11 May 2016

" ஜெ " : காண்பதற்கரிய பரப்பிரம்மம்

       கணக்கிடமுடியாத காலத்தைக் கடந்த ஒன்றல்ல இது .
       இது , அதுவாகப் பாவித்து Virtual Reality யாக தொலைதூரத்துப் பிம்பமாகத் தெரியும்.
       அரூபமான தொப்புள்கொடி உறவு கொண்டாடும்.
       ஒரு பழங்கதை நிஜமாகிறது :
      இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் உயர்ந்த மலை உச்சியில் நின்றுகொண்டு ஒரு மனிதன் “ Hai ! Hitler “ என்று ஓங்கி சமவெளியை நோக்கிக் கத்தினானாம் . யார் என்று பார்த்தால் , அது ஹிட்லர் தானாம் . அவன் மனதில் ஹிட்லர் என்பது மா வல்லமை
( omnipotent ); எங்கும் நிறைந்தது ( omnipresence) . [ நம்மூர் , மூன்று உலகையும் தன் காலடியால் அளந்த வாமனன் மாதிரி ] .இது ஹிட்லரின் அகப்புறம்.
       பிந்தைய நவீன காலக் கட்டத்தில் , மூலதனத்தின் சட்டசபைப் பிரதிநிதிகளை 110 விதியின் ( rule ) பேரில் கற்சிலைகளாக்கிவிட்டு , கையாலாகாத ஜடங்களாக்கி தன் விருப்பத்தை நட்த்திக் கொள்ளலாம்.
       விதி 110 என்பது  ( ஹிட்லருக்காக ) பாசிஸ்டாக இயங்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளே வசதி செய்திருக்கிறது போலும்.
         Evil   கண்ணுக்கு நெறி தெரியாது . நெறியை , நல்லதை அழிக்கத்தான் செய்யும் .
       பரப்பிரம்மத்தை மக்கள் காணொலிக் காட்சியில்தான் தரிசிக்கமுடியும்.
       [ நூற்றுக் கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோதும் காட்சியளிக்க மனமிரங்கவில்லை ]
       சக மந்திரிகள் , M.L.A  -க்கள் எல்லாம் மூலவிக்கிரகத்திற்கு முன் துவாரபாலகர்களாக மட்டுமே நிலைகொண்டிருக்க முடியும் .
       கொந்தளிப்பு வசப்பட்ட நேரமானால்.......தொப்புள்கொடி உறவு பிறந்துவிடும் .
                    

உங்களால் நான் .
உங்களுக்காக நான் ”.


