25 Mar 2019

அடைந்தால் மகாதேவி , அடையாவிட்டால் மரணதேவி


[ பொள்ளாச்சி , மீண்டும் இந்த மனிதர்கள் தோன்றாமல் இருக்க ]
     கொங்கு நாட்டின் முக்கிய சந்தை நகரில் நடந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறை படமாக எடுக்கப்பட்டுள்ளது. பெண்களை நிரந்தர அடிமை ஆக்குவது, அவைகளை ரகசியமாக  விற்பனைப் பொருளாக்குவது 5அல்லது 6ஆண்டுகளாக வெற்றிகரமாக (ஆளும் கட்சி உட்பட ) நடந்தேறியிருக்கிறது. வக்கிரம் ( perversion ) பாலியல் வக்கிரம் இது. தண்டனை இபிகோவின் சட்டப்படிதான் நடக்கும். சட்டம் கடந்த காலத்தில் இயற்றப்பட்டது.
       ஒருவேளை இஸ்லாமிய , அரேபிய நாடுகளைப்போல் மரண தண்டனை ,பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு போன்ற அச்சுறுத்தல் தண்டனைகள் பாலியல் வக்கிரத்தை குறைக்க உதவக்கூடும். பின் நவீனத்துவ கோட்பாட்டாளர்கள் இதை எதிர்க்கக்கூடும். காலம் பதில் சொல்லும் .
       உலகெங்கும் , இந்தியாவெங்கும் பாலியல் வக்கிரம் நடைபெறுவது ஏன்?
        இது கேட்கப்படவேண்டிய கேள்வியா , இல்லையா? நம்முள் பதில் இருக்கிறதா?
       ஊடகங்கள் , அரசியல் எல்லாம் தண்டனை பற்றி விலாவாரியாகப் பேசுகின்றன.
        பாலியல் என்பது இச்சையின் (desire) ஒரு அம்சம் என்கிறது மன அலசல்.
       இச்சை என்பது மனித, இனங்களின் உள்ளார்ந்தது. பொதுவாக தூண்டல் ( drive )               (அகத்தூண்டல்,புறத்தூண்டல் ) என்பது புறத்தூண்டல், சமூகம் சார்ந்தது.
சினிமா , டிவி, நகை விளம்பரத்தை சற்று கூர்ந்து பாருங்கள்.ஆடை விளம்பரங்கள், செல்பி விளம்பரங்கள் அமெரிக்க நாகரீகத்தை வளர்ச்சி என்றும் , அது ஒன்றுதான் மோட்சத்திற்கான பாதை என்றும் வக்கிரத்தின் கருத்தியல் வழிகாட்டுதலாக உள்ளது.
        பாலியல் கவர்ச்சி , பாலியல் வக்கிரம் தனித்துவமாக இயங்கவில்லை. தரகு முதலாளிய அதிகாரம் தனக்கானது என்று மதம், சாதி மேட்டிமை கைப்பற்றி வைத்துள்ளது. தூண்டல் மேலே சுட்டிக்காட்டியதிலிருந்துதான் தூண்டப்படுகிறது. இதற்கு அமெரிக்க நாகரீகமென்ற படையெடுப்பு காரணமே.
       இப்படி உண்மையை புரிந்தால் ஊடகம், சினிமா, விளம்பரம், வக்கிர நாகரீகம், பெண்களின் வசீகரம் (seduce) பண்ணுகிற மாதிரியான உடை, உடல் மொழி ( body language ) உட்பட அனைத்தையும் காத்திரமான விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி வரும்.
       இப்படிச் சொன்னால் எல்லா ஆண்களுமா இப்படி இருக்கிறார்கள்?என்றும் சிறுமிகளும் பலாத்காரத்திற்கு உட்படுகிறார்களே என்ற கேள்வி எழும்.
