31 Aug 2017

மடாதிபதிகளின் ‘ பக்தி ’ – விளையாட்டு


பிந்தைய முதலாளியத்தில் (  Late Capitalism ) புதிய வெகுஜன ஊடகங்கள் பல்கிப் பெருகியுள்ளன.  கருத்தியலானது குறைந்தபட்சம், மூலை முடுக்கெல்லாம் காத்திரமாக ஊடுருவுவதை இந்த ஊடகங்கள் சாத்தியமாக்கி வருகிறது.
       பல சம்பவங்களை  /  நிகழ்வுகளைப் பார்த்தால் பிந்தைய முதலாளியமானது நிலப்பிரபுத்துவத்தை வறுத்து எடுப்பதற்குப் பதிலாக, அதற்கு அடிபணிந்துள்ளது மாதிரி தெரிகிறது.      
பஞ்சகுலா , ஆக. 28. 
15 ஆண்டுகளுக்கு முன் ஆசிரமத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாலியல் புகார் கூறினர்.  குற்றவாளி “ தேரா சச்சா சவுதா “  என்ற ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங்.
       பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் குர்மித்சிங்-ஐ நேற்றைக்கு முன்தினம் குற்றவாளி என அறிவித்தது.  தண்டனை விபரம் 28ந் தேதி என உயர்நீதிமன்றம் அறிவித்தது.
       பெண்களுக்கு எதிரான சாமியார்களின் அட்டூழியத்திற்கு தண்டனை தர 15 ஆண்டுகள் ஆகியிருக்கிறது  !  
       மக்கள் இந்தத் தீர்ப்பை ஆதரித்து கொண்டாடியிருக்க வேண்டுமல்லவா?  மாறாக, இந்தத் தீர்ப்பை லட்சக்கணக்கான மக்கள் எதிர்த்தனர், கலகம் புரிந்தனர்  ரயில், கார்களை எரித்தனர். 
அரசாங்கங்கள் என்ன செய்தன?  வேடிக்கை பார்த்தன.  ஓட்டுக்காக மக்களிடம் சரணடைந்து வேடிக்கை பார்த்தனர்.
       கலவரத்தை வேடிக்கை பார்த்த அரசு
      வன்முறையாளர்களிடம் சரண் அடைந்த வேதனை
      மத்திய அரசுக்கும் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.
பதில் .  சமாளிப்புத்தான்.
       மாவீரன் அலெக்‌ஷாண்டருக்குப்பின், இந்தி கிரேக்க வீரன் மோடிக்கும் இந்த சரணாகதியில் பங்குண்டுதானே!
       நிற்க.   24-08-2017 அஜீத்-ன் விவேகம் படம் வெளியீடு. சினிமா கொட்டகை ரோட்டின் பக்கம் போக முடியவில்லை. பால் அபிஷேகம் அஜீத்-ன் கட்-அவுட்டிற்கு ( cut-out ) அதுவும் கையில் செல்பி கேமராவுடன். ஜீன்ஸ் வாடையுடன் ரோட்டில் பிரமை பிடித்து இளைஞர்கள் , கனவில் கனவு காணுகிறார்கள். கட்-அவுட் உயிராகி , பின் கடவுளாகி , பின் அதற்கு பால் அபிஷேகம்.  இது பதின்பருவ (teen-age)  விளையாட்டு.
       நிற்க.   இதற்கு முன் ஜெ. குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் கூறியவுடன் தமிழகம் கலவர பூமியாகியது  பெண்களைக்கூட உயிருடன் எரித்தனர்.  உண்ண மண்சோறு , பால்குடம் , எல்லா சாமிகளும் அன்று பாலில் குளித்தன.  மொட்டை அடித்துக் கொண்டனர்.
       இப்போதும் கூட குற்றவாளி ஜெ. என்று  T.V சானல்கள் கூறாது குலைநடுக்கத்துடன்.  அரசு அலுவலகங்களில் கொலு வீற்றிருக்கிறார் பெரிய மேடம்.  அ.தி.மு.க. மந்திரிகள் அனைவரின் அலுவலகங்கள் முதல் அனுதாபிகளின் சட்டைப் பை வரை ஜெ.படம் இடம் பெற்றிருக்கும்.