                                       சென்னையில் வெள்ளம் ( வாட்ஸ் அப் )
                      உங்கள் அன்புச் சகோதரி  ஜெயலலிதா பேசுகிறேன்.
                     உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்.
                     எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது.
                     எனக்கு சுயநலம் அறவே கிடையாது.
                     எனக்கு எல்லாமே நீங்கள்தான்.
                     என்  இல்லமும் உள்ளமும் தமிழ்நாடுதான் “. –www.youtube.com /water
                தமிழக முதல்வரின் பேச்சில் குறிப்பான்கள் காணாமல் போயிருக்கிறது.
       உதாரணமாக  , அதிகாரம் எப்படி ஒடுக்குகிறது என்ற குறிப்பான் இல்லை .
       அந்த ஒடுக்குதலின் துவக்கப் புள்ளியை சிம்பாலிக்காக ( symbolic ) உணரமுடியும்.
       நழுவி விட்ட குறிப்பான் ஆதிஒடுக்குதலை ( primarily repressed ) குறிப்பிடுகிறது .
       ஒடுக்குதல் தொப்புள்கொடி உறவை முன்னிலைப்படுத்துவதால் ஒடுக்குதலின் குறிப்பான்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை “.
       இது Ernest Jones –ன்  Theory of Symbolism .( இது Symbolic Register  -ல் இருந்து வேறுபட்டது )
       இதை எளிமையாக்கினால் ஜெ. இரட்டை விரலை ‘  V ’  வடிவில் காட்டினால் இரட்டை இலை ; அவர் கட்சிச் சின்னமான இரட்டை இலைச் சின்னம் நினைவுக்கு வரும் .
       கறுப்புச்சட்டை அணிந்த மனிதர்கள் கூட்டம் கண்ணில் பட்டால் அங்கே தி.க.வினர் குழுமியுள்ளனர் என்று மனம் அறிந்துகொள்கிறது. இது சிம்பாலிக் ( Symbolic ).
              அதாவது ,  ‘  V  ‘ - யும் , கறுப்புச் சட்டையும் பதிலிகள் ( substitution ) . நாகரீகம்  கூட முடிவற்ற பதிலிகளின் தொடராக இல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும் என்கிறார் ஜோன்ஸ். இது ஒரு நீண்ட கோட்பாடு .
       முதல்வர் ஜெயலலிதாவின் மேலே கூறிய கூற்று ஒரு குறியீடு . அது தொடக்ககாலக் கூறை ( primary element ) பிரதிநிதித்துவம் செய்கிறது.
       ஏனெனில், குறிப்பீடானது ( அன்புச் சகோதரி ) தொடக்க காலக் கூறுடன் தொடர்புடைய ஒன்றைக் கொண்டுள்ளது ; ஒன்றை ஒன்று பதிலீடு செய்து கொள்கிற சொற்களுக்கு இடையில் உள்ள நெருக்கமான உறவுக்கு அழுத்தம் கொடுக்கிறார். செய்திகளுக்கும் விசயங்களுக்கும் இடையிலான முரண்பட்ட தன்மைகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை .
       மக்களுக்கும் தமிழக முதல்வருக்குமான முரண்பட்ட உறவு எப்படி மாற்றம் ( பதிலி ) ஆகிறது பாருங்கள் .
       மக்கள் = உங்கள் ஆகிறது ; முதல்வர் = சகோதரி ஆகிறது.
       மக்களுக்கு வரும் துன்பங்கள் = உங்களுக்கு வரும் துன்பமாகிறது ( intimacy ) .
                     எனக்கு எல்லாமே நீங்கள்தான் .
                     முதல் மந்திரி = எனக்காகிறது.
                     4 1/2 கோடி மக்கள் = நீங்கள்தான் ( உறவு ) ஆகிறது.
       என் இல்லமும் உள்ளமும் தமிழ்நாடுதான் ” . ( கொடநாடு , சிறுதாவூர் , போயஸ் கார்டன் தவிர . அப்படித்தானே ?)