       சிறுமிகளுக்கு பிற ஆண்கள் எங்கெங்கெல்லாம் தொடலாம், தொட அனுமதிக்கக் கூடாது என்று சில பள்ளிகளில் ( பெண் பள்ளிகளில்) சொல்லித்தருகிறார்கள். அதன்படி புரிந்து வளராத பெண்களுக்கு பெற்றோர் ,உறவினர், நலம் விரும்பிகள்தான் சொல்லித்தரவேண்டும்.        அஜாக்கிரதையான அந்தப் பெண்குழந்தை அகங்காரம்,பிடிவாதம் இல்லாமல் வளர்ந்திருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக அதைப் புரிந்துகொள்ளும்.இல்லாவிட்டால் விவகாரம்தான், எத்தனை ஆண்டுகளானாலும்.
       குழந்தை வளர்ப்பில், தாய், குழந்தை உறவில் [ இருவர் உறவில் ( dyadic relation ) ] கவனிக்கவும், சில மாதங்களாவது பிரதான உறவில் தாய் மிகப்பெரிய பங்காற்றுகிறாள்.
       அப்போது தந்தைக்காக குழந்தை அழுவதில்லை.பசி,கதகதப்பு,நீர் நைப்பால் எரிச்சலுற்று அழுது அம்மாவின் முகம் தேடும்.
       இச்சை (Desire ):
         இந்த உறவில் குழந்தை முதல் ஆசைப்பொருளாகிறாள் (other ). ’ M ‘   ஆசையின் பிறப்பிடம் இந்தக் கட்டமே. அதாவது, ஆசைப்படுபொருளை (other ) தேடும், நாடும் இச்சை ( desire ) [ other (சின்ன o) பிற, இதரர் ].மன அலசலில் other என்பதின் பொருள் அவரவர் ஆசைப்படும் நபர், நெருக்கமான ஒருவர் , வஸ்து, பிறர் , இன்னபிறவாகும்.
Other முற்றிலும் வேறான அர்த்தமாகும்  (பார்க்க மற்றமை ஆய்விதல் 2; ஆய்விதழ்கள் ).
       பிறப்பு காலக்கட்டம் முதல் இறுதி காலம் வரை இச்சை (Desire )        தொடர்கிறது.
       இரண்டாம் கட்டத்தில் தந்தையின் அதிகாரம், செல்வாக்கு,
 குழந்தைக்கு மொழிமூலம்  செய்யக்கூடியது, செய்யக்கூடாதது (dos and donts ) அறிமுகமாகிறது;  இதைத் தொடலாம்,அதைத் தொடக்கூடாது, இன்னபிற.
          தந்தையின் இச்செயல்களால் குழந்தைக்கு காயடிப்பு அச்சம் (castration fear,  complex ) ஏற்பட்டு கடைசிவரை நீடிக்கிறது. நண்பர்களிடம், ஆசிரியர்களிடம், காவல் துறையினரிடம், சினிமா, டிவி அனைத்திலும் தன் ஆழ்மன ஆசை உணர்ச்சியை கேள்விக்குட்படுத்தும் சினிமாப்பாட்டு, வார்த்தைகள் உட்பட காயடிப்பு அச்சத்தை ஏற்படுத்தும். இந்தச் சிக்கலின் பாதிப்பு குறிப்பான்களாக (signifier ) சித்தத்தில் பதிவாகிறது.
       மன அலசலின் பிதாமகன் பிராய்டு காயடிப்பை ஆண்குறி நீக்கப்பட்டுவிடுமோ என்ற குழந்தை அச்சம் என்று வெளிப்படுத்தினார்.அது உடலியல் போக்கு என்பதால் டாக்டர் லெக்கான் அதை நீக்கிவிட்டு மேலே குறிப்பிட்ட காயடிப்பச் சிக்கலை ( castration complex ) மீள்வாசிப்பிற்குள்ளாக்கினார்.
       இந்தக் காயடிப்புச் சிக்கலை ,ஆண்குறி நீக்கப்பட்டுவிடுமோ என்ற குழந்தை அச்சம் (பிராய்டு)என்று தமிழகத்தில்,ஆதிகாலத்தில் பரவியது; அது சாசுவதமாக்கிவிட்டது பெரியோரால்.
1970 களிலேயே டாக்டர் லெக்கானின் மன அலசல் ப்ராய்டின் கோட்பாட்டை வளர்த்தெடுத்தது.