       ஏன் ஆன்மீக பீடாதிபதிகள் , மடாதிபதிகள் ஆண்டவன் கட்டளைகளுக்கு எதிராக , பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் செலுத்துகிறார்கள்.  இந்த நோயாளர்கள் (சுயமோகிகள்)  
( Narcissist ) மாவல்லமை (  omnipotent )  எண்ணங் கொண்டவர்கள்.  இவர்களைக் கட்டுப்படுத்தி வழி நடத்திட நெறிகள் ( ethics  ) ஏதும் நடைமுறையில் இல்லை.                                                                       
       இந்த இடத்தில் ப்ராய்டின் மன அலசல் கோட்பாட்டைப் பார்ப்பது உதவிகரமாக இருக்கும்.
. . . . ஒரு தன்னிலையை ( subject ) நெறிப்படி ( ethics) நடக்குமாறு உந்துகிற முகமைக்கு
 ( agency) மூன்று குறிப்பிடத்தக்க வார்த்தைகளை ப்ராய்டு பயன்படுத்துகிறார்.  அவர் லட்சிய அகன் (  ideal ego), தன் முனைப்புக் குறிக்கோள் ( ego- ideal ) , பேரகன் (  super ego ) என்று மூன்றைக் குறிப்பிடுகிறார். . . . .
       இந்த மூன்றில் மாவல்லமை சுயமோகிகளின் பேரகனானது ( super ego ) எவரையும் அனுபவி என்று வழிகாட்டுகிறது.  பேரகனைத் தவிர வேறெதுவும் இப்படி நிர்ப்பந்திக்காது.  சுசான்சுக்கு (jouissance) ,அதாவது அனுபவிப்பதற்கு ( to enjoy ) பேரகனானது அத்தியாவசியமான ஒன்றாகும் என்கிறார் லக்கான். ( Nothing forces any one to enjoy except to super ego.  The super ego is imperative of Jouissance – enjoy )
–Ego Ideal and the Super Ego : Lacan as a viewer of casablanga – Silavoj Zizek

       இப்போது பீடாதிபதிகளுக்கும், அவரை  வழிபடுவோருக்கும் (devotee ) உள்ள உறவென்ன?
       ….. மனிதர்களுக்கிடையிலான உறவுகள் பற்றிய புரிதலுக்கான முயற்சிகள் செய்யும்போது, ல்க்கான் எஜமான் / அடிமை உறவினைச் சுட்டிக் காட்டுகிறார்.  நம் வசதிக்காக இதை உயர்ந்தவர் , தாழ்ந்தவர் என்று கூட மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
       ஆனால், லக்கான் எஜமான் / அடிமை உறவின் மூலம் வழக்கமான மனித உறவுகளின் பண்பினைச் சுட்டுவதற்கும் , அடிபணிதல் மற்றும் அடிமைத்தனம் என்பதிலிருந்தும் தனித்துக்காட்டும் ஒரு உருவகமாக எத்தனிக்கிறார்.
       . . . . லக்கானைப் பொருத்தவரை மனிதத் தன்னிலையாக்கம் (  subjectivity  ) உண்மையில் முதலில் அடையாளமற்ற இல்லாமையில் குணாம்சப்படுத்துகிறது.  இருந்தாலும், தாம் யார்? என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம் . லக்கான், மனிதர்களின் வழமையான விரும்பும் ஒன்றாக want- to- be என்பது பற்றிக் கூறுகிறார்.  அடையாளப்படுத்திக் கொள்ளுதல் என்பது தன்னிலையாக்க முழுமையாக்கம் (  subjective completion  ) செய்ய முற்படும் ஒரு வழியாகும்.
       ஆனால், ஒரு அடையாளத்தை அடைய ஒருவர் மற்றொருவரிடம் முறையிட வேண்டும்.  ஆகையால், மற்றொருவருடன் ஒரு உறவை ஏற்படுத்தும் பொழுதுதான் தன்னுடைய அடையாளத்தை அவர் கோரிப்பெற முடியும்.  இதேபோல், அடையாளம் என்பது இயறகையான ஒரு நிலை அல்ல, அது சமூக உருவாக்கம் ஆகும் ” .
-           Burn out and inter subjectivity ; A Psycho Analytical study from a Llacanian perspective – Stijn Vanhuele.