       மக்களின் அரசியல் , பொருளாதாரம் , சாதியப் பிரச்சினைகள் அனைத்தையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஜெ. சொல்வதாக மக்கள் உணரவேண்டும் என்கிற ஜெ.யின் நனவிலி ஆசையின் வெளிப்பாடு அது.
       இம்மாதியான தாய் , சகோதரி குறியீட்டு முழக்கங்கள் பலவுண்டு . சமயத்திற்கு தகுந்த பயன் உண்டு அவைகளுக்கு.
       இறுதியாக , இதிலிருந்து , மிக முக்கியமான , அடிப்படையான, குடிமகன் / குடிமகள் என்பது ஜெ.-யின் குறியீடுகளால் நனவிலி உணர்விலிருந்து மறக்கடிக்கப்படுகிறது.
       ரத்த உறவு முன்னிறுத்தப்படுகிறது.
       இந்தக் குறிப்பீடு மற்றொரு EVIL  -ஐ செய்ய வித்திடுகிறது.
       மக்களை (  ரத்த உறவின் பேரில்)  சமூக விலக்கம் செய்கிறது.
       சமூக விலக்கம் என்றால் என்ன? A Bionian Approach by Ana Archangelo
       சமூக விலக்கம் என்பது சமூகக் குழுக்கள் ( communities ) , நிறுவனங்கள் , இவர்கள் வாழ்கிற வாழுமிடங்கள் போன்ற பிரதானமான சமூக அமைப்புகளில் , பொருளாதார மூலாதாரங்களில் தனியன்களும் , குழுக்களும் எந்தளவிற்கு பங்கேற்க அனுமதிக்கப்  படுகின்றனர் என்பதுடன் தொடர்புடையதாகும் . சமூகப் பங்கேற்பிலிருந்து விலக்குதல் அல்லது ஓரங்கட்டப்படுவது ( marginalization ) என்பது தனியன்கள் , உரிமைகளைக் கொண்டுள்ளனரா? இல்லையா? என்ற பிரச்சினையோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல . அது , தனியன்கள் , தம்மை உரிமைகளைக் கொண்டுள்ள தன்னிலைகளாகத் தம்மளவில் உணர்ந்து கொள்வதற்கான சிம்பாலிக் சாத்தியப்பாட்டை ( symbolic possibility ) கொண்டுள்ளனரா ? இல்லையா? என்பதையும் சார்ந்ததாகும்.
       மேலும் அக்கருத்து கூறுவது ;
       “  இந்த உலகில் ’  ( நாம் யார் என்பதை ) நமக்கு நாமே கண்டுகொள்வதற்கு ; இந்த உலகில் உள்ள ஒரு இடத்தை நம்மளவில் உடைமையாக்கிக் கொண்டுள்ளோம் ‘ என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும் என்று கோருகிறது . இந்த இடமானது இவ்வுலகில் உள்ள சாத்தியமான பல்வேறு இடங்களுள் ஒன்றாகும் ; தனிமனிதர்களுக்கிடையிலும் , பொருளாதார ரீதியாகவும் உள்ள உறவுகளின் வலைப்பின்னலில் உள்ள ஒரு இடமாகும் ; சமூகத்தில் , வாழும் இடத்தில், அதிகாரத்தில் , ஒற்றுமையில் ( solidarity ) அல்லது இவற்றின் ஏதோவொரு சேர்க்கையில் உள்ள இடமாகும் . கட்டமைக்கின்ற , கண்டுகொள்ளுகிற செயல்பாட்டில் இரண்டு வழிகள் பிரதானமாகக் குறுக்கிடுகிறது. அவை (1). தன்னிலையின் தேவைகளை நிறைவு செய்கின்ற ஒன்று. (2). தன்னிலைக்கு ஒரு சமூகம் எவற்றை வழங்கவேண்டும் என்று ஒருங்கிணைக்கின்ற , திட்டமிடுகின்ற ஒன்றாகும்.
       ஜெ-யின் ரத்த உறவு  ( 1 ) . மக்களுக்கான அவசியப்பட்ட நேரத்தில் அவர்களின் தேவையை நிறைவு செய்யவில்லை. ( 2 ). தன்னிலைக்கு சமூகம் எவற்றை வழங்கவேண்டும் என்று ஒருங்கிணைப்பதிலும் , திட்டமிடுவதிலும்.... மக்கள் ஒதுக்கப்பட்டுவிட்டனர்.
       மக்களின் நனவிலியில் உள்ள ரத்த உறவை மீட்டுறவு செய்வதற்காகவே...
                       “  எனக்கு எல்லாமே நீஙகள்தான்.
                       எனக்கென்று குடும்பம் எதுவுமில்லை.
                       நீங்கள்தான் என் குடும்பம்....
                               
