாலுக்காக, ஆறுதலளிக்க, காலாகாலத்தில் யாரும் ( அரசுரீதியாக) அவர்களை அணுகாததற்கு என்ன பொருள்?
ஆயிரக்கான தென்னைகளை, குடியிருப்புகளை கஜா புயல் அழித்ததை எதிர்க்கமுடியாது நம்மால். உண்மைதான்.ஆனால் இனியாகும் வாழ்வுக்கான இனிய பாதைகளை வெட்டி உருவாக்கிட , மக்களிடமிருந்து அரசு வசூலித்த கோடிகளைக் கொண்டு காலாகாலத்தில் உதவி செய்யலாமே!
தன்னகங்காரம் , மக்களின் துன்பத்தையும் அவஸ்தையையும் SLAPSTICK  COMEDY  மாதிரி மகிழ்ந்து, மனதுக்குள் ரசித்து, ” பன்னாட்டு உறவுக்கு” எனும் பெயரில் ஊர்வலம் தொடருகிறது.
தன்னகங்காரமும் ,வெறுப்பு மனப்பான்மையும் மக்கள் ஜனநாயக மனப்போக்கல்ல: இது பயங்கவாதப்போக்கே ஆகும்.இதை ஹிட்லர் ஏற்கனவே நிரூபித்துவிட்டார்.
இப்போதைய அபாயம் பயங்கரவாதமல்ல:
தன்னகங்காரமும்,வெறுப்பு மனப்பான்மையுமே இன்றைய அபாயமாகும்..
                                                                க.செ.