       இப்போது, விவேகம் அஜீத்துக்கு பால் அபிஷேகம் பண்ணிய சினிமா ரசிக  சிகாமணி களின் உள்ளார்ந்த ஆசை என்ன என்று புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா. ஆம்.  அவனுக்கென்று ஒரு அடையாளம் கிடைத்துவிட்டது.  அது ஒரு மாயை, ஆனாலும் அவனைப் பொருத்தளவில் அது ஒரு real . இந்தப் போக்கு ஜெயிலுக்குப் போன குற்றவாளிக்காக தீச்சட்டி எடுப்பது , மண்சோறு உண்பது பால்குடம் எடுப்பது , அலகு குத்துவது என்பதிலும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
       மடாதிபதிகள் இம்மாதிரியான கூடா லீலைகளில் ஈடுபடுவது பற்றி சிசாக்-ன் கருத்தைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்.
       . . . . “  இந்துக் கலாச்சாரத்தில் வைதீகத்திற்கும் ( வேதத் தொகுதிக்கும் )  [ Veidika (vedic corpus  ) தாந்த்ரீகத்திற்கும் (  Tantrika ) இடையிலான வேறுபாடாக அது உள்ளது.  அதாவது, தந்த்ரா என்பது வேதமுறையுடன் ஒத்துப்போகாத ( ரகசியமான)  மற்றொரு வழிமுறையாகும்  [ obscene ( secret supplement to Vedas )  .  அது , வேதத்தின் பொதுவான விளக்கங்கள் ( public teaching ) குறித்த எழுதப்படாத ( அல்லது ரகசியமான , வேத சட்டங்களாக இல்லாத ( Non canonic  ) அடிப்படைக் கருத்துகளாகும்.  அது, வெளிப்படையாக மறுக்கப்பட்ட , ஆனாலும் தேவையான மற்றொரு வழிமுறையாகும் (  publicly disavowed but  necessary supplement ).
      தந்த்ரா (  Tantra ) , இன்று மேற்குலகில் மிகப்பிரபலமான ஒன்றாக இருப்பதில் வியப்பேதும் இல்லை.  அது, “ பிந்தைய முதலாளியத்திற்கு “ (  Late capitalism ) அடிப்படையான “ ஆன்மீகத் தர்க்கங்களை “ ( ultimate spiritual  logic  ) வழங்குகிறது. 
      தந்த்ராவானது, ஆன்மீகத்தையும், இகவுலக மகிழ்வுகளையும் (  spirituality and earthly pleasure )  எல்லை கடந்தவற்றையும் பருண்மையான லாபத்தையும் ( transcendence and material  profit) ,  தெய்வீக அனுபவங்களையும் வரைமுறையற்ற பொருள் வாங்கலையும்
(  divine experience and unlimited shopping) இணைக்கிறது.  அனைத்து விதிகளையும் (  rules) சமூகத்தடைகளையும் ( taboos ) மீறுமாறும், புத்துணர்வுக்கான (  enlightenment ) பாதையாக உடனடித் திருப்தியையும் ( instant gratification) பிரச்சாரம் செய்கிறது . . . . .     
 - Slavoj zizek ; “ Denial ; The liberal utopia”

·         குற்றவாளிக்கு ஜெயில்தண்டனை என்பது செய்த செயலுக்கானது
·         செய்யும் காரியம் நெறியானது என்று தன்னிலைக்கு (  subject ) வழிகாட்டிட வேண்டும் ; செய்யும் தொழிலை நெறிப்படுத்த வேண்டும்.
·         இந்திரன் கதை போன்றவைகள் கட்டுடைக்கப்பட வேண்டும்சடங்கு சாத்திரங்களை நடைமுறைக்கு முன் கேள்விக்குட்படுத்த வேண்டும்.
·         மதமும் ஆன்மீக வாதிகளும் கூட சட்டத்திற்கு உட்பட்டவர்கள்தான்.
·         ஓட்டுக்காக மதவாதிகளின் ஆதரவை நாடும் கட்சிகளை கேள்விக்குட்படுத்த வேண்டும்.
                                                                          க.செ







19 Aug 2017

ஒரே தேசம், ஒரே வரி ; ஒரே தேசம், ஒரே மக்கள்.