உடன்பிறவா சகோதரி  ?
                      
       இந்த நனவிலி அரசியலை முறியடிக்கும்போதுதான் [ அதாவது , இரண்டு கூறாக்கப்பட்ட உடலை தலைமாற்றாக போட்டபின்தான் ஜராசந்தன் செத்து ஒழிந்தான். கிருஷ்ண பரமாத்மாவே அப்புறம்தான் பெருமூச்சு விட்டார் ] , அதாவது , நனவிலிதான் அரசியலாக உள்ளது.
மொழியாக்கம் : பிட்சுமணி
                                                  
நண்பர்களுக்கு ,
                இனிவரும் நாட்கள் மற்றமையில் ஓய்வுநாட்கள் எனக்கொள்ளலாம்.
                கடந்த ஒருவருட காலத்தில் தொடர்ச்சியாக 48  ஆய்வுக்கட்டுரைகள் . இவைகளை மற்றமை 7 – வது ஆய்விதழாக கொண்டுவரலாம் என எண்ணுகிறோம் . இதழாகக் கையில் இருப்பது இன்னும் வசதிதானே.
       அவசியமென்றால் இடையில் ஒரு சில கட்டுரைகள் வரலாம்.
       இன்னும் ,விமர்சனங்களும் Opinion – களும் மற்றமையைச் செழுமையாக்கும் .
அன்புடன்
க.செ
     11-5-2016 
      
                    
       

2 May 2016

வைகோ மனமாற்றத்தின் பின்னணி என்ன ?

                                                [ தி இந்து ஏப்ரல் 24 -2016 ]

“  தன்னை மையமாக வைத்து ஜாதி மோதலை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் . அதற்கு நாம் இரையாகக் கூடாது என்று கூறிவிட்டு வைகோ கோவில்பட்டி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை .
       சில அரசியல் கட்சித் தலைவர்கள் ,“ தோல்வி பயத்தால் போட்டியிலிருந்து விலகி விட்டார் “ என்று கூச்சமில்லாமல் கூறியிருக்கின்றனர்.
       வைகோவிற்கு வெற்றியும் தோல்வியும் பழக்கமானதே ; ஆகையால் தோல்வி பயம் என்று பேசுவது முறையற்றது .
       வைகோ தன் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நிகழ்ச்சியாக வடக்குத் திட்டங்குளம் கிராமத்தில் மாலை 5மணிக்கு முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க முயற்சிக்கும் பொழுது அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் வைகோ , தேவருக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்....
       உடுமலைப்பேட்டை சங்கர் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததையும் அவரது மனைவி கவுசல்யாவுக்கு ஆறுதல் கூறியதையும் குறிப்பிட்டு வைகோவிற்கு எதிராக கோஷமிட்டனர் ; இது பிரச்சினையின் துவக்கம்.


இந்திய அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் சாதி ஆணவத்தின் Phallic Power – யை , தீண்டாமையை பரப்புவதை தேர்தல் கமிஷன் கண்டிக்காமல் வாய்மூடி மௌனம் சாதிப்பதேன்.