 [ டாக்டர் லெக்கான் சாகும்வரை தன்னை,தான் ஒரு ப்ராட்டியன் என்றே கூறிவந்தார்.நான் செய்ததெல்லாம் ப்ராய்டின் கருத்தமைவை வளர்த்தெடுத்ததுதான் என்றே சொல்லி வந்திருக்கிறார் ]
       தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்த ( வைணவ ) பேராசிரியர் உட்பட அனைவரும் ப்ராய்டின் ஆரம்ப கட்டத்தையே தொங்கினர் அது இன்றும் புது ஜீவிகளால் ஜிவிக்கிறது.
       இச்சை ( desire ) என்பது பொருள்மீது கொள்ளும் ஆசையல்ல ( இது,அது ). மாறாக, இல்லாமை உணர்வு (lack) வலிமையாகும்போது ஏற்படும் இச்சை. பொருள் விருப்பத்திற்கு Wish , Want போன்ற பதங்கள் பயன்படுத்தப்படும்.
       பால் கவர்ச்சி ( sexuality  ): சிலரின் குரல் ஓசைகூட சிலருக்கு மட்டும் ஆசைப்படு பொருளாகிவிடும் ( object). குரலின் ஓசை பற்றி பேசும்போது பாடகி ஜானகியின் ” இஞ்சி இடுப்பழகா “ சில நடிகர்களையே பாதித்தது ( பாவம் அவர்களுக்கு அது தெரியாது).1960களில் கன்னடத்துப் பைங்கிளியின் கொச்சையான ( கொஞ்சும் !) தமிழ் உச்சரிப்பு ஏகமாய் வரவேற்பு பெற்றது. சில பெண்களின் கண் அழகு கூட கவர்ச்சி பரப்பலாம். ஏன் சிலபேர்களின் பேச்சு கூட பால் தன்மையைக் கொடுக்கலாம்.    
       ஆகவே,சினிமா,நடிகர்களின் பால்தன்மை (sexuality) பற்றிய மேதமைப் பேச்சுக்களை சற்று ஒதுக்கிவிடவும்.
       இரண்டு முக்கிய காரணிகள்.
       சற்று விரிவாகப் போவதற்கான காரணம்,லெக்கானின் மன அலசல்படி இச்சை ( desire ) என்பதில் காமமும் அடங்கும். மற்றொன்று காயடிப்பு அச்சம் (சிக்கல்) (castration complex ). மேற்கூறிய இந்த இரண்டும், கருத்தாக்கங்களும் ( concepts ) எவ்வளவு தூரம் பிடிபடுகிறதோ,உணர முடிகிறதோ அந்த அளவிற்கு தனிமனித சித்தக் கட்டமைப்பு , சமூக உளவியல், இலக்கிய உளவியல் போன்றவற்றை புரிய ,உணர ஏதுவாகும்.
       இச்சை பற்றிய புரிதல் ,இல்லாமை உணர்வு, ஏக்கம் தனிமனிதனிடம்    செல்வாக்கு செலுத்தும் (அக முரண்பாடு ). அதேபோல் புறத்தூண்டல், குரல் இனிமை,பேச்சு கூட காமத்திற்கு தீனிப் பொருள்தான் என்பதை இனி எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
       தூண்டல் ( drive ):
       தூண்டல் என்பது தொடு உணர்வால் மட்டும் நடப்பதில்லை. தொட்டு உணரமுடியாத இரண்டு பரிமாணம்,முப்பரிமாண விளைவால் ( 3d effect )காட்சியளிக்கும் சினிமா ( இது நிழல் மட்டுமே ) என்ற பௌதீகப்பொருள் தூண்டல் உணர்ச்சிக்கு வித்திட முடியும்.
       நடிகை பிரியாவாரியரின் கண்ணடிப்பு  காட்சியில் இடம்பெறும் அப்பெண்ணின் ஆசைப்படு பொருளான ( object ) பையனின் கண் விபச்சாரத்திற்கு துணைபோவதை கூர்ந்து பார்த்தால் உணர்ந்து கொள்ளலாம்.
       ஆக, காம உந்தலின் பல பரிமாணங்களை சுருக்கமாகப் பார்த்தோம். இக்கட்டுரையின் அடித்தளத்தை இத்துடன் முடிப்போம்.
