10 Jun 2015

தமிழகத்தில் எங்கே இருக்கிறது அரசியல் தளம் ?

மிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் இந்தத் தளத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
மற்றவர்கள் சுள்ளான்கள் / சுள்ளிகள்.
இந்த இரண்டு கட்சிகளுமே வலதுசாரிகள்தாம்.
ஒன்றுக்கு வலதுசாரி அதிகாரம் உண்டு;
மற்றொன்று கடைந்தெடுத்த வலதுசாரி.

தேர்தலை அங்கீகரித்து மக்கள் தீர்ப்பே “ மகேசன் தீர்ப்பு   என்பர் ( தோற்றபின் ).
உபதேர்தலில் அபச்சாரம் நடக்குமென்றால் கோவிலை இழுத்துப்பூட்டி , கழுவி, சுத்தப்படுத்திவிட்டு புண்ணியாகவசனம் / சுத்தி ஹோமம் நடத்தவேண்டியதுதானே ?
      இதில் புதுப் பூசாரி தேர்வு என்ன செய்துவிடும் ?
      3 -ம் தலைமை ஒன்று வந்துவிட்டது என்று அடையாளம் காட்டலாம்.
      அதை, உள் கட்சிக்குள் SELFI  MOVEMENT   என்று தம்பட்டம் அடிக்கலாம்.
      தாராளவாதம் “ தமிழக மீனவர்களைப் பார்த்து எல்லை தாண்டாதே ! என்று எச்சரிக்கை விடுக்கிறது.
      மீனவர்கள் கொல்லப்படுவது , சிறைப்பிடிக்கப்படுவது , பொருளாதார ரீதியாக நொடித்துப் போக வைப்பது , இவையெல்லாமே வர்த்தகப் போட்டியினால் மட்டும்தானா ?
      ஒருவேளை புலிகளின் தாகத்திற்கு பின்புலமாக இருந்தவர்கள் தமிழக மீனவர்கள் என்ற யூகநிஜத்தில்  இவைகள் நடந்தால் அது பழிவாங்கல் நடவடிக்கையாகும் .
       அதற்கு அடையாள வேலைநிறுத்தம் போதாது. 5 கோடிகளும் கரையில் நின்று தென்கிழக்கில் ஒரேநேரத்தில் உமிழ வேண்டும். அதுவே சுனாமி ஆகிவிடும் அந்தத் தீவிற்கு.
      இதற்கு அரசியல் தளம் இருக்கிறதா ?
      இதற்கே போராடித்தான் ஆகவேண்டும்.
க.செ

No comments:

Post a Comment