கொந்தளிப்பு வசப்பட்ட மனம்
       வைக்கோ மைக்கைப் பிடித்து  “ தேவர்-நாயக்கர் மக்களுக்கிடையே ஜாதி மோதலை உருவாக்க முயற்சி நடக்கிறது ;
       தேர்தல் சமயமாக இருக்கிறது . இல்லையெனில் 100 பேர் வேல் , கம்பு அரிவாளுடன் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சக்தி எனக்குண்டு. துப்பாக்கிகளைக் கண்டு அஞ்சாதவன் நான். இதற்குப் பயப்பட மாட்டேன் என்று ஆவேசமாகக் கூறினார் ”.
       மன எழுச்சிக் கிளர்ச்சி உணர்வுகளைத் தவிர்த்துவிட்டு குறிப்பானை ( போட்டியிட மாட்டேன் சாதி மோதலை தவிர்ப்பதற்காக ) ஆய்வு செய்யமுடியாது . மேலும் மன உணர்வுகளும் இயல்பாக ஒன்றிணைந்துள்ளன . வார்த்தைகளானது உடல் சார் உருவங்களையும் ( bodily metaphor ) புலனுணர்வு சார்ந்த (sensual connotations ) கருத்துகளும் நிரந்தரமாக பிணைந்ததாக உள்ளன. மேலும் மன எழுச்சிகளை (emotions ) அவற்றின் உடல் ரீதியான மூலத்திலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாது “ சிசாக்  .
       வைகோவின் பேச்சு , உடல் மொழியின் பொருளை சிசாக்கின் மன அலசல் ஆய்வைக் கூர்ந்து படித்து புரிந்துகொள்ள முடியும்தானே !
       இந்து மக்கள் ஜாதி ரீதியாக பிளவுண்ட சமூகம்தான் . ஆனால் , சாதி மோதலைப் பற்றி கவலைப்பட்டது உண்மையாக இருக்கக்கூடும் ; வைகோவின் முடிவு இப்படி இருந்திருந்தால்......
       ஆனால் , வைகோ பாராளுமன்ற அரசியல் தன்னிலையாக முடிவெடுத்துவிட்டார். ஆணவ , ஆதிக்க சாதியினரின் இக்கிளர்ச்சி இவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு . தேர்தல் வெற்றியை இங்கு குறிப்பிடவில்லை .
       தேர்தலும் ஜாதியும் பிரிக்க முடியாத மகா கூட்டணி என்பது வைகோவிற்குத் தெரியாதா ?
       திருமணம் என்பது ஒரு அடிப்படைக் குடியுரிமை . மேலாதிக்கத்திற்காக (super power ) தயாராகப் போவதாக ( 2020 – வல்லரசு ) ஏகாதிபத்திய முடைநாற்றம் கொண்டவர்களுக்கு விளங்காது .
       உடுமலைப்பேட்டை சங்கர் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் என்ன ?
       சங்கர் தலித் . அவர்  , ஆதிக்க மனோபாவம் கொண்ட மேல் சாதியைச் சார்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் பண்ணியதால் , ஆதிக்க மனோபாவம் கொண்ட அவர்கள் சங்கருக்கு கொலைத் தண்டனை வழங்கி தன் சக சாதியினருக்கு தங்களைப் புனிதன் எனக் காட்டிக் கொண்டனர் .
      சுதந்திரம் பற்றி சிசாக் பேசும்போது ,       “ ஒரு தன்னிலை எந்த சமூகத்தைச் சார்ந்ததோ அந்தச் சமூகத்துடன் தன்னிலைக்குள்ள உறவில் குறிப்பிடத்தக்கதொரு முரணெதிர் இயக்கம் ( paradoxical thing ) உள்ளது . அச்சமூகம் தன்னிலையிடம் பின்வருமாறு கூறுகிறது . அதாவது , சரியானதை நீ தேர்வு செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உனக்கு தேர்வுச் சுதந்திரம் உண்டு ; உதாரணமாக , நீ சரியானதைத் தேர்வு செய்யவேண்டும் ; அதாவது, சூளுரையில் ( oath ) நீ கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் , சூளுரையில் நீ கையொப்பமிடுவதற்கு அல்லது கையொப்பமிடாமல் இருப்பதற்கான தேர்வுச் சுதந்திரம் உண்டு. நீ தப்பான தேர்வை மேற்கொண்டால் நீ தேர்வுச் சுதந்திரத்தையே இழந்துவிடுவாய் “ என்கிறது அச் சமூகம் .
       [ தமிழகத்தில் காதல் திருமணத்திற்கு நாங்கள் எதிரி அல்ல . ஆனால் , அது பெற்றோர் சம்மதத்துடன் ( ஈடிபல் கட்டளை ( oedipal law ) ) நடக்கவேண்டும் எனக் கட்டளையிடும் கட்சிகளும் உண்டு ].