       சைக்கோட்டிக் ( psychotic ) என்பது மன அலசலின் முக்கிய சித்தக்கட்டமைப்பில் ஒன்று. பைத்திய நிலை, சித்தக் கோளாறு. இப்போதைக்கு இது போதும்.[ நீதிபதி கண் எதிரே மனைவியை கத்தியால் குத்திய கணவர். உபயம் : தினத் தந்தி 20-3-2019]
       19-3-2019ல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நீதி மன்றத்தில் ஒரு பெண்ணை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது. கொலை முயற்சி செய்தவர் மாஜி கணவர். ஜீவனாம்சம் கேட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வழக்கின் வாய்தாவிற்கு வந்தபோதுதான் இந்தக் கொலை முயற்சி.
       இந்தச் சம்பவத்தின் பௌதீகச் சூழல்:  நீதிபதி அறை , நீதிபதி, வழக்குறைஞர்கள் முன்னிலையில்,  போலீஸ் கட்டுப்பாடு, கண்காணிப்புப் பிரதேசம் அது. அந்தப் பிரதேசத்தில், மாஜிக் கணவனின் கொலை முயற்சியின் போது,   சற்றுமுன் சித்தம் என்னவாக இருந்திருக்க வாய்ப்பு. கண்டிப்பாக நானுணர்வு (ego ) என்பது உந்தலால் (drive) , பழிவாங்கும் தன்னகங்காரத்தால் நானுணர்வு முன்னமேயே மூடப்பட்டிருக்கும் / ஏற்கனவே தடுக்கப்பட்டிருக்கும்
( foreclosed).( இந்த நானுணர்வுதான் முக்கிய தற்காப்பு சாதனம்.)
       அது ( ego ) மூடப்பட்டுவிட்டதால் தந்தை அதிகாரம் (Name of the Father ) - அதாவது கலாச்சார ஒழுங்கு, போலீஸ், அதிகாரம், தண்டனை, தூக்கு, சாவு, இவை எதுவுமே எண்ணத்தில் ஏற்படாது. இது நானுணர்வு அற்ற நிலை அல்லது பைத்திய நிலை மாதிரி. அதாவது,சைக்கோட்டிக் நிலை.
       மற்றொன்று மகாதேவி? ஒருதலைக் காதல் கொலை, திராவக வீச்சு , இன்னபிற. இந்த சினிமாக் காதலனுக்கு தான் காதலித்துவிட்டால் அப்பெண் அவனின் ஆசைப்படுபொருள் ( object ) என்பது அவன் எண்ணம். அப்பெண் ஏதோ சொந்தக் கரணங்களுக்காக அவன் காதலை ஏற்க முடியாமல் போய்விட்டால் - தான் பணக்காரி,அவன் சராசரியான மனிதன் என்பதற்காகக் கூட அவனை ஏற்க மறுக்க அவளுக்கு எல்லாவித உரிமையும் உண்டுதானே- ,
        இப்போது அவன் தனக்குள்ளேயே ( மனம் ) இஸ்டத்திற்கு கதை வசனம் எழுதிக் கொள்கிறான். அவனுடைய சுயமோகக் கோபத்தால் அதீதமாக சிந்திக்கும் திறனை இழக்கிறான். விளைவு ? சென்ற ஆண்டில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல. அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி ( நடிகர் வீரப்பா ).இங்கோ பெண்.ரயில் நிலையத்தில்,நூற்றுக் கணக்கானவர்கள் மத்தியில் கொலை அரங்கேறுகிறது.அவனும் சுயமோக மரணதேவிக்கு மாலையிட்டு விட்டான் என்றனர் காவலர்
       கோபம் ஒரு தூண்டல். தூண்டலுக்கு செவி சாய்த்தால் நீ அடிமை [ உன் இச்சை (drive ) உட்பட] இந்த துயர சம்பவத்தில் பெண்ணின் வாக்குமூலம் என்ன ? இவனை முன்ன பின்ன தெரியுமா ? சுயமோக, சைக்கோட் வெறியனின் வாக்குமூலம் இல்லை………….( தொடரும் )
                                                                                                                                                  க.செ

No comments:

Post a Comment