பாராளுமன்றவாதிகளுக்கு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கத் தெரிந்திருக்கிறது.
       பல தேசிய இனங்களின் கூட்டை, ஒரே தேசம் என்று புனைவு (Fantasy) பண்ணுகிறார்கள்.
       இந்தப் புனைவில் மாபெரும் உண்மையை மறைக்கவும் செய்கிறார்கள்.
       தேசிய இனங்களின் சட்டசபைகளுக்குள்ள வரிவசூலிக்கும் உரிமையைப் பறித்துவிட்டதை மறைத்துவிட்டார்கள்.
       சில மாதங்களுக்கு முன் பண செலாவணியில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று ஒரு கூத்தடித்து ஓயவில்லை.  இப்போது வரி விதிப்பதற்குள்ள சட்டசபையின் உரிமையை பறித்துவிட்டார்கள்.  இனி சட்டசபை உப்புக்கு சப்பாணியாய் போலீஸ் துணையுடன் இருக்கும்.
       பெரும்பாலும் வரி அதிகம், விலை ஏறும் என்று பொருளாதார வாதம் ( Economism )     பேசுகிறார்களே ஒழிய தேசிய இனங்களின் சட்டசபையின் அங்கவஸ்திரம், டவுசர் எல்லாம் மோடி பிடுங்கிவிட்டார் எனபதை இன்னும் உணரவில்லை போலும்.
       உனக்கு செருப்புப்போடும் உரிமை இனி கிடையாது என்று சொன்னபிறகும் கூட செருப்பு விலையை குறைக்க குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
       மிகச் சாதாரணமான போராட்டத்திற்குக் கூட குண்டர் தடைச் சட்டம் (மே 17 இயக்கத்திற்கு) போட ஆரம்பித்துவிட்டது   சுய அடையாளமில்லாத மந்திரிசபை உடைமையாளர் குழு.
       1000 ரூபாய் நோட்டு இயக்கமும், புதிய வரிவிதிப்பு முறையும் எப்படி அரசியல் தளத்திற்கு வந்தது என்று எண்ணிப்பார்த்தால், மாயக்கள்ளன் மாதிரி ஒரு நாள்,
       நமது பொருளாதாரம் பற்றிய முக்கிய முடிவுகள் பொது விவாதம் இன்றி, மிக ரகசியமாக, மூலதன ஆட்சிக்கான வழிவகைகளைக் கட்டமைக்கின்றன ”.
       ஐரோப்பாவின் TISA [ Trade in Services agreement ( சேவைத் துறைகளில் வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் ) ]  ஒப்பந்தங்கள் மாதிரி ஜனநாயகத்தை குப்புறப் புரட்டிப் போட்டுவிட்டு பொருளாதார சுதந்திரத்திற்கு வெண்சாமரம் வீசுகின்றனர்  சுய-மரியாதை ( self - esteem  ) அற்றவர்கள். ......( சிசாக் )
       இன்றைய முதலாளித்துவ உறபத்திச் சூழலில் சுதந்திரம் என்பது, சுதந்திரமான சந்தை, சுதந்திரமான வர்த்தகம், சுதந்திரமான விற்பனையும் கொள்முதலும் என்றே பொருள்படும்
      சுதந்திரம் என்பது சுதந்திரமான மூலதனத்திரட்டலாகும் ;
      தம் குழந்தைகளின் கல்விக்கட்டணம் ஏறுமுகமாகவே இருக்கிறது.  பின் எப்படி அரசு ஊழிய உடம்பு லஞ்சத்தைக் கைவிடும்.
       கல்வித்துறையையும் முற்றிலும் மத்திய அரசிடம் அடகு வைக்கப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.  தொழிற்கல்வி, மருத்துவம், பல்கலைக் கழகம் உள்ளிட்டு கல்வியானது ஏற்கனவே மத்திய-மாநில பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது.
       கூடங்குளம் அணுஉலைப் போராளித் தமிழர்களைச் சமனப்படுத்த, அணுஉலையை மறுத்தவர்களுக்கு இங்கிருந்து மின்சாரம் கேட்க உரிமை இல்லை; கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும் தமிழகத்திறகேஎன்று மத்திய எரிசக்தி , சுரங்க அமைச்சர் பியூஸ்கோயல் கூறி, அண்டை மாநில உறவைச் சீர்குலைக்க எத்தனிக்கிறார்.