சிசாக் மேலும் இதுபற்றி விவரிக்கிறார் :
       அதாவது , ஒரு தன்னிலையானது தனது சொந்தத் தேர்வுமுறையைச் சாராமல் அத்தன்னிலை ஏற்கனவே எந்தச் சமூகத்தைச் சார்ந்ததோ அந்தச் சமூகத்தின் தேர்வுகளுக்குள்ளேயே சுதந்திரமாகத் தேர்வு செய்யவேண்டும் என்கிற உண்மையில்தான் திணிக்கப்பட்ட சுதந்திரத்திற்கான ( forced freedom ) சூழல் உள்ளது .
      அதாவது,அவன் /அவளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதையே தேர்வு செய்யவேண்டும் “.
      இந்த ஈடிபல் கட்டளையை பெண் கவுசல்யாவும் சங்கரும் மீறி உள்ளனர் .
                ஆனால் , சங்கர் தலித் என்பதால் ஆதிக்க மனோபாவம் முதலில் சங்கருக்குத் தண்டனை
( கொலை) வழங்கியுள்ளது . ஈடிபல் நீதியை மீறிய பெண்ணும் தப்பிவிட முடியாது ; என்றாவது ஒருநாள் தண்டணை ஏற்றாக வேண்டும் .
       இந்த ஈடிபல் சட்டம் மேல் சாதி , ஆதிக்க ஆணவ சாதி , தலித் என பலவகையில் இடம் , வல்லாண்மை , அதிகாரம் , அரசியல் வாக்கிற்கிணங்க சற்று நீட்டுப்போக்காக இருக்கிறது .
       சிசாக் கூறும் ஈடிபல் விதி ,  இந்து ஜாதி சமூகத்திற்கு பொருத்தமாகத்தான் உள்ளது .
       மீண்டும் வைகோ கதைக்கு வந்துவிடலாம். சிலைக்கு மாலை அணிவிக்கும் தகுதி வைகோவிற்கு மறுக்கப்படுகிறது . வைகோ , சங்கர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தது ; சங்கரின் மனைவிக்கு ஆறுதல் சொல்லப்போனது ; மறவர் சாதிக்கு ஈனம் என்பதால் வைகோவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
       வைகோ தீரமானவர் ( அவரே சொல்லுகிறார் ) கோவில்பட்டி தேர்தலில் நிற்காமல் என வைத்துக் கொள்வோம் ;
       சட்டசபைத் தேர்தலை பொருட்படுத்தாமல் , மேற்கூறிய பிரச்சினையை மையமாக வைத்து ஒரு சமூகப் போராட்டமாக மாற்றி , அவரும் சமூகப் போராளியாய் மாறிவிட்டால்...  எப்படியிருக்கும் என்று சற்று கற்பனை செய்யுங்கள் ;
1.        சங்கர் கொலையை ஆதரிப்பவர்தான் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலையிட  வேண்டுமா ?
2.        இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்த எந்தக் கட்சித் தலைவராயினும் கோவில்பட்டிக்கு வரக்கூடாதா ? ; சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாதா ?
3.        தேர்தலில் போட்டியிடும் பிரமுகர்களும் இந்தக் கட்டளையை ஏற்கவேண்டுமா ?
4.        தி.மு.க விற்கு ஓட்டளிக்குமுன் இந்த நிபந்தனைக்கு உட்பட்டவர்கள்தான் தி.மு.க.விற்கு ஓட்டளிக்கவேண்டுமா ?
 என்று வைகோ தேர்தலில் நின்றுகொண்டு , மேற்கூறிய கோஷங்களை மேடையில் முழங்க , உண்ணாவிரதமிருக்க ஆரம்பித்துவிட்டால் ; [ அங்கு சி.பி.ஐ ; சி.பி.எம்.-ற்கு ஓரளவு செல்வாக்கு உண்டு ; வைகோவிற்கு ஆதரவு கிட்டும் ]
வைகோவை நிர்ப்பந்தித்தவர்களின் கோரிக்கைகள்தான் அவைகள் . ஆகவே அவர்களிடமே ஆதரவு கேட்கலாம். அதற்கு வைகோவிற்கு உரிமை உண்டு .
       இப்போது கோவில்பட்டிக்கு வரும் தலைவர்கள் / கலைஞர் , தளபதி , அம்மா , அன்புமணி, விஜயகாந்த் , ஜி.கே. வாசன், மோடி போன்றவர்கள் என்ன செய்வார்கள் ? என்ன பேசுவார்கள் ?
              அரசியல்வாதித் தன்னிலை வைகோ
                            Vs
          சமூக விடுதலைத் தன்னிலை வைகோ
       இதில் யார் யார் ?.......யாரையெல்லாம் எதிர்ப்பார்கள் ?
       எந்த வைகோவிற்கு (  தன்னிலைக்கு ) ஆதரவு பெருகும் இந்திய அளவிலே .
       வைகோவின் கொந்தளிப்பு வசப்பட்ட மனம் தவறான தன்னிலைக்கு வித்திட்டுவிட்டது.
       அவருக்கு வழிகாட்டவேண்டிய ( சமூக ) நெறியும் வழிகாட்டவில்லை அவ்வளவுதான் .
       இறுதியாக , சிசாக் மற்றொரு பரிமாணத்தை முன்வைக்கிறார் :
       சுதந்திரம் என்பது தீயதிற்கு ( evil ) காரணமாக முன்வைக்கப்படுகிறது ( as cause of the evil ) . அதாவது , தன்னிலையின் சுதந்திரத் தேர்விலிருந்து , இத்தேர்விற்கான அவன் ( சங்கர் போன்றோர் ) முடிவிலிருந்து தீயது ( evil ) விளைகிறது . ஆனால் , சுதந்திரம் என்பது தீயதற்குக் காரணம் என்றால் , நமது பிரக்ஞைபூர்வமான விருப்பத்தைச் சார்ந்திராதவை என்று கருதப்படுகிற எண்ணிலடங்காத தீயவைகளை ( moral , physical ) எப்படிக் கணிப்பது ? நமது பிரக்ஞைபூர்வமான தேர்வுகள் , முடிவுகளுக்கு முன்பு சில முக்கியமான தேர்வுகளை அல்லது நனவிலித் தேர்வுகளை முன்னனுமானித்துக் கொள்ள வேண்டும் ( presuppose) என்பதே சாத்தியமான தீர்வாக இருக்கமுடியும் என்கிறார் “.
       இச்சமூகத்திற்கு சாதித் தன்னிலையாக இருப்பதுதான் உன்னதமானது ;அப்படித்தானே ?
                வைகோ சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுத்த ; கொல்லப்பட்ட சங்கர் திருமணத்தை முன்னிலைப்படுத்திய தன்னிலைகளால் வைகோ தனக்குத்தானே உருவாக்கிக்கொண்ட தற்செயல் கட்டமைப்பை [ போட்டியிடமாட்டேன் என்பது ] அறிய லெக்கானின் கேள்வி இங்கு , இந்த இடத்தில் முக்கியமாகப்படுகிறது . அதாவது , பிளவுபட்ட தன்னிலைகளுக்கிடையில் எவ்வகையான நெறி உறவு ( Ethical bond ) இருக்கவேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார் லெக்கான் .
       வைகோ திராவிட , இனமான , etc… பரம்பரை என்று சொல்லிக் கொள்பவர் ; ஒழுக்கம் ,நெறி போன்றவைகளை முக்கியப்படுத்துபவர் .ஆகையால் அவரிடம் லெக்கானின் கேள்வியை கேட்பது தவறல்ல.
       முரண்பாடு , உறவில் வந்துவிட்டது . ஆனாலும் , பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் மதிக்கின்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு அவர்கள் முன் கோரிக்கையாக வைத்திருக்க வேண்டாமா ? வெளிப்படையாக என்னவிதமான விருப்பம் அவர்களுக்கு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டாமா? ஒரு முன்னணித் தலைவர் என்ற முறையில் அரசியல் மட்டும்தானா ? நெறிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் வேண்டாமா ?
      நம்முடைய பிம்பத்துடன் நாம் கொண்டுள்ள உறவின் மையத்தில் அல்லது நானுணர்வில் அன்னியமாதல் பிரதானமாக உள்ளது ( basic alienation ).....மேலும்,பரஸ்பரமாக தாக்குதலுக்கு     ( mutual aggressivity ) நம்மை நிர்ப்பந்திக்கிறது “.....- லெக்கான் .
      மேற்கூறிய கூற்று , வைகோவின் பிளவுபட்ட தன்னிலைக்கு , “ அன்னியமாதல் உறவு “ மேலோங்கி இருந்திருப்பதால் அத்தொகுதியை புறக்கணித்துவிட்டார் என்று புரிந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது . 
   .
 மொழியாக்கம் : பிட்சுமணி      
                                                                    க.செ
                                                                   2-5-2016