       அரசியல் தளத்தில் இதன் மறுபக்கம்.; 
     ஒரு பக்கம் பயங்கரவாதம், மற்றொரு புறம் எல்லையில் பாகிஸ்தான் , இமயத்தில் சீனா, தென் கடலில் தினந்தோறும் மீன்பிடித் தமிழர் சாவு , சிறைபிடிப்பு .
       ரஜினி / கமலின் அரசியல் பற்றி பட்டிமன்றம் , கருத்து விவாதம் , சரி  / தப்பு ; வெங்காய விலையோ டெல்லிவரை, தக்காளியோ பவுன்விலை ; இதில் வெட்கம் இல்லாதவர்கள் விலைவாசி குறைந்துவிட்டது என்கிறார்கள்.  மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 73 குழந்தைகள் மரணம்.
       ஜெ. இறந்து மாதங்கள் பல கடந்தபின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய விசாரணைக் கமிஷன் அமைக்கப் போகிறார்களாம்.
       ஜனநாயகம் என்றால் என்ன என்று ஆளும்கட்சியும் அவர்களின் துந்துபி தொலைக்காட்சி ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.
       இன்றும் விவசாயிகள் மௌனராகம் பாடுவது ஏன்?  இனியும் என்ன நடக்க வேண்டும், நாட்டுக்குள் சுனாமி வீசவேண்டுமா?
       இலவசத்திற்கு அடிமையானவர்கள் EVIL- க்கு துணை போவதில்லையா?  விலங்குக்கு (மாடு) பரிகாரம் தேடும் அரசியல்வாதிகள் விவசாயிகளின் தற்கொலைக்கு பேச்சைக் கூடக் காணவில்லை.
ஜனநாயகப் பற்றாக்குறை
       ஜெ. இறந்தபிறகு ஜனநாயகப் பற்றாக்குறை மற்றொரு வடிவம் எடுத்துள்ளது.  பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் சட்டசபையை இடம் பெயர்த்து ( replace ) விட்டு அதிமுக-வின் அணி வாரியாக எரிந்த கடசி, எரியாத கட்சி என மூச்சு முட்ட பேசுகிறார்கள்.  ஓரணி, மைனாரிட்டி  M.L.A-க்களின் விலைப்பட்டியல் MRP Rating - ஆக ஆகிவிடும் போலிருக்கிறது.
       தமிழக சட்டசபைக்குப் பதிலாக M.L.A-க்களின் தொலைக்காட்சி பேட்டி, மாறி மாறி, இதில் சரி / தவறு என பேசுகிறார்கள்.
       விவசாயிகள் தண்ணீருக்காக கதறிக் கொண்டிருக்கிறார்கள் ; நகரத்துக்கு ஆற்று மணல் கடத்தப்படுவதுடன், இப்போது தண்ணீர் இருக்கும் கிணறுகளை விலைபேசி நகரத்திற்கு தண்ணீர் கடத்தப்படுகிறது.  விரைவில் அமேசான்.com –ல் என்னென்ன இலவசங்களுடன், குடம் தண்ணீர் எவ்வளவு என்று நடிகை ஒருவர் கூறுவார்.
       ஜனநாயகம் என்பது குறுங்குழு வாதமாகிப் போய்விட்டது.  அதை வெட்கமில்லாத ஊடகங்கள் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
       அமெரிக்க ஜனாதிபதி இப்தார் விருந்து (முஸ்லீம்களுக்கு) கொடுக்கவில்லை.
       உ.பி. முதல்வர் தாஜ்மஹாலை இந்திய பாரம்பரிய சின்னம் என்று கூறமாட்டாராம்.  கீதையையும், ராமாயணத்தையுமே பூர்வீகம் என்று கூறுவாராம்.  இதராகள் மீது இவ்வளவு பகைவெறுப்பு கொண்டவர்கள் இவர்கள்.  இவர்களிடம் எப்படி ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது?
       இவ்வளவு தூரம் , மனத்தை வக்கிரம் ஆட்சிசெய்யவிட்டவர்களிடம் ETHICS-ஐ (அறநெறி) எப்படி எதிர்பார்க்க முடியும்?
க.செ